என்னை தொட்டவர்கள் !

31 டிசம்பர், 2010

தினமணியின் வணிக மோசடி!

                                                கலீல் ,வீரசோழன்


  தினமணி இன்று 8 ரூபாய்! தினமணி என்ற பெயரையும் ,சில முன்னணி நிறுவனங்களின் விளம்பரத்தையும் காலண்டர் என்ற பெயரில் நமது கடை மற்றும் வீட்டில் இருந்தபடி வருடம் 365 நாளும் நாமே விளம்பரம் செய்ய நாம் கொடுக்கும் விலைதான் இன்றைய விலை ரூபாய் 8 ! (30 .12 .2010 ) இதை நேற்று முன் அறிவிப்பும் செய்யவில்லை இதைதான் நாம் மோசடி என்று குறிப்பிடுகின்றோம் .3 ரூபாய் தினமணி 50 பைசா உயர்வதற்கு முன் அறிவிப்பு செய்யும் ஆசிரியர் சுயநல விளம்பர நோக்கத்திற்காக 8 நிர்ணயம் செய்ததை முன் அறிவிப்பு செய்ய வேண்டும் , அப்படி செய்தால் விருப்பம் இல்லாதவர்கள் வாங்காமல் இருப்பார்கள் . அந்த இழப்பை தவிர்க்க அறிவிப்பில்லாமல் காலண்டர் விற்பனை செய்வது மிகப்பெரிய மோசடி ! இன்னும் ஒரு மோசடி இருக்கிறது அது யாருக்கும் தெரியாது , அதாவது திருமண , அரசியல் விழா விளம்பரம் முழு பக்க விளம்பரம் கிடைத்தால் அந்த விளம்பரத்தை போட்டு  அந்த அளவு செய்தியை முழுங்கி விடுவார்கள் 12 பக்கதுக்கு மேல் தினமணி வந்த சரித்திரம் இல்லை .கொடுக்கும் காசுக்கு செய்தி இல்லை ! எங்கோ நடக்கும் திருமண ,அரசியல் விழா பற்றி கிராமத்தின் கோடியில் அமர்ந்து படிக்கும் சாமானியனுக்கு என்ன அக்கறை ! நாம் விளம்பரம் போட தடை செய்ய வில்லை , விளம்பரம் கிடைத்தால் செய்தியை குறைக்காதே பக்கத்தை கூட்டு என்கிறோம் . 
வெங்காய விலை யாரால் உயர்கிறது ? என்று ஆராய்ச்சி செய்தும், நாடாளுமன்றம் முடங்கியதால் 100 கோடிக்கு மேல் நஷ்டம் என்று கவலை பட்டும் தலையங்கம் எழுதும் ஆசிரியர் சாமாநியனிடம் 8 கொள்ளை அடிப்பது என்ன நியாயம் ? காலண்டர் மூலம் வந்த லாபத்தால் அதை இலவசமாகவே கொடுக்கலாமே ! நாமும் இந்த கடிதமும் எழுத அவசியம் இருக்காது ! சரி சமாதானமாக காலண்டேரை வாங்கி கொள்வோம் என்றால் அதிலும் சிக்கல் ! என்ன என்றால் நான் ஒருஇஸ்லாமியன் காலண்டரில் இஸ்லாமிய வருட கணக்கு இல்லை இதை நான் எப்படி ஏற்பது? ஆக இதை எதிர்த்து  வாசகர்கள்  சட்ட நடவடிக்கை எடுக்க விழிப்புணர்வு பெறவேண்டும் .

11 டிசம்பர், 2010

அமெரிக்காவில் மிக வேகமாக வளரும் அரபி மொழி

அமெரிக்காவில் மிக வேகமாக வளரும் அந்நிய மொழிகளில் அரபி மொழி முன்னணியில் உள்ளது. சென்ற கல்வி ஆண்டில் அதிகமான அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் அரபி மொழிக்கான வகுப்பில் இணைந்துள்ளனர். கடந்த 2006 ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 46 சதவிகித வளர்ச்சியாகும் என்று ஓர் ஆய்வு அறிக்கை கூறுகின்றது.

ஆங்கிலத்தை தொடர்ந்து அதிகம் படிக்கும் மொழிகளின் பட்டியலில் லத்தின் மற்றும் ரஷ்ய மொழிகளை பின்னுக்கு தள்ளி எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியல் 1958 ம் ஆண்டிலிருந்து வெளியிடப்படும் நவீன மொழிகளுக்கான அமைப்பு Modern Language Association (MLA) வெளியிடும்  22 வது பட்டியலாகும்.

மேலும் இந்த பட்டியலில் கொரியன் 19 சதவிகிதமும், சைனீஸ் 18.2  சதவிகிதமும், அமெரிக்க சைகை மொழி 16.4 சதவிகிதமும் போர்சுகீசிய மொழி 11 சதவிகிதமும் வளர்ச்சியடைந்து முக்கிய இடத்தை பிடித்துள்ளன.

8,65,000 மாணவர்கள் சேர்க்கையை கொண்டு ஸ்பானிஷ் மொழி முன்னணியில் உள்ளது, 2006 ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 5 சதவிகித வளர்ச்சியாகும், தொடர்ந்து பிரஞ்சு மொழி 2,16,000 சேர்க்கையுடன் 5 சதவிகிதமும்  ஜெர்மன் மொழி 96,000 சேர்க்கையுடன் 2 சதவிகிதமும்  வளர்ச்சியடைந்துள்ளன

1968  ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் கலவரம் நடந்த காலகட்டத்தில் பிரஞ்சு மொழி அதன் உச்சகட்டமாக 3,88,000 மாணவர்கள் சேர்க்கையை கொண்டிருந்தது  ஆனால் 1980 ம் வருடம் 2,48,000 ஆக குறைந்தது. அதே போல் ரஷ்ய மொழி 1980 ம் ஆண்டு  24,000 எண்ணிகையில் இருந்து 1990 ம் ஆண்டு 45,000 ஆக அதிகரித்தது. பின் சோவியத் யூனியன் உடைந்த 5 வருட காலத்திற்குள் 25,000 ஆக குறைந்தது.

1998 ம் ஆண்டு 5,500 ஆக இருந்த அரபி மொழியின் சேர்க்கை 2002 ம் ஆண்டு  ஈராக் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு பின் 10,584 ஆக உயர்ந்தது. இப்போது 2010-ல் இந்த எண்ணிக்கை 35,000 ஆக உயர்ந்து உள்ளது.

