என்னை தொட்டவர்கள் !

31 டிசம்பர், 2011

புத்தாண்டின் கூத்துகளும் கேளிக்கைகளும்


ஜனவரி 1, ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாள்...இதிலென்ன சந்தேகம் என்று நினைக்கின்றீர்களா...? இதில்தான் ஒரு சந்தேகம். ஓர் ஆண்டிற்கு ஒருநாள்தானே முதல் நாளாக இருக்க முடியும். ஆனால் நாமோ பல நாள்களை புத்தாண்டாகக் கொண்டாடுகிறோம்.
  1. தை 1 - தமிழ்ப் புத்தாண்டு
  2. யுஹாதி - தெலுங்குப் புத்தாண்டு
  3. முஹர்ரம் 1 - ஹிஜ்ரிப் புத்தாண்டு
இப்படிப் பலப் பலப் புத்தாண்டுகள் கொண்டாடப் படுகின்றன. குறிப்பாக ஆங்கிலப் புத்தாண்டின் மூடத்தனமான வரலாறு பற்றி நாம் தெரிந்து கொள்வது மிக அவசியம்.

ஏனெனில், இந்தப் புத்தாண்டை (?) வரவேற்க உலகெங்கும் டிசம்பர் 31 ஆம் நாள் நடக்கும் கூத்துகளும் கேளிக்கைகளும் வீண் விரயங்களும் கொஞ்சம் நஞ்சமல்ல. சென்னை போன்ற கடற்கரையின் நிலைமை மிக மிக மோசம். மதுக் கடைகளிலும் பெரிய நட்சத்திர ஹோட்டல்களிலும் மதுவிருந்துடன் இரவில் புத்தாண்டை வரவேற்கின்றது ஒரு கூட்டம். மறுநாள் (அதாவது) ஜனவரி 1 காலையில் கோயில்களிலும் தேவாலயங்களிலும் அதே கூட்டத்தைப் பக்திப் பரவசத்துடன் காண முடிகிறது.

ஆண்டுதோறும் இந்தக் கூத்துகள் வாடிக்கையாகி விட்டன.  மக்களும் இதனைக் குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. எனவே இந்த ஆங்கிலப் புத்தாண்டின் வரலாற்றைக் கொஞ்சம் இங்கே அலசுவோம்!

ஜனவரி முதல் டிசம்பர் வரை உள்ள இந்த ஆங்கில ஆண்டு முறை கிறிஸ்தவ காலண்டர் அல்ல.  மாறாக இயேசுவின் பிறப்பிற்கு முன்னரே உள்ள காலண்டர் முறை ஆகும்.
இது பண்டைய ரோம, கிரேக்கர்களின் காலண்டர் முறையாகும். இந்த மாதங்களையு அதற்கான காரணங்களையும் நாம் ஆய்வு செய்தால் அது விளங்கி விடும்.
ஜனவரி : இது ‘ஜானஸ்’ என்ற ரோமக் கடவுளின் பெயர். இந்தப் பெயரை காலண்டரில் கி.மு. 700ஆம் ஆண்டு ஜூலியஸ் ஸீஸர் மன்னர்தான் சேர்த்தார்.
பிப்ரவரி : இது லத்தீன் மொழி வார்த்தை. ரோமத் திருவிழா ‘பிப்ரேரியஸ்’ இன் நினைவாக வந்த மாதம்.
மார்ச் : இதுவும் லத்தீன் வார்த்தை. ரோமக் கடவுள் ‘மார்ஸ்’ இன் பெயராலே அழைக்கப்படுகிறது.
ஏப்ரல் : லத்தீன் மொழியில் ‘ஏப்ரலிஸ்’ என்பதுதான் ஏப்ரல் என்றாகி விட்டது. இதன் பொருள் ‘திறப்பது’ என்பது ஆகும். ஆரம்பத்தில், ஆண்டின் தொடக்கம் ஏப்ரல் மாதத்தில்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த போப்பாண்டவர்தான் புத்தாண்டை ஏப்ரலிலிருந்து ஜனவரிக்கு மாற்றினார் . இதனை ஒரு சாரார் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே ஜனவரி 1ஆம் நாளைப் புத்தாண்டின் முதல் நாளாக ஏற்றுக் கொண்ட ஐரோப்பியர்கள் மற்ற ஐரோப்பியர்களைப் பார்த்து ஏப்ரல் 1ஆம் நாள் ‘முட்டாள்களின் தினம்’ என்று அழைக்கத் தொடங்கினர். (ஆகா!! என்ன ஓர் அறிவுப்பூர்வமான வரலாறு?!!) சரி, விடுங்கள்! மேலே படியுங்கள்.
மே : ‘மேயஸ்’ என்ற கிரேக்கப் பெண் கடவுளின் பெயரால் இது அழைக்கப்படுகிறது.
ஜூன் :ரோம கடவுள் ‘ஜு னோ’வின் பெயரால் இம்மாதம் அழைக்கப்படுகிறது.
ஜூலை :  மன்னர் ‘ஜூலியஸ் ஸீஸர் ’ பெயரால் அழைக்கப்படுகிறது.
ஆகஸ்ட் : மன்னர் ‘அகஸ்டிஸ் ஸீஸர் ’  பெயரால் அழைக்கப்படுகிறது.

மீதமுள்ள செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய நான்கு மாதங்களும்   7,8 ,9,10 ஆகிய லத்தீன் எண்களின் பெயரிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகளாகும். ஆக மாதங்களின் பெயர்களில் பெரும்பாலானவை கடவுளின் பெயர்கள்தாம். இது ஒரு புறமிருக்க...
இந்தக் காலண்டரின் மாதங்களின் நாள்களை முடிவு செய்ததிலும் ‘ஒரு முட்டாள்தனமான’ வரலாறு உள்ளது. 
முதலில் மாதங்களின் நாள்கள் ஜனவரி முதல் டிசம்பர் வரை 30 நாள்களும் 31 நாள்களும் மாறி மாறி வந்தன.  அதாவது ஜனவரி 31 நாள்கள், பிப்ரவரி 30 நாள்கள், மார்ச் 31 ...  இதனை ஜூலியஸ் ஸீஸர் ஏற்றுக் கொள்ளவில்லை. பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாளைப் பிடுங்கித் தம் பெயரில் உள்ள மாதத்திற்கு -  அதாவது ஜூலை மாதத்திற்குச் சேர்த்தார். அதனால் 30 நாளாக அதுவரை இருந்த ஜூலை மாதம் 31  நாளாக மாறியது. காலண்டர் மொத்தமும் மாற வேண்டியது வந்தது.
ஆகஸ்ட் 30  நாளானது  இப்படிக் கொஞ்ச காலம் போனது. பின்னர் அகஸ்டியஸ் ஸீஸரின் ஆதரவாளர்கள் ஆகஸ்ட் மாதமும் 31 நாளாக இருக்க வேண்டும் என்று கோரினர். மீண்டும் பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாள் பிடுங்கி ஆகஸ்டில் சேர்க்கப்பட்டது. ஆக இத்தனைக் குழப்பத்திற்குப் பின்னர்தான் நாம் வைத்திருக்கும் இந்தக் காலண்டர் தயாரிக்கப்பட்டது. இது ‘கிரிகோரியன்’ (Gregorian) காலண்டர் என்று அழைக்கப்படுகின்றது.

இப்படி ‘முட்டாள்தனமான’ ஒரு வரலாற்றை மூடிமறைத்து நம்மைப் பின்பற்ற வைத்துள்ள மேற்கத்தியர்களை உண்மையில் ‘அறிவாளிகள்’   என்றே சொல்ல வேண்டும்.ஆக இந்தக் காலண்டருக்கும் இயேசுவிற்கும் எவ்விதத் தொடர்புமில்லை. ஆனால் எப்பொழுது கிறிஸ்தவம் ‘ரோமன் கத்தோலிஸம்’ என்று மாறியதோ, அந்நாள் தொடங்கி, கொள்கை முதல் கலாச்சாரம் வரை அனைத்திலும் ரோம கிரேக்க அநாகரிகம் (Paganism) ஊடுருவி விட்டது. கிறிஸ்தவர்களும் இதனைப் பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. 
ஆனால்...
‘ஏகத்துவம்’ என்பதை முழு மூச்சாகக் கொண்டு முழங்கி வரும் முஸ்லிம்களும் இதற்குத் துணை போவது வருத்தத்திற்குரியது!
மேலே சொன்ன கோளாறு முறைக்கு மாற்றமான ஆனால் எவ்விதக் குறைவுமில்லாத ஒரு மாதத்தையும் ஆண்டையும் தீர்மானிக்கும் செயல்திட்டம் நம்மிடமுள்ளது. ஆனால் நம்மில் பலருக்கு இப்போது ஹிஜ்ரி எந்த மாதம், எத்தனையாவது நாள் என்று தெரிவதில்லை.  இஸ்லாமிய இயக்கங்களும் தங்களின் செயல் திட்டங்களை 2010 - 11 என்றுதான் கூறுகின்றன. ஹிஜ்ரி 1432 - 33 என்று சொல்வதில்லை. ரோம, கிரேக்க சிலைகளின் பெயர்களைக் கொண்ட மாதங்களைத் தெரிந்து வைத்திருக்கின்ற அளவு இஸ்லாமிய மாதங்களை நம் குழந்தைகள் தெரிந்து கொள்வதில்லை.  திருமணம் முதற்கொண்டு வாழ்வின் அனைத்து நிகழ்வுகளிலும் இந்த கிரிகோரியன் மாதங்களைத்தான் முன்னிறுத்துகிறோம். இந்நிலை மாற வேண்டும். நம் அன்றாட வாழ்வியலில் தொடர்புடைய அனைத்து நிகழ்வுகளும், அரசின் தொடர்புடைய காரணத்தால் இந்த ஆங்கிலக் காலண்டரின் அடிப்படையில் நடைபெறலாம்;  ஆனால் வீட்டில் குறைந்த பட்சம் ஹிஜ்ரி காலண்டர் ஒன்று இருப்பது அவசியம்.
இப்பொழுது நமக்கு ஓர் ஐயம் ஏற்படலாம்: 'ஹிஜ்ரியின் அடிப்படையில் காலண்டரா? இது சாத்தியமா?'
15ஆம் நூற்றாண்டு வரை உலகில் வாழ்ந்த முஸ்லிம்கள் ஹிஜ்ரிக் காலண்டரைத்தான் பின்பற்றி வாழ்ந்தார்கள். எப்பொழுது ஆங்கிலேயர்கள் கிரேக்கக் காலண்டரை உலக மக்கள் மீது திணித்தார்களோ அப்போது தொடங்கி, முஸ்லிம்கள் ஹிஜ்ரி காலண்டரை மறந்து விட்டார்கள். 1432ஆம் ஆண்டிற்காண ஹிஜ்ரி காலண்டர் தமிழிலே உள்ளது.

