புதுதில்லி, அக்.4: ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமிக்கு எதிராக தில்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்திய பத்திரிகையொன்றின் எடிட்டோரியலில் இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்து எழுதியது தொடர்பாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரு சமூகத்தினரிடையே விரோதத்தைத் தூண்டியதாக இந்திய தண்டனைச் சட்டம் 153ஏ பிரிவின்கீழ் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுவாமி கூறுகையில் அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஜூலையில் அந்த கட்டுரையை நான் எழுதினேன். முதல் தகவல் அறிக்கை அக்டோபரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் உள்நோக்கம் 2ஜி ஊழலாகத்தான் இருக்கும் என்றார் அவர்.
இந்திய பத்திரிகையொன்றின் எடிட்டோரியலில் இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்து எழுதியது தொடர்பாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரு சமூகத்தினரிடையே விரோதத்தைத் தூண்டியதாக இந்திய தண்டனைச் சட்டம் 153ஏ பிரிவின்கீழ் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுவாமி கூறுகையில் அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஜூலையில் அந்த கட்டுரையை நான் எழுதினேன். முதல் தகவல் அறிக்கை அக்டோபரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் உள்நோக்கம் 2ஜி ஊழலாகத்தான் இருக்கும் என்றார் அவர்.