இந்த ஆய்வறிக்கை  2,514 அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆய்வு நடத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.  இது அமெரிக்காவின் உயர் கல்வி நிறுவனங்களில் 99  சதவிகிதமாகும்.

9 டிசம்பர், 2010

மானம்கெட்ட மத்திய அரசால் நூறு கோடி நஷ்டம், நாடாளுமன்ற முடக்கம் .

தொடர்ந்து 18 நாள்களாக நாடாளுமன்றம் செயல்படவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம்தான். நாடாளுமன்றம் செயல்படவில்லை என்றால், குடியரசு காயப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.
கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக, ஊடகங்களில் "ஸ்பெக்ட்ரம்' முறைகேடுகளைப் பற்றித் தொடர்ந்து கண்டனம் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் அதைக் கொஞ்சம்கூட சட்டை செய்யாமல் மத்திய அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்தியதன் விளைவுதான் இப்போது பிரச்னை பூதாகரமாக மாறி, பிரதமரையே கபளீகரம் செய்துவிடும் அளவுக்கு வளர்ந்துவிட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்காமல் விட்டிருந்தால், முழுப் பூசணிக்காயும் நிச்சயமாகச் சோற்றில் மறைக்கப்பட்டிருக்கும்.
பிரச்னை வெளியானவுடன், வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செயல்படும் அரசாக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? சம்பந்தப்பட்ட அமைச்சரைப் பதவி விலகச் சொல்லி, புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். ஏன், ஒரு விசாரணைக் கமிஷனேகூட அமைத்திருக்கலாமே?
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இரண்டாவது தடவையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது முதலே, காங்கிரஸ் தலைமைக்குத் தங்களை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்கிற இறுமாப்பும், எதிர்க்கட்சிகள் கைகோத்துவிடாது என்கிற அசட்டுத் தைரியமும் நிறையவே ஏற்பட்டுவிட்டது. "ஸ்பெக்ட்ரம்' பிரச்னையை ஒரு பொருட்டாகவே மத்திய அரசு கருதவில்லை என்பதுடன் பிரச்னைக்குரிய அமைச்சகத்தின் செயலராக இருந்தவரை, ஏற்கெனவே அவர் மீது மற்றொரு லஞ்ச ஊழல் புகார் விசாரணை முடிவடையாத நிலையில், தலைமை ஊழல் தடுப்பு ஆணையராக நியமித்ததே, அதுதான் ஆணவத்தின் உச்சகட்டம்.
இப்போது, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்குகின்றன. செயல்படவிடாமல் தடுக்கின்றன என்று ஆளும்கட்சி கூறுவதில் அர்த்தமே இருப்பதாகத் தெரியவில்லை. அரசு என்னதான் விரும்புகிறது? "ஸ்பெக்ட்ரம்' ஊழல் பற்றி எதிர்க்கட்சிகள் எதுவுமே பேசாமல், பிரதமரைப் போல மெளனம் சாதிக்க வேண்டும் என்கிறதா? இல்லை, தினமும் நாடாளுமன்றத்துக்கு வந்து நாற்காலிகளில் தூங்கிவிட்டுப் போகவேண்டும் என்று நினைக்கிறதா?
கடந்த நவம்பர் 9 முதல் தொடங்கிய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இதுவரை ஒரு நாள்கூட செயல்படவில்லை என்பது உண்மை. இந்த நாடாளுமன்றப் புறக்கணிப்பால், அரசுக்கு ஏறத்தாழ  100 கோடி நஷ்டம் என்பதும் உண்மை. ஆனால், இதற்கு யார் பொறுப்பு, எதிர்க்கட்சிகளா, ஆளும் கட்சியா?
நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது பெரும்பான்மையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பெரும்பான்மை இருப்பதால் அரசு எதை வேண்டுமானாலும் செய்யலாம். அதன் செயல்பாடுகள் கேள்விக்கு அப்பாற்பட்டது என்றால் நாடாளுமன்றமும், சட்டப்பேரவைகளும் தேவையில்லையே. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி, வெற்றி பெற்ற கட்சியிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு, ஆண்டுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையிலோ, ஆளுநர் மாளிகைகளிலோ ஒன்றுகூடி, விருந்துண்டு, குசலம் விசாரித்துப் பிரியலாமே!
அவையில் பெரும்பான்மை இருப்பது ஆட்சியில் அமரவும், நிர்வாகத்தை நடத்தவும்தானே தவிர, அரசை நடத்துவது நாடாளுமன்றம்தான். நாடாளுமன்றம் என்றால் தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தனை உறுப்பினர்களையும் உள்ளடக்கியதாக இருப்பதுதான். நாடாளுமன்றத்தை, பிரச்னைகள் இல்லாமல் எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு மதிப்புக் கொடுத்து நடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பு ஆளும்கட்சிக்குத் தானே தவிர, எதிர்க்கட்சிகளுடைய கடமை அதுவல்ல. அதனால்தான், அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரத்துக்காக ஓர் அமைச்சர் நியமிக்கப்படுகிறார்.
எதிர்க்கட்சிகள் பிரச்னையை அரசியலாக்கப் பார்க்கின்றன என்பது ஆளும்கட்சித் தரப்பின் குற்றச்சாட்டு. அதில் என்ன தவறு இருக்க முடியும்? அரசியல் கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட முயல்வதில் வியப்பென்ன இருக்கிறது? ஆளும்கட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்த முயற்சிப்பதும், ஆளும்கட்சி தவறுகளைத் திருத்தாமல் அடம் பிடித்தால் அதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதும் தானே எதிர்க்கட்சிகளின் கடமை!
தலைமைத் தணிக்கை ஆணையரின் அறிக்கையை நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுதான் விசாரிக்குமே, பிறகு எதற்காக ஒரு நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. பொதுக் கணக்குக் குழு என்பது "சி.ஏ.ஜி.' அறிக்கையில் கூறப்படும் எல்லா துறைகளின் அறிக்கையையும் பொதுவாக, மேலெழுந்தவாரியாக ஆய்வு செய்யும் குழு. ராணுவம், ரயில்வே, பொதுத்துறை நிறுவனங்கள், உளவு என்று எல்லா அமைச்சகங்களின் நிதி ஒதுக்கீடு தொடர்பான கணக்குகளையும் தணிக்கை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதுதான் தணிக்கை ஆணையத்தின் பணி. சி.ஏ.ஜி. அறிக்கை என்பது மேலோட்டமானதுதான் என்று அரசுத் தரப்பே கூறும்போது, அதன் அடிப்படையிலான நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் விசாரணைக்கு என்ன பலன் ஏற்பட்டுவிடப் போகிறது?
நாடாளுமன்றக் கூட்டுக் குழு என்பது, ஒரு குறிப்பிட்ட விவகாரத்தில், குற்றச்சாட்டின், பிரச்னையின் எல்லா அம்சங்களையும் தீர விசாரிக்கும் அமைப்பு. இந்தஅமைப்பு பிரதமர் தொடங்கி, சோனியா காந்தி உள்ளிட்ட, ஏன் தனது கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவுக்காக நாள்தோறும் ஆதரவு அறிக்கை வெளியிடும் தமிழக முதல்வர் உள்பட, நீரா ராடியா, ரத்தன் டாடா, அனில் அம்பானி என்று ஒருவர் விடாமல் விசாரிக்கும் அதிகாரம் படைத்த அமைப்பு. இது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்குத் தெரியாதா என்ன?
நாடாளுமன்றக் கூட்டுக் குழு பிரதமரை விசாரணைக்கு அழைத்து அவமானப்படுத்துமே என்கிற காங்கிரஸாரின் கேள்விக்கு இதுதான் பதில் - பிரதமர் என்ன கடவுளா? அமெரிக்க அதிபரும், பிரிட்டிஷ் பிரதமரும் அந்த நாட்டு நாடாளுமன்றங்களால் விசாரிக்கப்படும்போது, மன்மோகன் சிங்கை இந்திய நாடாளுமன்றத்தின் கூட்டுக் குழு விசாரித்தால் என்ன தவறு? அவருக்குத்தான் இதற்கு முன் இரண்டு "ஜே.பி.சி.'க்களால் விசாரணை செய்யப்பட்ட அனுபவம் உண்டே!
நாடாளுமன்றம் நடக்காமல் இருப்பதற்கு அரசுதான் காரணம். நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்க அரசுத் தரப்பு ஏன் பயப்பட வேண்டும் என்பதுதான் கேள்வி!