இறுதியாக...
இந்த வரலாறு பரவலாக பொதுமக்களிடையே  தெரிய வரவேண்டும் .  
இதன் மூலம் புத்தாண்டின் அநாகரிகமான கலாச்சாரச் சீர்கேடுகளைத் தவிர்க்க முடியும். முஸ்லிம்கள் அதற்கு முன்முயற்சி எடுக்க வேண்டும். அறிவுப்பூர்வமான இஸ்லாமியச் செயல்திட்டங்களை வாழ்வில் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.
- சமரசம்- ஜன 1-15- 2011
Posted by idealvision.info

27 டிசம்பர், 2011

அப்படிப் போடு!

"ஹசாரே ஒரு ஆர்.எஸ்.எஸ். ஏஜண்ட். கடந்த 1965ம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிகழ்ந்த பின், தலைமறைவான படைவீரர்களில் அவரும் ஒருவர். காங்கிரசையும், ராகுலையும் விமர்சிக்கும் ஹசாரே, பாஜக‌ மற்றும் அந்தக் கட்சியின் தலைவர்களுக்கு எதிராக வாய் திறக்காதது ஏன்?" (மத்திய அமைச்சர் பெனி பிரசாத் வர்மா)

4 டிசம்பர், 2011

பாராசிட்டமால் மாத்திரை!

பாராசிட்டமால் மாத்திரைகளையோ, சிரப் களையோ தொடர்ந்து உபயோகிப்பவர்களுக்கு  லிவர் மற்றும் கிட்னி தொடர்பான பிரச்சினைகள் வர வாய்ப்பிருப்பதாக சமீபத்திய மருத்துவ ஆய்வறிக்கைகள் எச்சரிக்கின்றன.
இனி மேல் பாராசிட்டமால் (அசிட்டமி னோபென்) மருந்துகளை தயாரிப்பவர்கள்  தங்களது நுகர்வோர்களுக்கு இந்த மருந்தை உட்கொள்வதால் லிவர் ,கிட்னி டேமேஜ் மற்றும் அலர்ஜியினால் உண்டாகும் பக்க விளைவுகள் ஏற்படும் என்று ஒவ்வொரு மருந்து பாட்டில் ரேப்பர்கள் மற்றும் மாத்திரைப் பட்டைகளில் எச்சரிக்கை வெளியிட வேண்டும் என அறிவுறுத் தப்பட்டுள்ளது.

டாக்டர்கள் பரிந்துரைக்கும் பிரஸ்க்ரிப்சன் களை பேசன்டுகள் பெரும்பாலும் சரியாகப் புரிந்து கொள்வதே இல்லை.காய்ச்சல் என்று வரும் கைக்குழந்தைகளுக்கு டாக்டர்கள் 5 னீறீ   பாராசிட்டமால் சிரப்(டானிக்) பரிந்துரைத்தால்  குழந்      தையின் பெற்றோர்களில் சிலர் போதிய விஷய ஞானம் அற்று தவறுதலாக 5 னீறீ  அளவுக்கு  பாராசிட்டமால் ட்ராப்ஸ் (சொட்டு மருந்து)  கொடுத்து விடுகிறார்கள். சிரப்பை விட இந்த ட்ராப்ஸ்கள் அதிக செறிவானவை. இத்தனை செறிவான மருந்தை உட்கொள்வதால் குழந் தைக்கு அலர்ஜியாகி பக்க விளைவுகள் ஏற்பட்டு மறுபடியும் மருத்துவரை நாடும் நிலை ஏற்பட்டு விடுகிறது. மேலும் இப்படியே தொடர்ந்து மருந்துகளைக் கொடுத்து வந்தால் கடைசியாக அது கடுமையான ரீனல் டிஸ்ஆர்டர்களில் கொண்டு விடுகிறது. பெரும்பான்மையான லிவர் மற்றும் கிட்னி டேமேஜ்கள் ஏற்பட இப்படியான கவனக்குறைவே முதலும் முக்கியமுமான  காரணமாகி விடுகிறது.

இவை தவிர லேசான காய்ச்சலுக்கும் கூட டெம்பரேச்சர் சோதித்துப் பார்க்காமல் டாக்டர்கள் கடுமையான காய்ச்சலுக்குப் பரிந்துரைத்த அதே அளவு பாராசிட்டமால் மருந்தை உட்கொள்வ தாலும் மேற்சொன்ன விளைவுகள் ஏற்படலாம். பெயின் கில்லர்கள் எடுத்துக் கொள்பவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் தங்களது கிட்னி ஆரோக்யமாக இருக்கிறதா எனத் தொடர்ந்து பரிசோதிக்கத் தவறக்கூடாது. ஏனெனில் இன்றைய நிலையில் சிறுநீரக பாதிப்பு என்று வரும் நோயாளிகளில் 8 முதல் 10 சதவிகிதம் பேர்களுக்கு கடுமையான பாதிப்புகளுக்கு தொடர்ந்து  பாராசிட்டமால் மருந்துகள் எடுத்துக் கொள்வதே காரணங்களாக இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

27 நவம்பர், 2011

இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா…


வயதானாலும் இளமையாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களா நீங்கள்?. அப்படியெனில் எதையுமே நேர்மறையாக எண்ணுங்கள் என்கின்றனர் வல்லுநர்கள். சத்தான உணவை உண்டு, சந்தோசமாக இருந்தால் என்றைக்கும் இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கலாம் என்பது உணவியல் வல்லுநர்களின் அறிவுரை
நோயற்ற வாழ்வு
புகை, மது ஆகியவற்றை அறவே தவிர்க்க கூறும் வல்லுநர்கள் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியம் என்கின்றனர் வல்லுநர்கள். அதோடு சரிவிகித உணவை உட்கொண்டால் நோயற்ற வாழ்வை வாழலாம் என்கின்றனர் உணவியலாளார்கள் அவர்கள் கூறும் ஆரோக்கிய டிப்ஸ் உங்களுக்காக:
கால்சியம் சத்து
வயதாக வயதாக அதிகம் பாதிக்கப்படுவது எலும்புகளும், பற்களும்தான். கால்சியப் பற்றாக்குறையினால் லேசாக தடுக்கி விழுந்தாலே எலும்புகள் பாதிக்கப்படுகின்றன. எனவே நாம் உண்ணும் உணவில் கால்சியம் சத்துள்ள உணவை அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பால் பொருட்கள், சீஸ், வெண்ணெ ஆகியவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
புரதச்சத்துள்ள சோயாபீஸ்சை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது தசைகளின் வளர்ச்சிக்கு உதவும். நாம் உண்ணும் உணவில் சரிவிகிதமாக புரதச்சத்து உள்ள பயறுவகைகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
கண்களுக்கு கவனம்

கண்களை கவனமாக பார்த்துக்கொள்ள வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்த உணவுகளை சாலட் களாக செய்து உட்கொள்ள வேண்டும். இதனால் கண்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் என்பது வல்லுநர்களின் அறிவுரை.
பாப்கார்ன் கொறிப்பது இதயத்திற்கு இதமானது என்கின்றனர். மக்காச்சோளத்தில் செய்யப்படும் பாப்கார்ன், பயறுவகை உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பது உணவியலாளர்கள்
நேர்மறை எண்ணங்கள்
இந்த உணவுகளை அரைத்து சத்துக்களை ஒவ்வொரு பகுதிக்கும் அனுப்ப தண்ணீரை அவசியம் அருந்த வேண்டும் என்கின்றனர் உணவியலாளர்கள். தவிர நம்மிடம் தோன்றும் நேர்மறை எண்ணங்கள் நமக்கு எந்த வித நோயும் தாக்காமல் உடல் நலத்தை காக்கும் என்றும் உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். என்ன அவர்கள் கூறியது சரிதானே. எந்த விசயத்தையுமே நெகடிவாக பார்க்காமல் பொஸிட்டிவாக பாருங்கள் ஆரோக்கியமாக வாழுங்கள்

தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம்


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது முன்னோர் வாக்கு. 
கோடி கோடியாய் பணம் வைத்திருந்தாலும் அவற்றை அனுபவிக்க நோயில்லாத உடல் வேண்டும். எனவேதான் நோய்கள் வராமல் உடலை காத்துக்கொள்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். நடைபயிற்சி மேற்கொள்பவர்களை நோய்கள் எளிதில் தாக்குவதில்லை என்றும் கூறுகின்றனர்.

