என்னை தொட்டவர்கள் !

31 டிசம்பர், 2011

புத்தாண்டின் கூத்துகளும் கேளிக்கைகளும்


ஜனவரி 1, ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாள்...இதிலென்ன சந்தேகம் என்று நினைக்கின்றீர்களா...? இதில்தான் ஒரு சந்தேகம். ஓர் ஆண்டிற்கு ஒருநாள்தானே முதல் நாளாக இருக்க முடியும். ஆனால் நாமோ பல நாள்களை புத்தாண்டாகக் கொண்டாடுகிறோம்.
  1. தை 1 - தமிழ்ப் புத்தாண்டு
  2. யுஹாதி - தெலுங்குப் புத்தாண்டு
  3. முஹர்ரம் 1 - ஹிஜ்ரிப் புத்தாண்டு
இப்படிப் பலப் பலப் புத்தாண்டுகள் கொண்டாடப் படுகின்றன. குறிப்பாக ஆங்கிலப் புத்தாண்டின் மூடத்தனமான வரலாறு பற்றி நாம் தெரிந்து கொள்வது மிக அவசியம்.

ஏனெனில், இந்தப் புத்தாண்டை (?) வரவேற்க உலகெங்கும் டிசம்பர் 31 ஆம் நாள் நடக்கும் கூத்துகளும் கேளிக்கைகளும் வீண் விரயங்களும் கொஞ்சம் நஞ்சமல்ல. சென்னை போன்ற கடற்கரையின் நிலைமை மிக மிக மோசம். மதுக் கடைகளிலும் பெரிய நட்சத்திர ஹோட்டல்களிலும் மதுவிருந்துடன் இரவில் புத்தாண்டை வரவேற்கின்றது ஒரு கூட்டம். மறுநாள் (அதாவது) ஜனவரி 1 காலையில் கோயில்களிலும் தேவாலயங்களிலும் அதே கூட்டத்தைப் பக்திப் பரவசத்துடன் காண முடிகிறது.

ஆண்டுதோறும் இந்தக் கூத்துகள் வாடிக்கையாகி விட்டன.  மக்களும் இதனைக் குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. எனவே இந்த ஆங்கிலப் புத்தாண்டின் வரலாற்றைக் கொஞ்சம் இங்கே அலசுவோம்!

ஜனவரி முதல் டிசம்பர் வரை உள்ள இந்த ஆங்கில ஆண்டு முறை கிறிஸ்தவ காலண்டர் அல்ல.  மாறாக இயேசுவின் பிறப்பிற்கு முன்னரே உள்ள காலண்டர் முறை ஆகும்.
இது பண்டைய ரோம, கிரேக்கர்களின் காலண்டர் முறையாகும். இந்த மாதங்களையு அதற்கான காரணங்களையும் நாம் ஆய்வு செய்தால் அது விளங்கி விடும்.
ஜனவரி : இது ‘ஜானஸ்’ என்ற ரோமக் கடவுளின் பெயர். இந்தப் பெயரை காலண்டரில் கி.மு. 700ஆம் ஆண்டு ஜூலியஸ் ஸீஸர் மன்னர்தான் சேர்த்தார்.
பிப்ரவரி : இது லத்தீன் மொழி வார்த்தை. ரோமத் திருவிழா ‘பிப்ரேரியஸ்’ இன் நினைவாக வந்த மாதம்.
மார்ச் : இதுவும் லத்தீன் வார்த்தை. ரோமக் கடவுள் ‘மார்ஸ்’ இன் பெயராலே அழைக்கப்படுகிறது.
ஏப்ரல் : லத்தீன் மொழியில் ‘ஏப்ரலிஸ்’ என்பதுதான் ஏப்ரல் என்றாகி விட்டது. இதன் பொருள் ‘திறப்பது’ என்பது ஆகும். ஆரம்பத்தில், ஆண்டின் தொடக்கம் ஏப்ரல் மாதத்தில்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த போப்பாண்டவர்தான் புத்தாண்டை ஏப்ரலிலிருந்து ஜனவரிக்கு மாற்றினார் . இதனை ஒரு சாரார் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே ஜனவரி 1ஆம் நாளைப் புத்தாண்டின் முதல் நாளாக ஏற்றுக் கொண்ட ஐரோப்பியர்கள் மற்ற ஐரோப்பியர்களைப் பார்த்து ஏப்ரல் 1ஆம் நாள் ‘முட்டாள்களின் தினம்’ என்று அழைக்கத் தொடங்கினர். (ஆகா!! என்ன ஓர் அறிவுப்பூர்வமான வரலாறு?!!) சரி, விடுங்கள்! மேலே படியுங்கள்.
மே : ‘மேயஸ்’ என்ற கிரேக்கப் பெண் கடவுளின் பெயரால் இது அழைக்கப்படுகிறது.
ஜூன் :ரோம கடவுள் ‘ஜு னோ’வின் பெயரால் இம்மாதம் அழைக்கப்படுகிறது.
ஜூலை :  மன்னர் ‘ஜூலியஸ் ஸீஸர் ’ பெயரால் அழைக்கப்படுகிறது.
ஆகஸ்ட் : மன்னர் ‘அகஸ்டிஸ் ஸீஸர் ’  பெயரால் அழைக்கப்படுகிறது.