7 டிசம்பர், 2010

பாபர் மசூதி நினைவு நாள்!

1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி சங்பரிவார் இயக்கத்தினரால் இடிக்கப்பட்ட நாள். பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் 18ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

திங்கள் கிழமை காலையில் நாடாளுமன்றம் கூடியதும், ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அமைக்கக் கோரி 17ஆவது நாளாக பாஜக, கம்யூனிஸ்டுகள், அதிமுக, சமாஜ்வாதி கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.

பாபர் மசூதி இடிப்பில் தொடர்புடையவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பகுஜன் சமாஜ் கட்சியைச் சார்ந்த ஷஃபீகுர் ரஹ்மான் குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்.

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ஹைதராபாத்தில் முழு அடைப்புக்கு முஸ்லிம் அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. இதனைத் தொடர்ந்து சார்மினார் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. ஹைதராபாத்தின் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளான லாட் பஜார், குல்ஜார் ஹவுஜ், பதேர்கட்டி மற்றும் மதீனா ஆகிய இடங்களில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. மலகாபேட், நம்பள்ளி, மெஹ்திபட்னம் மற்றும் தோலி செளகி ஆகிய பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது.

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் தமுமுகவின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

கோயம்புத்தூரில் வெற்றி ஊர்வலம் என்ற பெயரில் ஊர்வலம் செல்ல முயன்ற இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர். சென்னையிலும் இதுபோன்ற ஊர்வலத்தை அனுமதியின்றி நடத்த முயன்ற சுமார் 80 இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்

4 டிசம்பர், 2010

நாடாளுமன்ற முட்டுக்கட்டை: ரூ.95 கோடி மக்கள் வரிப்பணம் விரயம்!

ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சியினரின் பிடிவாதப்போக்கினால் தொடர்ந்து 16வது நாளாக நாடாளுமன்றம் செயல்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் மக்கள் வரிப்பணம் சுமார் ரூ.95 கோடி அளவுக்கு வீணாகியுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் காமன்வெல்த் முறைகேடு, மும்பை ஆதர்ஷ் முறைகேடு, ஸ்பெக்ட்ரம் முறைகேடு என எதிர்கட்சிகள் அடுத்தடுத்து பிரச்சனைகளை கிளப்பி வருகின்றன. இதனால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலிருந்து ஒரு நாள் கூட நாடாளுமன்றம் முறையாக செயல்படவில்லை. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் மட்டும் 16வது நாளாக நாடாளுமன்றம் செயல்படாமல் முடக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக் கோரி எதிர்கட்சிகள் எழுப்பும் கோரிக்கையை அரசு ஏற்காததால் இந்நிலை தொடர்கின்றது. சபாநாயகரும் மத்திய அரசும் பலச்சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இன்றும் நாடாளுமன்றம் கூடியவுடன் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இது போன்று அவை அலுவல்கள் நடைபெறாமலேயே மக்கள் வரிப்பணம் சுமார் ரூ.95 கோடி விரயமாகியுள்ளது தெரியவந்துள்ளது. எதிர்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டாலும் உறுப்பினர்கள் அவைக்கு வந்ததாகக் கணக்கிடப்பட்டு அன்றாடப்பணிகள் வழங்கப்படுகின்றன. இது தவிர சபாநாயகர், மக்களைவை மற்றும் மாநிலங்களவைச் செயலாளர்கள், ஊழியர்கள் ஊதியம் என ரூ.95 கோடி செலவாகியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் மக்கள் வரிப்பணம் மேலும் விரயமாகுமே தவிர மக்கள் பிரச்சனைகள் குறித்து உருப்படியான விவாதம் எதுவும் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.

23 நவம்பர், 2010

பெண்ணின் திருமண வயதை 19 ஆக குறைக்க வேண்டும்!