தினமும் தவறாமல் நடை பயிற்சி மேற்கொண்டால் எடை குறையும், தசை வலுவடையும், இதயநோய்கள் எட்டிப்பார்க்காது, நீரிழிவு நோய் கட்டுப்படும். ரத்த அழுத்தம் சீராகும், முதுகுவலி ஏற்படாது என்கின்றனர் மருத்துவர்கள்.
கைகளை வீசி நடவுங்கள்
காலை 6 மணிக்கு முன் நடப்பது மிகவும் நல்லது. முடியாதவர்கள் மாலையில் நடக்கலாம். நடக்கும் போது கைகளை வீசி நடக்கவேண்டும். குறைந்த பட்சம் இரண்டு கிலோமீட்டராவது நடந்த பின்னர் 5 நிமிடம் ஓய்வெடுக்க வேண்டும். பிறகு கைகளை பத்துமுறை நீட்டி மடக்க வேண்டும். பின்னர் இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு காலை வேலைகளை பார்க்கலாம்.
உடல் எடை குறையும்
உடல் எடை அதிகரிப்பு என்பது இன்றைய கால கட்டத்தில் சாதரண ஒன்றாகிவிட்டது. சரியான உடல் உழைப்பு இல்லாதது. இன்றைய இளைய தலைமுறையினர் அமர்ந்த இடத்திலேயே வேலை பார்ப்பதால் உண்ணும் உணவு ஆங்காங்கே தங்கிவிடுகிறது. இதனால் உடல் எடை கூடுகிறது. இவர்கள் தினமும் அரைமணி நேரம் நடை பயிற்சி மேற்கொண்டால் உடல் எடை கட்டுக்குள் வரும். எனெனில் உடல் எடைதான் எண்ணற்ற நோய்களின் பிறப்பிடமாக உள்ளது.
புத்துணர்ச்சி அடையும்
எடை அதிகரிப்பினால் ஆங்காங்கே தசைகள் லூசாகி உடல் அமைப்பு சரியான வடிவமின்றி காணப்படும். இவர்கள் நடை பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடலில் உள்ள லூசான தசைகள் வலுவடையும்.காலையில் மேற்கொள்ளும் நடை பயிற்சியினால் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி அடைகிறது.
நீரிழிவு கட்டுப்படும்
தினசரி காலை, மாலை இருவேளை 45 நிமிடம் நடை பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு நீரிழிவு நோய் கட்டுப்பாட்டிற்குள் வந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே நீரிழிவு நேயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக நடை பயிற்சி மேற்கொள்ளவேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.
கொழுப்பு குறையும்
நடைபயிற்சியின் மூலம் உடலில் தேவையற்ற இடங்களில் சேர்ந்துள்ள கொழுப்பு குறைகிறது. ரத்த நாளங்களில் கொழுப்பு குறைவதால் ரத்த ஓட்டம் சீராகிறது. இதனால் இதயநோய் பாதிப்பு குறைகிறது. ரத்த அழுத்த நோய் கட்டுப்படும்.
முதுகு வலி எட்டிப்பார்க்காது
ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டே வேலை பார்ப்பதால் ஒரு சிலர் முதுகு வலி கழுத்துவலியினால் பாதிக்கப்படுவர். அவர்களுக்கு நடைபயிற்சி சிறந்த தீர்வாகும். காலை நேரத்தில் மேற்கொள்ளும் நடைபயிற்சி முதுகுவலியை தூர விரட்டும்.
குழந்தை பேறு கிடைக்கும்
நடை பயிற்சியினால் தீராத சிக்கல்களுக்கும் கூட தீர்வு கிடைத்திருக்கிறது. குழந்தையில்லாத தம்பதியர் கூட சீரான நடைபயிற்சி மேற்கொண்டதன் மூலம் குழந்தை பேறு பெற்றதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

23 நவம்பர், 2011

முஸ்லிம் பெண்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்:மாவட்ட ஆட்சியர் சகாயம்!


சிறுபான்மையின மக்களுக்காக அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இதை பயன்படுத்தி முஸ்லிம் பெண்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று கலெக்டர் சகாயம் கூறினார். 

மதுரை ஓ.சி.பி.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறுபான்மையினர் தினவிழா நடைபெற்றது. விழாவில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்&2 வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற 12 மாணவ, மாணவிகளுக்கு ரூ.15,500 மதிப்பிலான காசோலைகள், உலமாக்கள் நலவாரிய உறுப்பினர் மகள்கள் 12 பேருக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.17ஆயிரம், திருமண உதவித்தொகை 2 பேருக்கு ரூ.4ஆயிரம், சமூக நலத்துறையின் மூலம் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 5 பேருக்கு ரூ.1.52 லட்சம் என மொத்தம் ரூ.1.88 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உ.சகாயம் வழங்கினார் அப்போது அவர் பேசியதாவது:&

சிறுபான்மையின மக்களுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மதுரை மாவட்டத்தில் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 2011& 2012ம் கல்வியாண்டில் 1முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகைக்காக 7,995 பேர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பிளஸ்&1 முதல் பட்டயப்படிப்பு மற்றும் தொழில் கல்வி மாணவ, மாணவிகளுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகைக்காக 1,771 பேரிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது.
தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் சிறுபான்மையினர் மகளிருக்கு தனிநபர் கடனாக 85 பேருக்கு விண்ணப்பங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. முஸ்லிம் மகளிர் உதவி சங்கங்கள் மூலம் ஆதரவற்ற முஸ்லிம் மகளிர் மற்றும் விதவை பெண்களுக்கு உதவித்தொகை, தொழிற்கடன், கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
உலமாக்கள் நல வாரியம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. பிரதமரின் புதிய 15 அம்ச திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் நலிவுற்ற சிறுபான்மையினரை உயர்த்த பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
இதுபோன்ற வாய்ப்புகளை சிறுபான்மையின மாணவ, மாணவிகள் பயன்படுத்துவதுடன் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு தேர்ச்சி பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும். முஸ்லிம் பெண்கள் கல்வியறிவில் சிறந்து விளங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் காமாட்சி கணேசன், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி சி.செல்வராஜ், ஐக்கிய ஜமாத் தலைவர் அஜிமுதின், அருட்தந்தை தாசைய்யன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

நெல்லிக்காய் தரும் இளமை:


இதில் முதலாவதான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிகிச்சை காயகற்பம் என அழைக்கப்படுகிறது. காயம் என்றால் உடல். கற்பம் என்றால் அழிவில்லாதது. நரை, திரை, மூப்பு அணுகாமல் என்றும் நோயணுகாமல் இளமையாக வைத்திருக்க உதவும் மூலிகைகளை காயகற்ப மூலிகை என்கிறோம். காயகற்ப மூலிகைகளில் மிக முக்கியமான இடத்தை பிடிப்பது நெல்லிக்காய்.
* நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது.
* நெல்லிக்காயில் வைட்டமின் “சி” வேறு எந்த வகை காய்கறி பழங்களிலும் இல்லாத அளவுக்கு 600 மில்லிகிராம் உள்ளது. கால்சியம் 50 மில்லிகிராம், பாஸ்பரஸ் – 20 மில்லிகிராம், இரும்புச் சத்து 1.2 மில்லிகிராம் உள்ளது. ஆப்பிள் பழத்தை விட இது அதிக சக்தி வாய்ந்தது.
* நெல்லிக்காய் ஈரலை தூண்டி, நன்கு செயல்பட வைத்து கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. ஜீரண சக்தியை அதிகரித்து, தாதுக்களை நம் உடல் ஏற்றுக் கொள்ள துணை புரிகிறது. கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது. தலைமுடி உதிராமல், வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது.
* நரம்பு மண்டலத்தை தூண்டி வேலை செய்கிறது. மூளை செல்களுக்கு புத்துணர்ச்சியளிப்பதால், மனத்தெளிவு, புத்திக்கூர்மை மற்றும் ஞாபசக்தி உண்டாகிறது. நுரையீரலை பலப்படுத்தி சுவாச நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது.
* உடல் எடையை கூட்டாமல் தசைகளுக்கு பலம் அளிக்கக் கூடிய தன்மை நெல்லிக்காய்க்கு உண்டு. நீரிழிவை கட்டுப்படுத்தும் சக்தியுள்ளது. மேலும் இதில் வைட்டமின் “சி” சத்து அதிகம் உள்ளதால் நோய்க்கு எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது.
* நெல்லிக்காய் கிடைக்காத காலங்களில் காய்ந்த நெல்லிக்காயை (நெல்லிமுள்ளி) பயன்படுத்தலாம். இதற்குரிய சக்தி காய்ந்த பின்னும் குறைவதில்லை.
எல்லா வயதினரும் இதை சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு நெல்லிக்காய் லேகியம் தினம் கொடுக்க சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதுடன், மூளை வளர்ச்சியும், புத்திக் கூர்மையும் ஏற்படும். ஆயுர்வேத சக்தி மருந்து நெல்லிக்காயால் தான் தயார் செய்யப்படுகிறது.

சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்


உலகின் மிகச் சிறந்த உணவாக சீன உணவே போற்றப்படுகிறது.இந்த உணவு முறையைப் பின்பற்றினால் நீண்ட நாள் வாழலாம். குறிப்பாக
1.கொழுத்த சரீரம் உருவாகாது.
2. இதய நோய்களுக்கான அறிகுறியே காணப்படாது.
இந்த இரண்டு தன்மைகளும் ஒருவரிடம் தொடர்ந்து இருந்தால் அவர் ஆரோக்கியமாக வாழலாம். ஆரோக்கியம் தொடர்வதால் வாழ்நாளும் நீடிக்கிறது. பிறநோய்கள் இருந்தாலும் எளிதில் அவற்றைக் குணப்படுத்தலாம்.
ஹாங்காங்கின் சீனப்பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் ஊகாம்ஸாங் என்பவர் தனது ஆய்வின் மூலம் இந்த உண்மையைக் கண்டுபிடித்துள்ளார்.
சரி. சீனர்கள் அப்படி என்னதான் சாப்பிடுகிறார்கள்?
பால் சேர்க்காத கிரீன் டீ யை நாலைந்து தடவை தினமும் அருந்துகின்றனர். நீராவியில் வேகவைத்த காய்கறிகள் மற்றும் சில நேரங்களில் காய்கறிகளை சிறிய அளவில் எண்ணெயில் வறுத்தும் சாப்பிடுகின்றனர்.
சோயா பீன்ஸ், தயிரையும் நிறையச் சேர்த்துக் கொள்கின்றனர்.
காலையில் முட்டை ஆம்லட் அல்லது கொத்துக்கறி சேர்த்துக் கொள்கின்றனர்.
இதில், இஞ்சி, வெள்ளைப் பூண்டு உட்பட மசாலா வகைகள் சேர்த்துவிடுகின்றனர்.
இதுவே காலை நேரத்திற்கும் பகல் உணவிற்கும் எற்ற ஒரே உணவாகும்.
மற்ற நேரமெல்லாம் நீராவியில் வேகவைத்த காய்கறிகளுடன் சோயா மற்றும தயிர் சேர்த்த சாதம் ஒரு முறையும், பச்சையான காய்கறிகளை ஒரு முறையும் சாப்பிடுகின்றனர்.
இவர்கள் அடிக்கடி விரும்பியும் போற்றியும் குடிப்பது கிரீன் டீதான். இது முதுமை அடைவதை தடுக்கும் தேநீர். மேலும் இந்தத் தேநீரில் இளமையை நீடிப்பதுடன் இதயத்துக்குப் பாதுகாப்பையும் வழங்கும் பாலிபெனால் என்ற சத்துப் பொருள் இருக்கிறது.
கிரீன் டீக்கும் நீராவியில் வேகவைத்த காய்கறிகளுக்கும் நீங்களும் முக்கியத்துவம் கொடுங்கள்.
உலகின் மிகச்சிறந்த இந்த உணவால் ஆரோக்கியம் தொடர்வது உறுதி.
உலக சுகாதார நிறுவனம் சிபாரிசு செய்துள்ள உணவுமுறை இது என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் 2000ஆம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள்

3 நவம்பர், 2011

கடாபியின் இறுதி தினங்களில், எங்கிருந்தார்? என்ன செய்தார்? என்ன சொன்னார்?