மீதமுள்ள செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய நான்கு மாதங்களும்   7,8 ,9,10 ஆகிய லத்தீன் எண்களின் பெயரிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகளாகும். ஆக மாதங்களின் பெயர்களில் பெரும்பாலானவை கடவுளின் பெயர்கள்தாம். இது ஒரு புறமிருக்க...
இந்தக் காலண்டரின் மாதங்களின் நாள்களை முடிவு செய்ததிலும் ‘ஒரு முட்டாள்தனமான’ வரலாறு உள்ளது. 
முதலில் மாதங்களின் நாள்கள் ஜனவரி முதல் டிசம்பர் வரை 30 நாள்களும் 31 நாள்களும் மாறி மாறி வந்தன.  அதாவது ஜனவரி 31 நாள்கள், பிப்ரவரி 30 நாள்கள், மார்ச் 31 ...  இதனை ஜூலியஸ் ஸீஸர் ஏற்றுக் கொள்ளவில்லை. பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாளைப் பிடுங்கித் தம் பெயரில் உள்ள மாதத்திற்கு -  அதாவது ஜூலை மாதத்திற்குச் சேர்த்தார். அதனால் 30 நாளாக அதுவரை இருந்த ஜூலை மாதம் 31  நாளாக மாறியது. காலண்டர் மொத்தமும் மாற வேண்டியது வந்தது.
ஆகஸ்ட் 30  நாளானது  இப்படிக் கொஞ்ச காலம் போனது. பின்னர் அகஸ்டியஸ் ஸீஸரின் ஆதரவாளர்கள் ஆகஸ்ட் மாதமும் 31 நாளாக இருக்க வேண்டும் என்று கோரினர். மீண்டும் பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாள் பிடுங்கி ஆகஸ்டில் சேர்க்கப்பட்டது. ஆக இத்தனைக் குழப்பத்திற்குப் பின்னர்தான் நாம் வைத்திருக்கும் இந்தக் காலண்டர் தயாரிக்கப்பட்டது. இது ‘கிரிகோரியன்’ (Gregorian) காலண்டர் என்று அழைக்கப்படுகின்றது.