மு
ஸ்லிம் ஷியாப்பிரிவினர் அதிகம் வசிக்கும் ஈரான் நாட்டில் கடந்த 1979-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது அங்கு மக்கள் தொகை உயர்ந்து இருந்ததின் காரணமாக 1990-ம் ஆண்டு முதல் இங்கு குடும்ப கட்டுப்பாடு திட்டம் அமல் படுத்தப்பட்டது.
ஆண்களின் திருமண வயது 26 எனவும், பெண்களின் திருமண வயது 24 எனவும் நிர்ணயிக்கப்பட்டது. இதனால் அங்கு மக்கள் தொகை பெருக்கம் பெருமளவில் குறைந்தது.  இதற்கு ஈரான் அதிபர் அகமதி நிஜாத் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மக்கள் தொகை குறைந்ததால்தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் குறைந்து விட்டதாக குற்றம் சாட்டினார். இது இயற்கை மற்றும் கடவுளுக்கு எதிரான செயல் என்றும் மேலை நாடுகளின் இறக்குமதி திட்டம் என்று கூறினார்.

இந்நிலையில் அவர் ஆட்சிக்கு வந்ததும் புதிய திட்டம் ஒன்றை அறிவித்தார். இனி பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அரசு சார்பில் ஊக்க தொகை வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், ஆண்-பெண் திருமண வயதை குறைக்கவும் வலியுறுத்தி வருகிறார். ஆண்களின் திருமண வயதை 19 அல்லது 20 ஆகவும், பெண்களின் திருமண வயதை 16 அல்லது 17 ஆக குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். 


இதன் மூலம் ஈரானின் மக்கள் தொகை கணிசமாக உயரும் எதிர்பார்க்கப்படுகிறது தற்போதைய ஈரானின் மக்கள் தொகை சுமார் 7 கோடியே 50 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

19 நவம்பர், 2010

பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை : காரைக்காலில் நடந்த கொடுமை





ஒரு சகோதரர் காImageரைக்காலில் பள்ளிவாசல் கட்டுவதற்காக பூஜை நடத்தப்பட்டதை புகைப்பட ஆதாரத்துடன் அனுப்பி வைத்துள்ளார். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது குறித்து காரைக்கால் மக்களுக்கு மிகப்பெரும் கடமை உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம். காரைக்காலில் ஹில்ரு பள்ளிவாசல் கட்டுவதற்கான துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தாடியும் தொப்பியும் வைத்துக் கொண்டு இந்து மதத்தைப் பின்பற்றி பூஜை செய்துள்ளனர். அல்லாஹ்வின் பள்ளிவாசல் சிறப்பாகக் கட்ட பூமிக்கு பூஜை செய்தால் நல்லபடியாக முடியும் என்று நம்பும் இவர்களுக்கு பள்ளிவாசல் எதற்கு? பேசாமல் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய வேண்டியதுதானே ? இஸ்லாத்தின் பெயரை ஏன் கெடுக்க வேண்டும்.

காரைக்கால் மக்களுக்கு இஸ்லாத்தில் நம்பிக்கை இருந்தால் இது போன்ற முர்தத்களை பள்ளிவாசல் நிர்வாகத்தில் இருந்து நீக்க வேண்டும். இது அவர்கள் மீதுள்ள மார்க்கக் கடமையாகும்.
அல்லாஹ்வின் பள்ளியை யார் நிர்வாகிக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்.
இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர் வழி பெற்றோராக முடியும். ஹாஜிகளுக்குத் தண்ணீர் வழங்கி, மஸ்ஜிதுல் ஹராமை நிர்வகிப்போரை அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைப் போல் கருதுகிறீர்களா? அவர்கள் அல்லாஹ்விடம் சமமாக மாட்டார்கள். அநீதி இழைத்த கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். திருக்குர்ஆன் 9:17,18,19
தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் ''நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை'' என்று சத்தியம் செய்கின்றனர். ''அவர்கள் பொய்யர்களே'' என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.. அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான். அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தின் மீதும், அவனது திருப்தியின் மீதும் தனது கட்டடத்தை நிர்மாணித்தவன் சிறந்தவனா? அல்லது அரிக்கப்பட்டு விழுந்து விடும் கட்டடத்தை கரை ஓரத்தில் கட்டி அதனுடன் நரகத்தில் சரிந்து விழுந்து விட்டவன் சிறந்தவனா? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். திருக்குர் ஆன் 9:107,108,109
மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில் இவர்கள் பள்ளியை நிர்வாகம் செய்ய தகுதியற்றவர்களாகி விட்டனர். இவர்களைத் தூக்கி எறிவது காரைக்காலைச் சேர்ந்த ஒவ்வொரு முஸ்லிமின் மார்க்கக் கடமையாகும்.
முடியாவிட்டால் இதைப் பள்ளிவாசலாக அங்கீகரித்து உதவிகள் செய்வதை உடனே நிறுத்த வேண்டும். ஏனெனில் இது போல் இணை வைப்பின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்டவை பள்ளிவாசலே அல்ல என்று அல்லாஹ் மேற்கண்ட வசனத்தின் மூலம் தெளிவுபடுத்துகிறான்.
இதை காரைக்கால் சகோதரர்கள் பிரசுரமாக வெளியிட்டு மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

கார்கில் போர் : உண்மையை வெளியிட்டு பாக்.பரபரப்பு

இஸ்லாமாபாத் : கார்கில் போரில் தங்களுக்கு நேரடி தொடர்பு இல்லை என்று கூறிவந்த பாகிஸ்தான் ராணுவம், போர் முடிவடைந்து 11 ஆண்டுகள் கழித்து, தற்போது போரில் மரணமடைந்த ராணுவ வீரர்களின் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1999ம் ஆண்டு, இந்தியா - பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் இமயமலையில் அமைந்துள்ள கார்கில் பனி சிகரத்தை ஆக்கிரமிக்கும் நோக்குடன் பாகிஸ்தான் போர் தொடுத்தது. ஆனால், இந்திய ராணுவத்தின் அதிரடி நடவடிக்கையால், பாகிஸ்தானின் முயற்சி தோல்வியடைந்தது. போரில் படுதோல்வியடைந்த பாகிஸ்தான் ராணுவம், தனதுதோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல், கார்கில் போரில் ராணுவத்தினர் ஈடுபடவில்லை என்றும், துணை ராணுவப்படைகள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் கட்டுக் கதை கூறி வந்தது.