கடாபியின் இறுதி தினங்களில், எங்கிருந்தார்? என்ன செய்தார்? என்ன சொன்னார்?

கனிமொழி ஜாமீன் மனு சொதப்பியது யாரால்?


புதுடில்லி, இந்தியா: அனைத்து மட்டங்களிலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட கனிமொழி ஜாமீன் மனு இன்று (வியாழக்கிழமை) சற்று நேரத்துக்கு முன் நிராகரிக்கப்பட்டது. மனு நிராகரிக்கப்பட்டதுகூட பெரிய விஷயமல்ல, மனு நிராகரிக்கப்பட்ட காரணங்கள் என்று நீதிபதி தெரிவித்துள்ள காரணங்கள், இந்த வழக்கில் கனிமொழிக்கு எதிரான அஸ்திரங்களாக பதிவாகியுள்ளன.
இந்தக் காரணங்கள் கனிமொழி கேஸ் பைலில் பதிவாகியுள்ளதில் என்ன வில்லங்கம் உள்ளது? இருந்து பாருங்கள், பின்னாட்களில் கனிமொழியை இந்தக் குற்றச்சாட்டிலிருந்து வெளியே கொண்டுவர, இன்றைய பதிவு தடையாக இருக்கப் போகின்றன. நீதிபதியின் வேர்டிங், கனிமொழி மீதான குற்றச்சாட்டை முன்கூட்டியே கோர்ட் ஏற்றுக் கொள்ளும் ரகத்தில் உள்ளது!
இதற்கு, ஜாமீன் மனு செய்யாமலேயே இருந்திருக்கலாம்!
“கனிமொழியின் ஜாமீன் மனு, மூன்று காரணங்களின் அடிப்படையில் நிராகரிக்கப்படுகின்றது” என்று கூறிய சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி, “First of all, the crime committed was a deliberate offence; secondly, an economic offence and finally, very serious in nature.” என்று கூறியதை தமிழ்ப்படுத்தி அதன் ஃபுளோவை குறைக்க வேண்டாம்.
அப்படிக்கூறிய நீதிபதி, “குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் பொதுப் பணத்தை மிகக் கவனமான முறையில் தனது சொந்தப் பாவனைக்காக கவர்ந்து கொண்டுள்ளார்” என்றார்.
வழக்கே முடியுமுன் மேலே குறிப்பிட்ட வாக்கியம், கனிமொழியின் ரிக்கார்ட்களில் பதிவாகப் போகின்றது!
கனிமொழி ஜாமீன் மனுவை நிராகரித்து நீதிபதி வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்ட மற்றைய அதிரடி வாக்கியங்களையும் பாருங்கள்:
• “தற்போது இந்த கோர்ட் வழங்கியுள்ள தீர்ப்பு ‘எந்தவொரு வெளி அழுத்தம்’ காரணமாகவும் கூறப்படவில்லை. வழக்கிலுள்ள உண்மைகளையும், நிகழ்வுகளையும் மனதில் வைத்தே ஜாமீன் நிராகரிக்கப்படுகின்றது”
• “இவருக்கு ஜாமீன் கொடுப்பதை சி.பி.ஐ. எதிர்க்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் நீதியின் கண்களுக்கு முன், சி.பி.ஐ. மறுக்கவில்லை என்பதற்கு எந்த மதிப்பும் கொடுக்க முடியாது”
• “கனிமொழி சமூகத்தின் உயர்மட்டப் பெண்மணி என்பதாலோ, அவர் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதாலோ சட்டத்தின் கண்களுக்கு அவர் வேறு விதமாகத் தெரிவதில்லை. அவர் ஒரு பெண் என்பதால் இதில் டிஸ்கிரிமினேஷன் ஏதுமில்லை”
• “குற்றம் சாட்டவர்களுக்கு (கனிமொழி) உள்ள உரிமைகளை இந்த கோர்ட் மறுக்கவில்லை. ஆனால் அதேநேரத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு (கையாடப்பட்டது பொதுப்பணம் என்பதால், நீங்கள்.. நாங்கள்.. மக்கள்!) உள்ள உரிமை, கனிமொழிக்கு உள்ள உரிமைக்கு எந்த விதத்திலும் குறைந்தது அல்ல!
கடைசி வாக்கியத்தைச் சொன்னதற்காக,  நீதிபதி ஓ.பி.சைனிக்கு மரியாதைக்குரிய ஒரு சல்யூட்!

28 அக்டோபர், 2011

லிபியாவில் இனி ஷரீயா (இஸ்லாமிய) ஆட்சி


மிஸ்ரடா : லிபியாவில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் உடல் அமைந்துள்ள இடம் பொதுமக்கள் பார்வையிட முடியா வண்ணம் பூட்டப்பட்டுள்ளது. கடாபியின் மரணத்துக்கு பின் அங்கு என்ன வகையான ஆட்சி முறை நிலவும் என்ற சர்ச்சை இருந்து வந்தது.
இச்சூழலில் இது குறித்து கருத்து தெரிவித்த லிபிய இடைக்கால குழுவின் தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீல் "லிபியாவில் இஸ்லாமிய ஷரீயா சட்டங்களே இனி ஆளும்" என்றும் "அதற்கு மாற்றமான சட்டங்கள் அகற்றப்படும்" என்றும் தெரிவித்தார்.
மேலும் லிபியா ஒரு இஸ்லாமிய நாடாக இருப்பதால், "ஷரீயாவை முதன்மை சட்டமாக வைத்திருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?" என்று வினா எழுப்பிய ஜலீல் "கடாபியின் ஆட்சி முறையில் பலதார மணம் தடை செய்யப்பட்டு இருந்தது. அது ஷரீயாவுக்கு மாற்றமாக இருப்பதால் பலதாரமணத்தை தடை செய்யும் சட்டம் இன்றிலிருந்து அகற்றப்படுகிறது" என்றார்.

27 அக்டோபர், 2011

ஏலக்காயின் மருத்துவ குணங்கள்



ஏலக்காய் என்பது இஞ்சி செடி வகையைச் சேர்ந்தது. பச்சை நிறக் காய்களைக் கொண்டது. ஏலக்காய் பச்சை நிறத்திலும், அடர் பழுப்பு நிறத்திலும் இருக்கும். ஏலக்காய் நறுமணப் பொருளாக மட்டும் இல்லாமல், பல மருத்துவக் குணங்களைக் கொண்டதாகும். மன இறுக்கத்தைக் குறைத்து உடல் புத்துணர்ச்சி பெற ஏலக்காய் பயன்படுகிறது. பல் மற்றும் வாய் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு ஏலக்காய் நல்ல தீர்வாக அமையும். செரிமானத்திற்கு உதவும். இதனால்தான் நெய் சேர்த்து செய்யப்படும் இனிப்புகளில் அவசியமாக ஏலக்காயை சேர்ப்பார்கள். குரல் வளை மற்றும் தோல் தொடர்பான நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் ஏலக்காய்க்கு உண்டு. மலட்டுத் தன்மையைப் போக்குவதற்கும் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது.
பசியே ஏற்படுவதில்லை, சாப்பிட பிடிக்கவில்லை என்று கூறுபவர்கள், தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டுமென்றால், பசி எடுக்கும். ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும். நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்களும், சளியால் இருமல் வந்து, அடிக்கடி இருமி வயிற்றுவலி வந்தவர்களுக்கும் கூட ஏலக்காய் நல்ல மருந்தாக அமையும். ஏலக்காயை மென்று சாப்பிட்டாலே, குத்திரும்பல், தொடர் இருமல் குறையும். வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கும் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினை தான் காரணம். எனவே வாய் துர்நாற்றத்தைப் போக்க ஏலக்காயை மென்று சாப்பிட்டு வரலாம். சாப்பிடும் உணவு வகைகளில் சிறிது ஏலக்காயை சேர்த்துக் கொள்வது நல்லது. அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது.
ஏலக்காயில் உள்ள சத்துக்கள் :
இனிப்பு பண்டங்கள் செய்யும் போது வாசனைக்காக ஏலக்காயை சேர்ப்பார்கள் என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஏலக்காயில் பல்வேறு அரிய குணங்கள் உள்ளன. புரதம், நார்ச்சத்து மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற முக்கிய தாது உப்புகளும் ஏலக்காயில் கலந்துள்ளன. அடித்தொண்டை அழற்சி, தொண்டைக்கட்டு, உள்நாக்கில் வலி, குளிர்காய்ச்சலால் ஏற்படும் தொண்டைக்கட்டு முதலியவற்றைக் குணப்படுத்த ஏலக்காய் பெரிதும் உதவும். ஏலக்காயும் இலவங்கப்பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.
பாலில் ஏலக்காய் சேர்த்து சுடவைத்து இத்துடன் ஒரு தேக்கரண்டித்தேனும் சேர்த்து அருந்தி வந்தால் குழந்தைப் பேறில் ஏற்படும் குறைபாடுகள் நீங்கும். இதனை இருபாலரும் அருந்தலாம். இருவருக்குமே பலன் தரும். அதே நேரத்தில் பாலில் அதிகமாக ஏலக்காய்த்தூளைச் சேர்த்தால் மலட்டுத்தன்மை, ஆண்மைக்குறைவு அதிகரிக்கும். எனவே ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
(மாற்று மருத்துவம் ஏப்ரல் 2011 இதழில் வெளியானது)