இப்படி ‘முட்டாள்தனமான’ ஒரு வரலாற்றை மூடிமறைத்து நம்மைப் பின்பற்ற வைத்துள்ள மேற்கத்தியர்களை உண்மையில் ‘அறிவாளிகள்’   என்றே சொல்ல வேண்டும்.ஆக இந்தக் காலண்டருக்கும் இயேசுவிற்கும் எவ்விதத் தொடர்புமில்லை. ஆனால் எப்பொழுது கிறிஸ்தவம் ‘ரோமன் கத்தோலிஸம்’ என்று மாறியதோ, அந்நாள் தொடங்கி, கொள்கை முதல் கலாச்சாரம் வரை அனைத்திலும் ரோம கிரேக்க அநாகரிகம் (Paganism) ஊடுருவி விட்டது. கிறிஸ்தவர்களும் இதனைப் பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. 
ஆனால்...
‘ஏகத்துவம்’ என்பதை முழு மூச்சாகக் கொண்டு முழங்கி வரும் முஸ்லிம்களும் இதற்குத் துணை போவது வருத்தத்திற்குரியது!
மேலே சொன்ன கோளாறு முறைக்கு மாற்றமான ஆனால் எவ்விதக் குறைவுமில்லாத ஒரு மாதத்தையும் ஆண்டையும் தீர்மானிக்கும் செயல்திட்டம் நம்மிடமுள்ளது. ஆனால் நம்மில் பலருக்கு இப்போது ஹிஜ்ரி எந்த மாதம், எத்தனையாவது நாள் என்று தெரிவதில்லை.  இஸ்லாமிய இயக்கங்களும் தங்களின் செயல் திட்டங்களை 2010 - 11 என்றுதான் கூறுகின்றன. ஹிஜ்ரி 1432 - 33 என்று சொல்வதில்லை. ரோம, கிரேக்க சிலைகளின் பெயர்களைக் கொண்ட மாதங்களைத் தெரிந்து வைத்திருக்கின்ற அளவு இஸ்லாமிய மாதங்களை நம் குழந்தைகள் தெரிந்து கொள்வதில்லை.  திருமணம் முதற்கொண்டு வாழ்வின் அனைத்து நிகழ்வுகளிலும் இந்த கிரிகோரியன் மாதங்களைத்தான் முன்னிறுத்துகிறோம். இந்நிலை மாற வேண்டும். நம் அன்றாட வாழ்வியலில் தொடர்புடைய அனைத்து நிகழ்வுகளும், அரசின் தொடர்புடைய காரணத்தால் இந்த ஆங்கிலக் காலண்டரின் அடிப்படையில் நடைபெறலாம்;  ஆனால் வீட்டில் குறைந்த பட்சம் ஹிஜ்ரி காலண்டர் ஒன்று இருப்பது அவசியம்.
இப்பொழுது நமக்கு ஓர் ஐயம் ஏற்படலாம்: 'ஹிஜ்ரியின் அடிப்படையில் காலண்டரா? இது சாத்தியமா?'
15ஆம் நூற்றாண்டு வரை உலகில் வாழ்ந்த முஸ்லிம்கள் ஹிஜ்ரிக் காலண்டரைத்தான் பின்பற்றி வாழ்ந்தார்கள். எப்பொழுது ஆங்கிலேயர்கள் கிரேக்கக் காலண்டரை உலக மக்கள் மீது திணித்தார்களோ அப்போது தொடங்கி, முஸ்லிம்கள் ஹிஜ்ரி காலண்டரை மறந்து விட்டார்கள். 1432ஆம் ஆண்டிற்காண ஹிஜ்ரி காலண்டர் தமிழிலே உள்ளது.

இறுதியாக...
இந்த வரலாறு பரவலாக பொதுமக்களிடையே  தெரிய வரவேண்டும் .  
இதன் மூலம் புத்தாண்டின் அநாகரிகமான கலாச்சாரச் சீர்கேடுகளைத் தவிர்க்க முடியும். முஸ்லிம்கள் அதற்கு முன்முயற்சி எடுக்க வேண்டும். அறிவுப்பூர்வமான இஸ்லாமியச் செயல்திட்டங்களை வாழ்வில் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.
- சமரசம்- ஜன 1-15- 2011
Posted by idealvision.info

27 டிசம்பர், 2011

அப்படிப் போடு!

"ஹசாரே ஒரு ஆர்.எஸ்.எஸ். ஏஜண்ட். கடந்த 1965ம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிகழ்ந்த பின், தலைமறைவான படைவீரர்களில் அவரும் ஒருவர். காங்கிரசையும், ராகுலையும் விமர்சிக்கும் ஹசாரே, பாஜக‌ மற்றும் அந்தக் கட்சியின் தலைவர்களுக்கு எதிராக வாய் திறக்காதது ஏன்?" (மத்திய அமைச்சர் பெனி பிரசாத் வர்மா)

4 டிசம்பர், 2011

பாராசிட்டமால் மாத்திரை!