இந்நிலையில், முன்னாள் ராணுவ தளபதியும், பாகிஸ்தான் அதிபருமான பர்வேஸ் முஷாரப், 2006ம் ஆண்டு தான் எழுதிய, "இன் தி லைன் ஆப் பயர்' என்ற சுயசரிதை புத்தகத்தில், கார்கில் போரில் ராணுவ வீரர்கள் நேரடியாக ஈடுபட்டதை அம்பலப்படுத்தினார். அதில், 357 ராணுவ வீரர்கள் மரணமடைந்ததாகவும், 660 பேர் காயமடைந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், கார்கில் போர் முடிந்து 11 ஆண்டுகள் முடிவடைந்து விட்டநிலையில், போரில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டதை, அந்நாட்டு ராணுவம் முதன் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. தனது இணையதளத்தில், பட்டாலிக் - கார்கில் பகுதியில் போரினால் மரண மடைந்த ராணுவ அதிகாரிகள் மற்றும் 453 ராணுவ வீரர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. அதில், மரணமடைந்த வீரர்களின் பெயர்கள், அவர்கள் மரணத்திற்கான காரணம், எந்த இடத்தில் மரணமடைந்தனர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. கார்கில் போருக்கு, "ஆபரேசன் கோ -இ- பைமா' என்று பெயரிட்டு போர் தொடுத்ததையும் ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது. இந்நிலையில், கார்கில் போரில் 3,000 பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரிழந்ததாகவும், 200 பேர் பனிப்புயலில் சிக்கி மண்ணில் புதைந்து விட்டதாகவும் அந்நாட்டு எதிர்க்கட்சி கூறி வருகிறது, என்பது குறிப்பிடத்தக்க

14 நவம்பர், 2010

கொலைகாரன் புஷ் ஒப்புதல் வாக்குமூலம் !

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் தன் நினைவுகளை, அனுபவங்களை "டிஸிஷன் பாயிண்ட்ஸ்' என்ற தலைப்பில் ஒரு சுயசரிதை நூலாக எழுதியிருக்கிறார். இந்நேரம் அந்த நூல் வெளியாகியிருக்கும்.
அந்த நூலில் அவர் இதுவரை வெளியிடாத இரண்டு விஷயங்களை வெளியிட்டிருக்கிறார்.
ஒன்று, ஈராக் போர் தொடர்பானது. ஈராக் மீது அமெரிக்கா தொடுத்த போரில் தான் பல தவறுகள் செய்துவிட்டதாக புஷ் ஒப்புக் கொள்கிறார். அந்தப் போருக்கு மிக முக்கிய காரணமே, ஈராக்கில் மனிதகுல அழிவு ஆயுதங்கள் பெருமளவில் இருப்பதாக உளவுத் துறை மூலம் கிடைத்த தகவல்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த ஆயுதங்களைக் கண்டுபிடித்து அழித்து உலக மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்றுதான் அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படையெடுத்துச் சென்ற பிறகு அங்கே அப்படிப்பட்ட ஆயுதங்கள் எதையும் அமெரிக்கத் துருப்புகளால் கைப்பற்ற முடியவில்லை என்பதை தன் நூலில் புஷ் வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.
நான் மூழ்கிக் கொண்டிருக்கும் ஒரு கப்பலின் கேப்டன் போல உணர்ந்தேன். அங்கே ஆயுதங்கள் இல்லை என்று உறுதி செய்யப்பட்டபோது தவறு செய்துவிட்டதாக என் மனம் வலித்தது என்று புஷ் எழுதியுள்ளார்.
இன்னொரு விஷயம். செப்டம்பர் 11 இல் இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதில் பின்னணி மூளையாகக் கருதப்பட்ட கலீத் ஷேக் முகமதை எப்படி விசாரிக்க வேண்டும் என்பது பற்றியது. விசாரிக்கும் முறையில் பல வகைகள் உண்டு. அவற்றில் வாட்டர் போர்டிஸ் என்பது ஒரு முறை. யாரை விசாரிக்கிறார்களோ அந்த ஆளை ஒரு பலகையில் கட்டி வைத்து முகத்தில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து விசாரிப்பது. பதில் சொல்லத் தயங்கினால் அல்லது தவறினால் மீண்டும் முகத்தில் தண்ணீர் பாயும். "கலீத்தை அப்படி விசாரிக்கலாமா, இது சற்று சர்ச்சைக்குரிய வன்முறை கலந்த முறையாயிற்றே என்று அமெரிக்க சி.ஐ.ஏ. அதிகாரிகள் கேட்டபோது நான் பச்சை கொடி காட்டினேன்' என்று அந்தப் புத்தகத்தில் புஷ் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

"பயங்கரவாதம்" மேட் இன் யூ எஸ் ஏ - ஹிலாரி

சில பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கியது அமெரிக்காதான் என்றும் ஒஸாமா பின்லேடன் போன்ற பயங்கரவாதிகளை அமெரிக்கா முன்னர் ஆதரித்து வந்தது என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன். ஏபிசி தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின் போது ஒப்புக் கொண்டார்.

சோவியத் யூனியனுக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்கா இவ்வாறு செய்தது. ஆனால் இவ்வாறு செய்தது அமெரிக்காவுக்கே பெரும் பிரச்சனையாகிப் போனது என்று ஹிலாரி கூறினார்.

நாம் இப்போது யாருக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறோமோ அவர்களில் ஒரு பகுதியினர் அமெரிக்காவால் உருவாக்கப்பட்டவர்கள். ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனைத் தோற்கடிப்பதற்காக முஜாஹிதீன் படையினரை நாம்தான் உருவாக்கினோம் என்றும் அவர் கூறினார்.

நாம் அவர்களுக்குப் பயிற்சி அளித்தோம்; அவர்களுக்கு ஆயுதம் வழங்கினோம்; அவர்களுக்கு நிதி உதவியும் அளித்தோம். உஸாமா பின் லேடன் உள்ளிட்ட சிலருக்கு இவை வழங்கப்பட்டன. ஆனால் இது நமக்கு ஆதரவாகச் செயல்படவில்லை என்றும் ஹிலாரி கூறினார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் போருக்கு ஆதரவு அளித்தமைக்காக பாகிஸ்தான் மிகப்பெரிய விலையைக் கொடுத்துக் கொண்டுள்ளது. "பாகிஸ்தான் தன்னுடைய நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு சில நெளிவுகளைச் செய்தது. ஆனால் அதற்காக பாகிஸ்தான் தற்போது மிகப்பெரும் விலையைக் கொடுத்துக் கொண்டுள்ளது" என்று ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார்.