22 அக்டோபர், 2011

கடாபி சுட்டுக் கொலை: மேற்கத்திய நாடுகள் வரவேற்பு


ரோம்,அக்.22 - லிபியாவின் முன்னாள் அதிபர் மும்மர் கடாபி சுட்டுக்கொலை செய்யப்பட்டதை மேற்கத்திய நாடுகள் வரவேற்றுள்ளன. லிபியாவில் 42 ஆண்டுகள் அதிபராக இருந்த மும்பர் கடாபி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பதவியை துறந்து தலைமறைவானார். அவர்,வெளிநாட்டிற்கு தப்பியோடி இருக்கலாம் என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் அவர் தனது சொந்த நகரான சிர்டேவில் மறைந்திருப்பது தெரியவந்தது. அவரை எதிர்ப்பாளர்கள் சுட்டனர். உடனே அருகில் இருந்து குழாய்க்குள் ஓடி ஒளிந்தார். அப்போதும் அவரை எதிர்ப்பாளர்கள் சரமாரியாக சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த கடாபி மரணமடைந்தார். அவரது உடலை எதிர்ப்பாளர்கள் தூக்கிச்சென்றுவிட்டனர். 
முன்னாள் அதிபர் கடாபி சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு மேற்கத்திய நாடுகள் வரவேற்றுள்ளன. கடாபியின் மரணமானது சர்வாதிகாரம், பாஷிச ஆட்சி முறை,ஏதேச்சதிகாரம் ஆகியவைகளுக்கு முடிவு ஏற்பட்டுள்ளதோடு வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் போர் முடிவுக்கும் வந்துள்ளது என்று கூறியுள்ளனர். கடாபி கொல்லப்பட்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதின் மூலம் லிபியாவில் சர்வாதிகாரத்திற்கு முடிவு கட்டப்பட்டுவிட்டது என்று அந்த நாட்டு தற்காலிக ஆட்சிமன்ற குழு கருத்து தெரிவித்துள்ளது. கடாபி சுட்டுக்கொலை செய்யப்பட்டதின்மூலம் லிபியாவில் போர் முடிவுக்கு வந்துள்ளது என்று இத்தாலி நாட்டு பிரதமர் சல்வியோ பெர்லுஸ்கோனி கருத்து தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் இத்தாலியின் காலனி நாடாக லிபியா இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடாபி கொல்லப்பட்டதன் மூலம் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது என்று மேற்கத்திய நாடுகள் இடம் பெற்றுள்ள ஐரோப்பா யூனியன் தெரிவித்துள்ளது. கடாபி கொல்லப்பட்டதின் மூலம் லிபியாவில் முதல் கட்ட புரட்சி முடிவுக்கு வந்துள்ளது என்று அமெரிக்காவின் மூத்த பாராளுமன்ற உறுப்பினர் ஜான் மிக்சியன் கூறியுள்ளார்.

சித்திபேட்டில் குர்ஆன் அவமதிப்பு: நீதி விசாரணை நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை


ஹைதராபாத் 11 அக்டோபர், 2011: ஆந்திர மாநிலம் மேடக் மாவட்டத்தில் சித்திபேட் என்கின்ற ஊரில் சில கயவர்களால் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆன் அவமதிக்கப்பட்டுள்ளது. இதனை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய செயலை கண்டிக்கும் விதமாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுபான்மை முஸ்லிம்கள் இளைஞர்களை தடியடி நடத்தி போலீஸார் கலைத்துள்ளனர். இது தொடர்பாக உடனே நீதி விசாரணை நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் மாநில அரசை வலியுறுத்துகிறது.
கடந்த சனிக்கிழமை 8ஆம் தேதி அன்று துர்கா சிலை வழிபடுதலின் போது சில வகுப்புவாத சக்திகளால் திருக்குர்ஆன் அவமதிக்கப்பட்டுள்ளது. அடுத்த நாள் காலையில் அந்த பகுதி முஸ்லிம்கள் தெருவோரங்களில் குர்ஆனி பக்கங்கள் கிழிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியுற்றனர். முந்தைய இரவில் நடந்த பண்டிகையின் போதுதான் சில கயவர்கள் இவ்வாறு செய்துள்ளார்கள் என்பதை அறிந்து கொண்ட முஸ்லிம்கள், நீதி வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக தடியடி நடத்தி கலைத்துள்ளனர்.


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கர்நாடக மாநில பொதுச்செயலாளர் டி.எஸ். ஹபீபுல்லாஹ் அவர்கள் கூறும்போது சில முஸ்லிம் இளைஞர்கள் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிடும் என்று சொல்லி கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் என்று கூறினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குர்ஆன் அவமதிக்கப்பட்டதையும் அதே சமயம் நீதிக்காக போராடிய மக்களை தடியடி நடத்தி கலைத்ததையும் வன்மையாக கண்டிக்கிறது என பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ஹபீபுல்லாஹ் தெரிவித்தார். நீதி, அமைதி, சமூக நல்லிணக்கம் ஆகியவற்ற மாநிலத்தில் பேணப்படுவதற்கு முதலைமைச்சர் கிரண் குமார் ரெட்டி தவறிவிட்டார். இதே போன்ற செயல்கள் அடோனியிலும் நடைபெற்றதன் மூலம் தெளிவாகிறது.

அத்வானியின் நடத்த இருக்கின்ற ரதயாத்திரையை முன்னிட்டு வகுப்புவாத சக்திகள் பதற்றத்தை ஏற்படுத்தவே இவ்வாறு செய்துள்ளனர். அத்வானியின் ரதயாத்திரை அக்டோபர் 19ம் தேதி அன்று இந்தப்பகுதியில் வர இருப்பதாக கூறப்படுகிறது. எனவே மாநில அரசு உடனே தலையிட்டு உடனே நீதி விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்துகிறது." இவ்வாறு கூறினார்.

4 அக்டோபர், 2011

இஸ்லாமிய பயங்கரவாதம்: சுவாமி மீது தில்லி போலீஸ் வழக்கு


புதுதில்லி, அக்.4: ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமிக்கு எதிராக தில்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்திய பத்திரிகையொன்றின் எடிட்டோரியலில் இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்து எழுதியது தொடர்பாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரு சமூகத்தினரிடையே விரோதத்தைத் தூண்டியதாக இந்திய தண்டனைச் சட்டம் 153ஏ பிரிவின்கீழ் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுவாமி கூறுகையில் அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஜூலையில் அந்த கட்டுரையை நான் எழுதினேன். முதல் தகவல் அறிக்கை அக்டோபரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் உள்நோக்கம் 2ஜி ஊழலாகத்தான் இருக்கும் என்றார் அவர்.

28 செப்டம்பர், 2011

முஸ்லிம் கூட்டமைப்புடன் கூட்டணி: திருமாவளவன்


சென்னை, செப்.28: முஸ்லிம்கள் கூட்டமைப்புடன் கூட்டணி வைத்து, இந்த உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கவுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
விடுதலைச் சிறுத்தைகள், மதுரை, நெல்லை, சேலம், வேலூர், தூத்துக்குடி, திருப்பூர் ஆகிய மாநகராட்சி மேயர் பதவிகளுக்குப் போட்டியிடும் என்று தெரிவித்தார். பாமக தனித்துப் போட்டியிடுவதாக ஏற்கெனவே அறிவித்து விட்டனர். எனவே நாங்கள் பாமகவுடன் கூட்டணிக்கு முயற்சி செய்யவில்லை. அதுபோல் மதிமுகவுடனும் கூட்டணிக்கு சில காரணங்களால் முயற்சி செய்யவில்லை என்றார் திருமாவளவன்.

27 செப்டம்பர், 2011

முஸ்லிம்களின் குறைகள் விரைவில் சரிசெய்யப்படும் : மம்தா உத்திரவாதம்


மேற்கு வங்காளத்தில் முஸ்லிம்களின் குறைகள் விரைவில் சரிசெய்யப்படும் : மம்தா உத்திரவாதம் 

மம்தா பானர்ஜி முதலமைச்சராக பதவியேற்ற பின் முதல் முறையாக முஸ்லிம்கள் அடங்கிய குழுவை சந்தித்தார். அப்போது முஸ்லிம்கள் வைத்த கோரிக்கைகள் கல்வி, இட ஒதுக்கீடு மற்றும் வேலை வாய்ப்பு பற்றி இருந்தது. மேலும், அவர்கள் ராஜரட், டைமண்ட் ஹார்பர், கோனா எக்ஸ்பிரஸ், எல்.ஐ.ஜி மற்றும் எம்.ஐ.கி மனைகளில் முஸ்லிம் சமுதாயத்தினர் அமர்த்தப்பட வேண்டும் என்றும், மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு தனி அமைச்சர் ஏற்படுத்தப்பட்டால் தங்கள் குறைகளை எளிதில் சேர்க்க வசதியாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.

அதற்கு முதலமைச்சர் மம்தா, அமைச்சர் நூருல் ஹக்கின் செயலாளரை சந்திக்கும் படியும், மேலும் மாநில அமைச்சர் ஜாவித் அஹ்மத் கான் உங்கள் கோரிக்கைகள் பற்றி கையாள்வர் என்றும், தேர்தல் காரணமாக என்னால் எந்த வித முடிவும் எடுக்க இயலாது என்றும் தெரிவித்தார். அதேவேளையில் உங்கள் கோரிக்கைகளையும், குறைகளையும் வெகு விரைவில் சரிசெய்யப்படும் என்றும் உத்திரவாதம் கொடுத்தார்.

10 செப்டம்பர், 2011

டில்லி குண்டுவெடிப்பு: அப்சல் குரு கண்டனம்



புதுடில்லி: "டில்லி குண்டுவெடிப்பு சம்பவம் காட்டுமிராண்டித் தனமானது' என, பார்லிமென்ட் தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு, கண்டனம் தெரிவித்துள்ளார்.

டில்லி ஐகோர்ட் வளாகத்தில், கடந்த புதன் கிழமை குண்டுவெடித்தது. இந்த பயங்கர சம்பவத்தில், 13 பேர் பலியாகினர்; 60க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தையடுத்து, போலீஸ் அதிகாரிகளுக்கு இ -மெயில் ஒன்று வந்தது. "ஹர்கத் -அல்- ஜிகாத்' என்ற அமைப்பு எழுதியிருந்த அந்த இ- மெயில் கடிதத்தில், குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தாங்கள் பொறுப்பேற்பதாகவும், பார்லிமெண்ட் தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி இந்த சம்பவத்தை நிகழ்த்தியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பார்லிமெண்ட் தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு, தனது வழக்கறிஞர் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: டில்லி ஐகோர்ட்டில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் காட்டுமிராண்டித்தனமானது. அது கோழைகளின் நடவடிக்கை. அப்பாவிகளை கொல்ல வேண்டும் என்று எந்த மதமும், யாருக்கும் அனுமதியளிக்கவில்லை. இந்த சம்பவத்தில், எனது பெயர் தேவையில்லாமல் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மனதில் என்னைப் பற்றி தவறான எண்ணம் விதைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1 செப்டம்பர், 2011

கோகோ- கோலா முஸ்லிம்களுக்கு "ஹராம்"

125 ஆண்டுகளுக்கு பிறகு கோகோ-கோலாவின் பார்முலா ரகசியம்இணையதளம் மூலமாகவும், ரேடியோ மூலமாகவும் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் பிரபல குளிர்பானம் கோகோகோலா. கடந்த 1886-ம் ஆண்டு முதன் முதலில் இது தயாரிக்கப்பட்டு விற்பனையானது. அட்லாண்டாவில் மட்டும் விற்கப்பட்ட இந்த குளிர்பானம் தற்போது உலகம் முழுவதும் உள்ள 200 நாடுகளில் வினியோகிக்கப்படுகிறது.