பாராசிட்டமால் மாத்திரைகளையோ, சிரப் களையோ தொடர்ந்து உபயோகிப்பவர்களுக்கு  லிவர் மற்றும் கிட்னி தொடர்பான பிரச்சினைகள் வர வாய்ப்பிருப்பதாக சமீபத்திய மருத்துவ ஆய்வறிக்கைகள் எச்சரிக்கின்றன.
இனி மேல் பாராசிட்டமால் (அசிட்டமி னோபென்) மருந்துகளை தயாரிப்பவர்கள்  தங்களது நுகர்வோர்களுக்கு இந்த மருந்தை உட்கொள்வதால் லிவர் ,கிட்னி டேமேஜ் மற்றும் அலர்ஜியினால் உண்டாகும் பக்க விளைவுகள் ஏற்படும் என்று ஒவ்வொரு மருந்து பாட்டில் ரேப்பர்கள் மற்றும் மாத்திரைப் பட்டைகளில் எச்சரிக்கை வெளியிட வேண்டும் என அறிவுறுத் தப்பட்டுள்ளது.

டாக்டர்கள் பரிந்துரைக்கும் பிரஸ்க்ரிப்சன் களை பேசன்டுகள் பெரும்பாலும் சரியாகப் புரிந்து கொள்வதே இல்லை.காய்ச்சல் என்று வரும் கைக்குழந்தைகளுக்கு டாக்டர்கள் 5 னீறீ   பாராசிட்டமால் சிரப்(டானிக்) பரிந்துரைத்தால்  குழந்      தையின் பெற்றோர்களில் சிலர் போதிய விஷய ஞானம் அற்று தவறுதலாக 5 னீறீ  அளவுக்கு  பாராசிட்டமால் ட்ராப்ஸ் (சொட்டு மருந்து)  கொடுத்து விடுகிறார்கள். சிரப்பை விட இந்த ட்ராப்ஸ்கள் அதிக செறிவானவை. இத்தனை செறிவான மருந்தை உட்கொள்வதால் குழந் தைக்கு அலர்ஜியாகி பக்க விளைவுகள் ஏற்பட்டு மறுபடியும் மருத்துவரை நாடும் நிலை ஏற்பட்டு விடுகிறது. மேலும் இப்படியே தொடர்ந்து மருந்துகளைக் கொடுத்து வந்தால் கடைசியாக அது கடுமையான ரீனல் டிஸ்ஆர்டர்களில் கொண்டு விடுகிறது. பெரும்பான்மையான லிவர் மற்றும் கிட்னி டேமேஜ்கள் ஏற்பட இப்படியான கவனக்குறைவே முதலும் முக்கியமுமான  காரணமாகி விடுகிறது.

இவை தவிர லேசான காய்ச்சலுக்கும் கூட டெம்பரேச்சர் சோதித்துப் பார்க்காமல் டாக்டர்கள் கடுமையான காய்ச்சலுக்குப் பரிந்துரைத்த அதே அளவு பாராசிட்டமால் மருந்தை உட்கொள்வ தாலும் மேற்சொன்ன விளைவுகள் ஏற்படலாம். பெயின் கில்லர்கள் எடுத்துக் கொள்பவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் தங்களது கிட்னி ஆரோக்யமாக இருக்கிறதா எனத் தொடர்ந்து பரிசோதிக்கத் தவறக்கூடாது. ஏனெனில் இன்றைய நிலையில் சிறுநீரக பாதிப்பு என்று வரும் நோயாளிகளில் 8 முதல் 10 சதவிகிதம் பேர்களுக்கு கடுமையான பாதிப்புகளுக்கு தொடர்ந்து  பாராசிட்டமால் மருந்துகள் எடுத்துக் கொள்வதே காரணங்களாக இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.