13 நவம்பர், 2010

முஸ்லிம்களுடன் புரிந்துணர்வு நோக்கி நகர்கிறோம் - ஒபாமா



இந்திய சுற்றுப் பயணத்தை அடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தோனேசியாவில் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பெறுவதில் முதலடியை எடுத்து வைத்துள்ளதாகவும் , இதில் நீண்ட தொலைவு பயணிக்க உள்ளதாகவும் சொன்னார் . "இந்தோனேசியா என்வாழ்வில் ஓர் அங்கம் என்றார் ஒபாமா கடந்த புதன்கிழமையன்று இந்தோனேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய ஒபாமா இந்தோனேசியா என் வாழ்வின் அங்கம் என்று கூறினார் தனது சிறு வயதில் அங்கு கழித்த நாள்களை நினைவு கூர்ந்தார்.  தன் தாய் இந்தோனேசியர் ஒருவரை மறுமணம் செய்து கொண்டது குறித்தும், அதன் பின்னர் தான் இந்தோனேசியாவில் சில ஆண்டுகள் வசித்தது குறித்தும் ஒபாமா தன் பேச்சில் குறிப்பிட்டார். அதிபராக பதவியேற்ற பின்னர் ஒபாமா தன் சொந்த வாழ்க்கை குறித்து பொது மேடையில் வெளிப்படையாக அதிகம் பேசியது இப்போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியா முஸ்லிம் நாடுகள், மேற்கத்திய நாடுகள் ஆகிய இரண்டுக்குமே முன்னுதாரனமாகத் திகழ்வதாக அவர் புகழாரம் சூட்டினார். மேலும் அவர் பேசுகையில் "நீண்ட நாள்களாக சர்வாதிகாரத்தின் பிடியில் இருந்த இந்தோனேசியா இப்போது ஜனநாயக பாதைக்கு வந்துள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு இந்தோனேசியா ஓர் உதாரணமாகத் திகழ்கிறது. இங்குள்ள கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவை இந்நாட்டு மக்களின் ஒற்றுமைக்கும் சகிப்புத் தண்மைக்கும் எடுத்துக் காட்டாக விளங்குகின்றன.
என் இந்தோனேசிய வாழ்க்கையின்போது நான் பலவற்றை இங்கு கற்றுக் கொண்டேன். இங்கு படித்தபோது நானும் என், பள்ளி நண்பர்களும் ஒரு நாள் நான் அமெரிக்க அதிபராக உயர்வேன் என துளியும் எதிர்பார்க்கவில்லை. நெல்லின் மீது ஓடி விளையாடியது, பட்டம் விட்டது, பட்டாம் பூச்சி பிடித்தது போன்ற நினைவுகள் எனக்கு இப்போது வருகின்றன. இந்தோனேசியாவில் இருந்து ஒழுங்கற்ற இளைஞனாக சென்ற நான். இப்போது அமெரிக்க அதிபராக இங்கு வந்துள்ளேன்' என்றார் ஒபாமா.
முன்னதாக மத்திய ஜகார்தாவிற்குச் சென்ற ஒபாமாவும் அவரது மனைவி மிச்சேலும் தெற்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய மசூதியான இஸ்திக்லால் மசூதிக்குச் சென்றனர். அவரை வரவேற்ற இமாம் ஹாஜி முஸ்தபா அலி யாக்கூப், அந்த மசூதியின் வரலாறு, கட்டடக் கலை ஆகியவை குறித்து ஒபாமாவுக்கு எடுத்துரைத்தார். இந்த மசூதி ஒரு கிறிஸ்தவரால் வடிவமைக்கப்பட்டது என்ற தகவலையும் ஒபாமாவிடம் கூறினார் இமாம்.
அதிபர் ஒபாமாவின் ம்னைவி மிச்சேல் முழுவதுமாக உடல் மறைக்கப்பட்ட பேண்ட் மற்றும் மேல் ஆடை அணிந்து வந்திருந்தார் தலையையும் அவர் போர்த்தி வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

7 நவம்பர், 2010

ஹெலன் டேவிட்சனுக்கு எதிராகப் போராட்டம் - த.மு.மு.க.வினர் கைது!



கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரான திமுகவைச் சேர்ந்த ஹெலன் டேவிட்சனுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய த.மு.மு.க.வினர் கைது செய்யப்பட்ட
னர்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி விசுவ இந்து பரிஷத் சார்பில் நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தில் கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த ஹெலன்டேவிட்சன் கையெழுத்திட்டதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக அவரிடம் திமுக தலைமை விளக்கம் கேட்டது. ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி தாம் கையெழுத்திடவில்லை என்றும் தம்மிடம் அளிக்கப்பட்ட மனுவிற்கு ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட்டதாகவும் டேவிட்சன் கூறினார்.

ஹெலன் டேவிட்சனிடம் மனுவில் கைöழுத்து பெறவில்லை என்று அனுமன் சக்தி அமைப்பு சார்பில் பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன் மறுத்தார். இந்நிலையில் ஹெலன் டேவிட்சன் தனது நாடாளு மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய கோரி த.மு.மு.க. சார்பில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மாநில துணைத் தலைவர் காதர்மைதீன், மாவட்ட தலைவர் பீர்முகம்மது உள்ளிட்ட நூற்றுக் கணக்கானவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