நாள் ஒன்றுக்கு 160 கோடி பாட்டில் கோகோகோலா பானம் சப்ளை செய்யப்படுகிறது. இதற்கான பார்முலா ஜான் பெம்பர்டன் என்ற மருந்தாளுனர் கண்டுபிடித்தார். அன்று முதல் இன்று வரை அது மிகவும் பரம ரகசியமாகவே இருந்து வருகிறது.

எனினும் "காபைன் கலந்த இயற்கை சுவை கூட்டல்" பொருட்கள், சர்க்கரை, தண்ணீர், நிறமிகள் என்று மட்டுமே கோலாவில் அச்சிடப்படும். அந்த இயற்கை சுவை கூட்டலில் என்ன பார்முலா என்பது ரகசியம்.

இந்த நிலையில் அதில் என்னென்ன பொருட்கள் கலக்கப்படுகிறது என்ற தகவல் 125 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளியாகியுள்ளது. இந்த பார்முலா ரகசியத்தை அமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு ரேடியோ தெரிவித்துள்ளது. அதன் நிகழ்ச்சி ஒரு இணையதளத்திலும் வெளியாகி உள்ளது.

கோகோ-கோலா தயாரிப்பதற்கான பொருட்களை 2 தொழிலாளர்கள் மட்டும் தயாரித்து வந்ததாகவும் அவர்கள் மூலம் வெளியாகி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த பார்முலா எழுதப்பட்ட காகிதத்தை அமெரிக்க வங்கி லாக்கரில் பாதுகாக்கிறது கோலா நிறுவனம்.

ஏற்கனவே 1979 ல் ஜார்ஜியா மாநில உள்ளூர் நாளிதழ் ஒன்றில் இது வெளியானதாக தெரிகிறது. ஆனால் இப்போது இருப்பது போல கோகாகோலாவின் புகழ் அப்போது பெரிதாக இல்லை என்பதால் அந்த செய்திக்கு முக்கியத்துவம் இல்லாமல் போனது.

அந்த இணையத்தளம் வெளியிட்டுள்ள கோக கோலா உற்பத்தி பார்முலா இவைதான்.

Fluid extract of Coca 3 drams USP.
Citric acid 3 oz .
Caffeine 1oz .
Sugar 30 (it is unclear from the markings what quantity is required).
Water 2.5 gal.
Lime juice 2 pints 1 qrt.
Vanilla 1oz .
Caramel 1.5oz or more to colour.
7X flavour (use 2oz of flavour to 5 gals syrup).
Alcohol 8oz .
Orange oil 20 drops.
Lemon oil 30 drops.
Nutmeg oil 10 drops.
Coriander 5 drops.
Neroli 10 drops.
Cinnamon 10 drops.

25 ஆகஸ்ட், 2011

அன்னாவாக இல்லாமல் இருக்கவே விரும்புகிறேன்


ஆங்கிலத்தில் : அருந்ததி ராய்
தமிழில் : சொ.பிரபாகரன்
அவரது வழிமுறைகள் காந்தியமாக இருக்கலாம், ஆனால் அவரது கோரிக்கைகளில் கண்டிப்பாக காந்தியம் இல்லவே இல்லை..
தொலைக்காட்சியில் எதைப் பார்க்கிறோமோ, அவைகள்தான் உண்மையில் புரட்சிகரமானதென கருதினால், அதுதான் சமீபத்தில் நடந்ததில் மிகவும் தர்மசங்கடமானதாகவும் புத்திசாலிதனமற்றதாகவும் இருந்திருக்கும்.. இப்போது ஜன் லோக்பால் மசோதா பற்றி, நீங்கள் என்ன கேள்வி யாரிடம் கேட்டிருந்தாலும், அந்த கேள்விக்கு கீழ்கண்ட கட்டங்களில் ஏதாவது ஒரு பதிலைத்தான் சரியென அவர்கள் 'டிக்' செய்திருப்பார்கள் (அ) வந்தே மாதரம்! (ஆ) பாரத அன்னைக்கு ஜே! (இ) இந்தியா என்றால் அன்னா, அன்னா என்றால் இந்தியா! (ஈ) இந்தியாவுக்கு ஜே!
arunthathi_roy_327முற்றிலும் வெவ்வேறு காரணங்களுக்காக, முற்றிலும் வெவ்வேறு வழிகளில், மாவோயிஸ்டுகளும் ஜன் லோக்பால் மசோதாகாரர்களும் ஒரே பொதுவான அம்சத்தை வலியுறுத்தி வருகின்றனர் என்று நம்மால் கண்டிப்பாகச் சொல்ல முடியும். இருவருமே இந்திய அரசைத் தூக்கி எறிய முயல்கிறார்கள். ஒருவர், ஏழைகளிலும் ஏழைகளான ஆதிவாசிகளினால் உருவாக்கப்பட்ட இராணுவத்தின் துணை கொண்டு, ஆயுதப் போராட்டத்தின் மூலம், கீழிருந்து தூக்கி எறிய முயல்கிறார். மற்றொருவர் மேலிருந்து, நகரம் சார்ந்த ஆனால் நிச்சயமாக நல்ல பொருளாதாரப் பின்புலம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்ட இராணுவத்தைக் கொண்டு, புத்துணர்வு கொண்ட ஒரு சாதுவின் தலைமையின் கீழ், இரத்தம் சிந்தாத காந்திய ஆட்சிக்கவிழ்ப்பு மூலம், அரசைத் தூக்கி எறியப் பார்க்கின்றனர். (இந்த முறையில் அரசு நிர்வாகமும் தன்னைத் தானே தூக்கி எறிந்து கொள்ள, அனைத்தையும் செய்து உடந்தையாக உள்ளது)
2011ம் வருடம் ஏப்ரல் மாதம் அன்னா ஹசாரே முதலாவது "சாகும் வரை உண்ணாவிரதத்தை" சில நாட்கள் இருந்தார். அப்போது எழுந்த பெரும் ஊழல்கள், இந்திய அரசின் நம்பிக்கைத் தன்மையையே சிதைத்திருந்தது. அதிலிருந்து மக்கள் கவனத்தைத் திசைதிருப்ப, அரசு நமது சிவில் சமூகத்தால் "அன்னா அணி" என்று அழைக்கப்பட்ட இந்த அணியினரைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அந்தக் குழுவை ஊழல் ஒழிப்பு சட்ட வரைவு கமிட்டியில் கூட்டு உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டது. சில மாதங்கள் கடந்ததும் அரசு இந்த முயற்சியைக் கைவிட்டு, புதிய வரைவு மசோதாவை நாடாளுமன்றத்தில் முன்வைத்தது. அந்த வரைவு மசோதா பலவித குறைபாடுகளுடன் இருந்ததால், விவாதிப்பதற்கே தகுதியற்றதாக அது இருந்தது.
பிறகு ஆகஸ்டு 16ம் தேதி காலையில் தனது இரண்டாம் "சாகும்வரை போராட்ட"த்தை அன்னா ஹசாரே துவங்கினார். அவர் தனது உண்ணாவிரதத்தைத் துவங்கும் முன்னர் அல்லது அவர் எந்தவித சட்டரீதியான குற்றத்தைச் செய்வதற்கு முன்னரே, கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். விளைவாக ஜன் லோக்பால் மசோதாவை நடைமுறைப்படுத்தும் போராட்டம் என்பது 'போராடும் உரிமைக்கான‌ போராட்டம்', ஜனநாயகத்திற்கான போராட்டம் என மாற்றப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த இரண்டாம் சுதந்திர போராட்டத்தைத் துவங்கிய சில மணி நேரத்திற்குள் அன்னா விடுவிக்கப்பட்டார். ஆனால் புத்திச்சாதுரியத்துடன், அன்னா சிறைச்சாலையை விட்டு வெளியேற மறுத்து விட்டார்; விளைவாக தான் உண்ணாவிரத்தைத் துவங்கிய திகார் சிறையிலேயே கெளரவம்மிக்க விருந்தாளியாகத் தொடர்ந்து இருந்தார். தனக்குப் பொதுவிடத்தில் உண்ணாவிரதம் இருக்கும் உரிமையைத் தரவேண்டுமென கோரிக்கையை விடுத்தவாறு, தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். அந்த மூன்று நாட்களும் மக்கள் கூட்டமும் தொலைக்காட்சி வண்டிகளும் சிறைச்சாலைக்கு வெளியே கூடி நிற்க, 'அன்னா அணி'யின் உறுப்பினர்கள் திகார் என்ற உயர்காவல் சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் காற்றைக் கிழித்துக் கொண்டு அங்குமிங்கும் பறந்து சென்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் உள்ளேயிருந்து கொண்டு வந்த வீடியோ செய்திகளை, அனைத்துத் தேசிய மற்றும்  அனைத்து தனியார் தொலைக்காட்சி ஊடகங்களில் கொடுத்து வெளியிட்டனர். (இந்த மாதிரியான ஆடம்பரம், வேறு நபருக்கு அங்கு அனுமதிக்கப்பட்டிருக்குமா?)
இதற்கிடையில் தில்லி முனிசிபல் கமிஷனின் 250 ஊழியர்கள், 15 லாரிகள் மற்றும் 6 மண் புரட்டிப் போடும் இயந்திரங்களின் உதவியுடன், சகதியாகக் கிடந்த ராம்லீலா மைதானத்தில் நாள் முழுக்க வேலை பார்த்து, வார இறுதியில் அரங்கேறப் போகும் மிகப்பெரிய 'ஷோ'வுக்கு, அதைத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். முடிவே இல்லாமல் காத்திருந்து விட்டு, கிரேனில் தொங்கவிட்ட காமிராக்களையும் உற்சாக கோஷமிட்டுக் கொண்டிருந்த கூட்டத்தையும் அவதானித்து விட்டு, இந்தியாவில் மிகவும் விலைகூடுதலான மருத்தவர்களின் மருத்துவ உபசரிப்புடன், அன்னாவின் மூன்றாவது கட்ட "சாகும் வரை உண்ணாவிரதம்" துவங்கியது. உடனே பல தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், “காஷ்மீரில் இருந்த கன்னியாகுமரி வரை, இந்தியா ஒன்றுதான்” என்று நம்மிடம் சொல்ல‌ ஆரம்பித்து விட்டார்கள்.
அவரது வழிமுறை வேண்டுமானால் காந்தியமாக இருக்கலாம், ஆனால் அவரது கோரிக்கைகளில் கண்டிப்பாக காந்தியம் எதுவும் இல்லை. அன்னாவின் கருத்துக்கு மாறாக, காந்தி அதிகாரத்தை மையப்படுத்துவதற்கு எதிராக நின்றார். அதிகாரக் குவியலை எதிர்த்து, அதை அ-மத்தியத்துவப்படுத்த காந்தி விரும்பினார். லோக்பால் மசோதாவோ காந்தியத்துக்கு ஒவ்வாத - அதிகாரம் மத்தியத்துவப்படுத்தப்பட்ட ஒரு கொடுமையான ஊழல் எதிர்ப்புச் சட்டம். இந்த வரைவுச்சட்டத்தின் படி, ஜாக்கிரத்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர், ஆயிரக்கணக்கான ஊழியர்களைக் கொண்டு, ஒரு அதிகார மையத்தை நிர்வகிப்பார்கள். அம்மையத்திற்குக் காவல்துறையினருக்கு உள்ள அதிகாரம் உண்டு; அவர்கள் பிரதம மந்திரியில் இருந்து, நீதித்துறையைச் சார்ந்தவர்களில் இருந்து, பாராளுமன்ற உறுப்பினர்களிருந்து, அதிகார மட்டத்திலுள்ள கீழ்மட்ட அரசு அதிகாரிகள் வரை, அனைவரையும் கண்காணிக்கலாம். லோக்பாலுக்கு ஒன்றை ஆய்வு செய்து துப்புத் துலக்கவும், கண்காணிக்கவும், அவர்கள் மேல் வழக்குத் தொடரவும் அதிகாரம் உண்டு. லோக்பாலிடம் சிறைச்சாலை மட்டும்தான் இல்லை. அதைத் தவிர அது ஒரு தனிப்பட்ட நிர்வாக அமைப்பாக, கணக்கில் அடங்காமல் சொத்து வைத்திருப்பவர்களையும், அளவுக்கு அதிகமாக ஊதிப் பெருத்தவர்களையும், ஊழல் பேர்வழிகளையும் எதிர்கொள்ளும் வகையில் செயற்படும். அரசு நிர்வாகம் என்பதே இதற்காகத்தானே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்போது அரசு நடுத்தும் சிறு குழுவினரின் ஆட்சி போதாதென்று, மற்றொரு சிறுகுழு ஆட்சியை லோக்பால் மசோதா ஏற்படுத்தித் தருகிறது. இதன் மூலம், இரண்டு சிறு குழு ஆட்சிக்கு வழிவகுப்பதாக இந்த லோக்பால் மசோதா அமைகிறது.
இந்த மசோதா பயன் தருமா, தராதா என்பது நாம் ஊழலை எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே உள்ளது. ஊழல் என்பது வெறுமனே சட்ட சம்பந்தப்பட்டப் பிரச்சினையா? ஊழல் என்பது வெறுமனே நிதி மோசடியும் லஞ்ச லாவண்யமும் உள்ள பிரச்சினையா? அல்லது அதிகாரம் என்பது மிகச் சிறுபான்மையினரின் கையில் குவிந்து கிடக்கும் இந்தச் சமத்துவமற்ற சமுதாயத்தில், ஊழல் என்பது சமூக பட்டுவாடாவுக்கான கரன்சி நோட்டா? ஒரு உதாரணத்திற்கு நான் சொல்வதைச் சிந்தித்துப் பாருங்கள்! பெரிய பெரிய ஷாப்பிங் மால் உள்ள ஒரு நகரத்தில், வீதிகளில் கூவி விற்கும் சில்லறை வியாபராம் தடை செய்யப்பட்டுள்ளது என்று எடுத்துக் கொள்ளுங்கள். இருப்பினும் இந்தச் சில்லறை வியாபாரி இந்த ஷாப்பிங் மாலின் விலைக்கு ஈடு கொடுத்து வாங்க முடியாத வாடிக்கையாளர்களுக்கு, தனது பொருளை விற்க வேண்டுமானால் கண்டிப்பாகச் சட்டத்தை மீறித்தான் செயற்பட வேண்டும். அதற்காக அங்குள்ள போலிஸிக்கும் முனிசிபாலிடி ஆளுக்கும் அவர் சிறு தொகையைக் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்ளுவோம். அப்படிச் செய்வது ரொம்ப மோசமான செயலா? எதிர்காலத்தில் இந்தச் சில்லறை வியாபாரி தனது வணிகத்தைச் செய்ய இந்த லோக்பால் பிரதிநிதிகளுக்கும் கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டுமா? சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது அமைப்புரீதியான சமத்துவமின்மைக்குத் தீர்வு காண்பதிலேயே உள்ளது. அப்படிச் செய்யாமல், அதற்குப் பதில், மக்கள் இன்னுமொரு அதிகார மையத்தை எதிர்கொள்ளட்டும் என்று விட்டு விடுவது எப்படி நியாயமாக இருக்கும்?
இதற்கிடையில் அன்னாவின் புரட்சிக்கான கட்டமைப்பும் நடன இயக்கமும், அதற்கான உக்கிரமான தேசியவாதமும் கொடி அசைத்தலும், இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்களின் எதிர்ப்புப் போராட்டத்தில் இருந்தும், உலகக்கோப்பை வெற்றி அணிவகுப்பிலிருந்தும், அணுச்சோதனை கொண்டாட்டத்தில் இருந்தும் கடன் வாங்கப்பட்டுள்ளது. அவர்களது உண்ணாவிரதத்தை நீங்கள் ஆதரிக்காவிட்டால், அவர்கள் உங்களை "உண்மையான இந்தியன் இல்லை" என்று அடையாளப்படுத்துவார்கள். அது போலவே இந்த 24 மணிநேர ஊடகங்களும், இந்த நாட்டில் இந்தச் செய்தியை விட்டால், வெளியிடுவதற்கு உருப்படியான வேறு செய்தியே இல்லை என்று முடிவெடுத்துவிட்டன‌.
இந்த உண்ணாவிரதம் இரோம் சர்மிளாவின் பத்து வருட உண்ணாவிரதத்திற்கு எந்த விதத்திலும் அர்த்தம் வழங்கவில்லை. சந்தேகத்தின் பேரிலேயே யாரையும் கொல்லலாம் என மணிப்பூரில் வழங்கப்பட்டிருக்கும் AFSPA (Armed Forces [Special Power] ACT) சட்டத்திற்கு எதிராக பத்து வருடமாக உண்ணாவிரதம் இருந்து (அவருக்கு வலுகட்டாயமாக உணவு புகட்டப்பட்டாலும்) தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறாரே இரோம் சர்மிளா, அவரை இப்போராட்டம் எந்த அர்த்தமும் இல்லாமல் கைவிட்டு விட்டது. அணு ஆலை வரக்கூடாது என்று பத்தாயிரக்கணக்கான கிராமத்துவாசிகள் கூடங்குளத்தில் தொடர் உண்ணாவிரதம் இருக்கிறார்களே, அந்த உண்ணாவிரத்திற்கு இந்த அன்னாவின் உண்ணாவிரதம் எந்த அர்த்தத்தையும் வழங்கவில்லை.
அன்னாவின் போராட்டத்தில் மக்கள் என்பவர்கள் யார்? இரோம் சர்மிளாவின் உண்ணாவிரத்தை ஆதரித்த மணிப்பூரிகள் மக்கள் இல்லையா? ஜகத்சிங்பூரிலும், கலிங்காநகரிலும், நியாம்கிரியிலும், பஸ்தாரிலும், செய்தாபூரிலும், சுரங்கக் கொள்ளைக் குண்டர்களுக்கு எதிராகவும், குண்டாந்தடிப் போலிஸ்காரர்களுக்கு எதிராகவும், திரண்ட ஆயிரக்கணக்கானவர்கள் மக்கள் இல்லையா? போபால் வாயுக் கசிவில், முடமானவர்கள், இறந்தவர்கள், மக்கள் இல்லையா? அல்லது நர்மதா பள்ளத்தாக்கில் கட்டப்பட்ட அணையால் இடம்பெயர்ந்தவர்கள் மக்கள் இல்லையா? தனது நிலத்தை எடுத்துக் கொள்ளக்கூடாதென எதிர்ப்பு தெரிவித்த நோயிடா அல்லது புனே அல்லது ஹரியானாவைச் சார்ந்த விவசாயிகள் மக்கள் இல்லையா? அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் இவர்கள் இல்லை.
பின்னர் அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் யார்? தான் கோரும் லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வைக்கப்பட்டு, சட்டமாக மாற்றப்படாவிட்டால், உணவருந்தாமலேயே உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று மிரட்டும் அன்னா என்ற 74 வயது மனிதரை, ஊடகத்தில் பார்க்கும் இந்த பார்வையாளர்கள்தான், அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் ஆவர். எப்படி பசித்தவர்கள் புசிப்பதற்காக இயேசு கிறிஸ்து மீன்களையும் உணவுத் துண்டங்களையும் பல மடங்குகளாக ஆக்கினாரோ, அது போலவே தொலைக்காட்சி ஊடகங்கள் பல மடங்குப் பார்வையாளர்களைப் பெருக்கி, இந்த மக்களை பன்மடங்காக்கியது. "ஒரு பில்லியன் குரல்கள் ஒலித்து விட்டன” என்று நமக்குச் சொல்லப்பட்டு விட்டது. "இந்தியா என்றால் அன்னாதான்.”
மக்களின் குரலான இந்தப் புதிய சாது உண்மையிலேயே யார்? உடனடி அவசரத் தேவையான மக்கள் விசயங்கள் குறித்து, இவர் எதுவும் போதுமான அளவுக்கு பேசியதாக நாம் கேட்டதே இல்லை. நமது பக்கத்தில் நடந்த விவசாயிகளின் தற்கொலை குறித்தோ அல்லது நக்சலைட்டுக்கு எதிராக நடந்த பச்சை வேட்டை ஆபரேசனைக் குறித்தோ இவர் ஒரு வார்த்தை கூட உதிர்த்தது கிடையாது. சிங்கூர் பற்றியோ, நந்திகிராம் பற்றியோ, லால்கார் பற்றியோ, போஸ்கோ பற்றியோ, விவசாயிகள் போராட்டம் பற்றியோ, அல்லது சிறப்புப் பொருளாதார மண்டலத்திலுள்ள பிரச்சினைக‌ள் பற்றியோ, இவர் எதுவும் பேசியதில்லை. மத்திய இந்தியாவிலுள்ள காடுகளில் இந்திய இராணுவத்தை நிறுத்தி வைக்க திட்டமிட்டிருக்கும் அரசின் திட்டங்கள் குறித்து, அவருக்கு எந்த அபிப்பராயமும் இருப்பதாகத் தெரியவில்லை.
மராத்தியராக இல்லாதவர்கள் மேல் கடும் வெறுப்பை உமிழ்ந்து வரும் ராஜ் தாக்கரேயின் அரசியலை ஆதரித்தவர் அன்னா. 2002ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான திட்டங்களை நேரடியாக நிர்வகித்த குஜராத் முதலமைச்சரின் "வளர்ச்சி மாதிரி"யை மனமாரப் புகழ்ந்தவர். (இதைச் சொன்னதும் ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பைக் கண்டு அன்னா, தனது வார்த்தைகளை திரும்பப் பெற்றுக் கொண்டாலும், மோடி மீதான தனது உவப்பை என்றுமே வாபஸ் பெற்றதில்லை)
இந்த மாதிரியான கும்மாளத்திற்குப் பிறகும், சில அமைதியான பத்திரிகையாளர்கள், பத்திரிகையாளர்கள் செய்ய வேண்டிய வேலையைச் செய்துள்ளார்கள். ஆர்.எஸ்.எஸ்சுடன் அன்னாவுக்குள்ள பழைய உறவுகள், தற்போது இப்பத்திரிகையாளர்கள் மூலமாக அம்பலத்துக்கு வந்துள்ளது. அன்னாவின் கிராம குழுமமான ரலேகன் சித்தியில் பயின்ற, முகுல் சர்மாவைப் பற்றி நாம் இப்போது கேள்விப்படுகிறோம். அங்கு கடந்த 25 வருடமாக ஒரு கிராம பஞ்சாயத்து தேர்தலோ அல்லது கூட்டுறவு சொசைட்டி தேர்தலோ கிடையாது என்பது தெரிகிறது. ஹரிஜன் குறித்து அன்னாவின் கருத்தை அவரது வார்த்தைகள் மூலமாகவே வந்தடையலாம்: “மகாத்மா காந்தியின் பார்வையையே ஒவ்வொரு கிராமமும் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும், ஒரு 'சமார்', ஒரு 'சுனார்', ஒரு 'கும்ஹர்' இருக்க வேண்டும். அவர்கள் தங்களது பாத்திரம் அறிந்து, தங்களது வேலைகளைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான், ஒரு கிராமம் சுயசார்புள்ளதாக இருக்கும். இதைத்தான் நாங்கள் ரலேகன் சித்தியில் நடைமுறைப்படுத்தி வருகிறோம்.” இப்படிப் பேசும் அன்னாவின் அணியில் இருக்கும் உறுப்பினர்கள், "சமத்துவத்திற்கான இளைஞர்கள்" என்ற இடஒதுக்கீட்டுக்கு எதிரான அமைப்பில் அங்கம் வகித்தவர்கள் என்றால், அதில் ஆச்சரியப்பட என்ன உள்ளது?
கோகோ கோலாவில் இருந்தும், லேமென் பிரதர்ஸில் (Lehman Brothers) இருந்தும் தாரளமாய் நிதி வாங்கிக் கொண்ட அரசு சாரா நிறுவனங்களை நடத்துபவர்கள்தான், அன்னாவின் கிளர்ச்சிப் பிரச்சாரத்தை முன்னின்று நடத்துபவர்கள். அன்னா அணியில் முக்கியப் பிரமுகர்களான அரவிந்த கெஜிர்வாலும் மணிஜ் சிசோடியாவும் நடத்தும் கபீர் நிறுவனம், போர்ட் பெளன்டேசனிடம் இருந்து மூன்று வருடங்களுக்கு முன்பு, 4 லட்சம் டாலர்களைப் பெற்றுள்ளது. "ஊழலுக்கு எதிரான இந்தியா" பிரச்சாரத்திற்கு நன்கொடை அளித்தவர்களில், அலுமினியம் ஆலைகளுக்குச் சொந்தமான நிறுவனங்க‌ளும் பெளன்டேசன்களும், பல துறைமுகங்களைக் கட்டிய நிறுவனங்க‌ளும், பல சிறப்புப் பொருளாதார பகுதிகளைக் கட்டிய நிறுவனங்க‌ளும், அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்புடைய பல கோடிக்கணக்கிலான நிதி சாம்ராஜ்யத்தை நடத்துபவர்க‌ளும், ரியல் எஸ்டேட் நிறுவனங்க‌ளும் அடக்கம். அவர்களுக்கு நன்கொடை கொடுத்தவர்களில் பலர் ஊழலில் ஈடுபட்டதற்காக கண்காணிப்பில் இருப்பவர்களாகவும் மற்றும் பலவித கிரிமினல் செயற்களில் ஈடுபட்டவர்களாகவும் உள்ளார்கள். இவர்கள் அனைவரும் ஏன் அன்னாவுடன் இவ்வளவு உற்சாகத்துடன் பங்கெடுக்கிறார்கள்?
எப்போது ஜன் லோக்பால் மசோதாவிற்கான பிரச்சாரம் உச்சகட்டமடைகிறது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்! 2G ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட பெரும் ஊழல்களும் பெரும் மோசடிகளும் விக்கிலீக்ஸ் மற்றும் வெவ்வேறு மூலங்களின் வழியாக அம்பலமானபோது, பல முக்கியமான நிறுவனங்க‌ளும் மூத்த பத்திரிகையாளர்களும், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவைச் சார்ந்த அரசியல்வாதிகளும், நேச கட்சிகளின் மந்திரிகளும், ஒவ்வொருவருடன் அனுசரித்து பல நூற்றுக்கணக்கான ஆயிரங்கோடி ரூபாய் பணத்தைப் பொது கருவூலத்தில் இருந்து கரந்து கொண்டு சென்றனர் என்பது தெரிந்தது. இத்தனை ஆண்டுகளில் முதன் முறையாக அரசியல் புரோக்கர்கள் பெரும் அவமானப்பட்டார்கள். இந்தியாவிலுள்ள பெரும் கார்பரேட் தலைவர்கள் பலர், சிறைச்சாலையில் வாசம் செய்ய வேண்டிய அளவுக்குச் சிக்கிக் கொண்டார்கள். இதுதானே மக்களின் ஊழல் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு மிகவும் அவசியமான நேரமாகும், இல்லையா?
அரசு தனது வழக்கமான கடமைகளைக் கை கழுவி, கார்ப்பரேசன்களும் அரசு சாரா அமைப்புகளும் அரசின் கடமைகளைத் (நீர் விநியோகம், மின்சார விநியோகம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, சுரங்கம், சுகாதாரம், கல்வி) தங்களது கரங்களில் எடுத்துக் கொண்டுள்ள காலமிது. கார்ப்பரேட்டிற்குச் சொந்தமான ஊடகங்கள் பொது மக்களது எண்ணங்களைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள காலகட்டமிது. ஆகவே தற்போது இந்த கார்ப்பரேசன்களும் ஊடகங்களும் அரசுசாரா அமைப்புகளும் இந்த ஏதாவது ஒரு லோக்பால் மசோதாவின் அதிகாரத்திற்குள் தங்களை இணைத்துக் கொள்ள முயலும். அதற்குப் பதில், தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள மசோதா, அவர்களை முழுவதுமாய் நிராகரித்து விட்டது.
தற்போது மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் கூச்சல் போடுவதின் மூலமும், கேடுகெட்ட அரசியல்வாதி என்றும், அரசின் ஊழல் என்ற சங்கதியை அழுத்திப் பிரச்சாரமாகக் கொண்டு போவதின் மூலமும், தங்களை ஊழலின் கொடுக்குப் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள அவர்கள் முயல்கிறார்கள். அவர்கள் உருவாக்கிய தர்மாபோதச மேடையான அரசையே கொடூரமாகச் சித்தரித்து, அரசை பொதுவெளியில் இருந்து இன்னும் அகற்ற வேண்டுமென கோருவது, கண்டிப்பாக இரண்டாம் கட்ட சீர்திருத்தத்தை கொண்டு செல்வதற்காகத்தான். இதன் மூலம் இன்னும் தனியார்மயமாக்குதலை ஊக்குவிப்பதற்காகவும், பொது கட்டுமானத்திலும் இந்தியாவின் இயற்கை வளங்களை இன்னும் அதிகமாக அணுகும் வாய்ப்பை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் செய்யும் முயற்சிகளே இவையாகும். இதன் மூலமாக கார்ப்பரேசன் ஊழல்கள் சட்டப்பூர்வமாக்கப்பட்டு, அதற்கு 'பரிந்துரைக்கும் கட்டணம்' (Lobbying Fee)என்று பெயர் சூட்டப்படும் நாள் வெகுதூரம் இல்லை.
இந்தியாவின் 83 கோடி மக்கள் இன்னும் ஒரு நாளைக்கு இருபது ரூபாய்க்கும் குறைவான வருமானத்துடன்தான் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை இன்னும் பராரிகளாக்கும் கொள்கைகளை வலுவாக்குவதின் மூலம், நாம் நமது நாட்டை ஒரு சிவில் சண்டைக்குள் முண்டித் தள்ளுகிறோம் என்றுதானே பொருள்?
இந்த அவலமான பிரச்சினை இந்தியாவின் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் கையாலாகாதத் தன்மை மூலம் ஏற்பட்டுள்ளது. இதில் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாதவர்களான கிரிமினல்களும் கோடீஸ்வரர்களும் பாராளுமன்றவாதிகளாக ஆக்கப்படுகிறார்கள். இவ்வமைப்பில் உள்ள எந்தவொரு ஜனநாயக அமைப்பும், சாதாரண மக்களால் அணுக முடியாததாக உள்ளது. அவர்கள் கொடி ஆட்டுவதைப் பார்த்து ஏமாந்து விடாதீர்கள்! நாம் நமது உள்நாட்டு இறையாண்மையை அதீதபிரபுக்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நடத்தப் போகும் ஒரு போருக்குள் இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அப்போர் ஆப்கானிஸ்தானத்தின் போர்க்கிழார்கள் நடத்தும் சண்டையைப் போல் உக்கிரமாக இருக்கும். அதுதான் நமக்கு விதிக்கப்பட்டதாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன.
ஆங்கிலத்தில் : அருந்ததி ராய்  (21/08/2011, தி இந்து)
தமிழில் : சொ.பிரபாகரன்