6 நவம்பர், 2010

தமது 120வது வயதில் புனித ஹஜ் பயணம் செல்லும் ராஜஸ்தான் மூதாட்டி

2014ல் NRIகளுக்கு ஓட்டுரிமை! - தேர்தல் ஆணையர் தகவல்

2014 தேர்தலின் போது வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கான வாக்குரிமை சாத்தியப்படலாம் என்று இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் டாக்டர். சலாஹுத்தீன் குரைஷி தெரிவித்துள்ளார்.
 ரியாத் மாநகரில், அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த 'சர் சையது அஹமது நாள்' நிகழ்ச்சியில் பேசும்போது இத்தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
500க்கும் மேற்பட்ட அலிகர் பல்கலை. முன்னாள் மாணவர்கள், குடும்பசகிதமாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். சவூதி அரேபியாவுக்கான இந்தியத்தூதர் தல்மீஸ் அஹமது தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியாவின் புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் சயீத் நக்வியும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இவ்வாண்டு தொடக்கத்தில், பிரதமர் மன்மோகன்சிங் டெல்லி விழாவொன்றில் பேசுகையில் வெ.நா.இந்தியர்களுக்கான வாக்குரிமை குறித்து உறுதிபூண்டதை குரைஷி மேற்கோள் காட்டினார்.
"வெ.நா. இந்தியர்கள் அடுத்த பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்குண்டான எல்லா சாத்தியக்கூறுகளையும் தேர்தல் ஆணையம் பரிசிலீக்கும்" என்றார் தலைமை ஆணையர்.  "ஆனால், அது சொல்வதைப் போன்று எளிதான வேலையில்லை. உதாரணமாக, சவூதிஅரேபியா என்கிற ஒருநாட்டில் மட்டுமே இரண்டு மில்லியன் இந்தியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பல்வேறு தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதை மறக்கக் கூடாது"
"பாதுகாப்புத் துறையினருக்கும், வெளிநாட்டு பணியிலுள்ள அரசுயர் அதிகாரிகளுக்கும் உள்ளது போன்ற மடல்வழிவாக்குரிமை மற்றொரு யோசனை"  என்ற குரைஷி "இதுகுறித்த அனைத்து வழிமுறைகளை ஆய்ந்து தகவல் தரும்படி அயலக அமைச்சகத்தை தேர்தல் ஆணையம் கோரியுள்ளது",  என்பதையும் சொன்ன குரைஷி அயல்துறை அமைச்சகம், வெளிநாட்டுத் தூதரகங்கள், ,மேலும் குறிப்பிடத்தகுந்த வெ.நா.இந்தியர்கள் ஆகியோருடன் தேர்தல் ஆணையத்தின் அணிகள் இதுகுறித்த பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள உள்ளதாகவும், எல்லாம் கூடிவரும் பட்சத்தில் 2014 தேர்தலில் வெ.நா இந்தியர்கள் வாக்குரிமை அடைவர்" என்றும் தெரிவித்தார்.

சபாஷ் மும்பை போலிஷ்!

மும்பை : 70களிலும் 80களிலும் அமெரிக்கா சொல்வதை எல்லாம் வியப்போடு பார்த்து கொண்டிருந்த காலம் மலையேறி விட்டது என்பதை உணர்த்துவது போல் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மும்பை வருகையையொட்டி பாதுகாப்பு விஷயங்களில் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கேட்ட மாற்றங்களை செய்து கொடுக்க மும்பை காவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
எப்போதும் அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு படையே தலைமையேற்று செயல்படுத்துவது வழக்கம். ஆனால் அதை ஏற்க மறுத்த மும்பை காவல்துறை ஒபாமாவின் பாதுகாப்பு விஷயங்களை தாங்கள் பொறுப்பேற்று கொள்வதாக சொன்னதோடு ஒபாமாவின் பாதுகாப்பு அதிகாரிகள் அமெரிக்காவிலிருந்து துப்பாக்கிகளை இறக்குமதி செய்து கொள்ள அனுமதி மறுத்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநில அதிகாரிகளுடன் வெள்ளை மாநில அதிகாரிகள் தங்கள் அதிபர் வருகையின் போது வழமையான பாதுகாப்பு ஏற்பாடுகளில் கொஞ்சம் நெளிவு சுளிவோடு நடந்து கொள்வதற்காக இது வரை ஐந்து முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை மும்பை காவல்துறை ஏற்க மறுத்துள்ளது.
ஒபாமாவுடன் வரும் 3000 நபர்களுக்கும் சுங்க சோதனையில் சலுகை காட்டுமாறு கோரப்பட்டதாகவும் ஆனால் அனைவருக்கும் வழமையாய் செய்ய வேண்டிய எழுத்து வேலைகளை செய்யாமல் அனுமதிக்க முடியாது என்றும் சொல்லப்பட்டதாகவும் மும்பை காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விழாக்களின் உள்ளே நுழைவது , வெளியேறுவது போன்றவற்றை கட்டுபடுத்துவதும் மும்பை காவல்துறையின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என தெரிகின்றது.ஒபாமாவின் அந்தரங்க பாதுகாவலர்கள் தவிர மற்ற அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் ஆயுதம் ஏந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் மும்பை நகர காவல்துறையே இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் படைத்ததாகவும் இருக்கும் என்றும் தெரிகிறது. ஒபாமா மணி பவனுக்கு வருகை தரும் போது அருகிலுள்ள கட்டிடங்களில் இருந்து புகைப்படம் எடுக்க கூடாது என்ற கோரிக்கையை நிராகரித்துள்ள மும்பை காவல்துறை ஜனநாயக நாட்டில் ஏகப்பட்ட கெடுபிடிகளை விதிக்க முடியாது என்று சொன்னதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மும்பை வந்திறங்கினார் ஒபாமா!

அமெரிக்க அதிபர் ஒபாமா மூன்று நாள் பயணமாக சனிக்கிழமை பிற்பகல் 12.50 மணிக்கு மும்பை வந்திறங்கினார். ஒபாமாவுடன் அவரது மனைவி மிச்சேல், அமைச்சரவை சகாக்கள், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர், மற்றும் வணிகப் பிரமுகர்கள் 200 பேர் வந்துள்ளனர்.
அமெரிக்க விமானப்படை விமானமான ஏர் ஃபோர்ஸ் 1 விமானத்தில் வந்திறங்கிய ஒபாமாவையும் மற்றவர்களையும் மகாராஷ்டிர மாநில முதல்வர் அஷோக் சவான், மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் டிமோதி ரோமர் மற்றும் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கர் ஆகியோர் வரவேற்றனர்.
26/11 மும்பை தாக்குதல்களில் உயிர் இழந்தோருக்கு ஒபாமாவும் அவரது மனைவியும் அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்குப் பின் மும்பை தாஜ்மஹால் ஓட்டலில் தங்கும் மிக முக்கியப் புள்ளி ஒபாமா என்பது குறிப்பிடத் தக்கது.

குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது

இந்து மத வலதுசாரி பயங்கரவாதிகள் மூவர் நேற்று தீபாவளி தினத்தன்று  இரவு புனித நூல்களான குர்ஆன், பைபிள் ஆகியவற்றை பகிரங்கமாக எரித்து சாம்பலாக்க திட்டமிட்டு அறிவித்திருந்தனர். சுவிட்சர்லாந்தில் வாழும் இவர்கள் பின்னர் கைது செய்யப்பட்டனர்.
புனித நூல்களை எரிக்கும் அறிவிப்பைத் தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இம்மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில்  முன்னிலைப்படுத்தினர்.
இம்மூவரில் பிரதானக் குற்றவாளியான  நாற்பத்திரண்டு வயதான டேட்டுஸ் பனகல் லியோ  என்பவர்  இனங் காணப்பட்டுள்ளார்.இவர்   கடந்த எட்டு வருடங்களாக சுவிட்ச்சர்லாந்தில் வசித்து வருகின்றார். நீதி மன்றத்தில் இவர் வாதிடுகையில்  குர்ஆன், பைபிள் இரண்டும் தீய சக்தியான சாத்தானின்  இரு கண்கள் மாதிரி, இந்நூல்களை குழந்தைகள் படிப்பதை தாம் விரும்பவில்லை  என்று கூறி இருக்கின்றார்.
மத மோதல்களுக்கு இடங் கொடாத சுவிஸ்சில் இவர்கள் குற்றவாளி என்று அறியப்பட்டால் நாடு கடத்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
.

30 அக்டோபர், 2010

பிரிட்டனில் அதிக குழந்தைகளுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் 'முகம்மது

யுனைட்டட் கிங்டம் ஆஃப் கிரேட் பிரிட்டன் (சுருக்கமாக யு.கே.) என்று அழைக்கப்பட்டும் பிரித்தானியாவில் புதிதாகப் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு அதிகமாக வைக்கப்படும் பெயர் 'முகம்மது' என்று சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக கார்டியன் நாளிதழ் கூறியுள்ளது.

இது கடந்த 14 வருடங்களாக முன்னணியில் இருந்த 'ஜாக்' (jack) என்ற பெயரை முந்தியுள்ளது. சென்ற வருடம் மூன்றாவது வரிசையில் 'முகம்மது' என்ற பெயர் இருந்தது. இந்த வருடம் அது முன்னிலைக்கு வந்துள்ளது.

இதுபோல 'ஓலிவியா' (Olivia ) என்ற பெண் குழந்தைகளுக்கான பெயர் கடந்த வருடத்தை போலவே இந்த வருடமும் முன்னிலையில் உள்ளது.

மொத்தம் 7549 ஆண் குழந்தைகளுக்கு 'முகம்மது' என்ற பெயர் பல்வேறு வித எழுத்து வடிவில் வைக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள பிரபல நாளிதழ் டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.

ஆனால் முகம்மது என்ற பெயர் ஆங்கிலத்தில் பல்வேறு தவறான எழுத்தில் (அதாவது Muhammad மற்றும் Mohammad) அமையாமல் Mohmmed என்ற சரியான ஆங்கில எழுத்தில் அமைந்து இருந்தால் இந்த கணக்கெடுப்பில் முகம்மது என்ற பெயர் இன்னும் அதிகரித்து இருக்கும் என்ற கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த கணக்கெடுப்பில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதியில் 16 வகையான எழுத்தில் அமைந்த முகம்மது என்ற பெயர் சேர்க்கப்படவில்லை. 


முகம்மது என்பது முஹம்மத் என்ற சரியான உச்சரிப்பு கொண்ட அரபியில் அமைந்த பெயர். முகம்மது  உலக முழுவதும் வாழும் 1.66 பில்லியன் (166 கோடி) முஸ்லிம்களின் கடைசி இறை தூதர் ஆவார். அவரது பெயரை முஸ்லிம்கள் உச்சரிக்கும் போதெல்லாம் கூடவே 'ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்' என்று சேர்த்து அழைப்பார்கள் .இதன் பொருள் "அல்லாஹ் தன்னுடைய தூதரான முஹம்மது மீது கருணையும் சாந்தியும் பொழிவானாக" என்பதாகும்.

28 அக்டோபர், 2010

இஸ்லாமிய வங்கி முறையை RBI அறிந்து கொள்ள பிரதமர் வேண்டுகோள்!

மலேசியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய வங்கி முறை குறித்து ஆய்வு செய்து அதனை இந்தியாவில் அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி முனைய வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
இஸ்லாமிய வங்கியலை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பல தரப்பிலும் கோரப்படுகிறது. இந்த கோரிக்கையை செயல்படுத்தும் விதமாக, மாலேசிய வங்கிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய வங்கி முறை குறித்து ரிசர்வ் வங்கி ஆய்வு செய்ய வேண்டும் என்று நான் ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்கிறேன்என்று பிரதமர் மன்மோகன் சிங் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் கூறினார்.
மலேசியாவில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய வங்கி முறை குறித்து அறிய இந்தியா விரும்புகிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் பிரதமர் இவ்வாறு கூறினார்.
அரசு முறைப் பயணமாக மலேசியா சென்றுள்ள பிரமர், மலேசியப் பிரதமர் முஹம்மது நஜீப் துன் அப்துல் ரஜாக்குடன் பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல் குறித்து விரிவாகப் பேசினார்.
வட்டியில்லா வங்கி முறையான இஸ்லாமிய வங்கியை இந்தியாவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கிக்கு பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

26 அக்டோபர், 2010

பாபர் மசூதி: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அஹ்மதி

புது டில்லி : 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டதை, "உச்சநீதிமன்றம் தடுக்க வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டிருந்தால் தடுத்திருக்க முடியும்" என்று உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அஹ்மதி கருத்து தெரிவித்துள்ளார்.
அயோத்தி தீர்ப்பு குறித்த மக்கள் சமூகத்தின் நிலைப்பாடு எனும் தலைப்பில் இன்ஸ்டியூடூட் ஆப் ஆஃப்ஜக்டிவ் ஸ்டடிஸ் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் பேசிய அஹ்மதி, பாபர் மசூதி இடிப்புக்கு முன் உச்சநீதிமன்றத்தில் அப்போதைய அட்டர்னி ஜெனரல் மிலன் பானர்ஜி மசூதி இடிக்கப்படுவதற்கு ஏராளமான சாத்தியக்கூறுகள் உண்டு என்றும் அந்நிலத்தை உடன் மத்திய அரசிடம் ஒப்படைத்து மசூதி இடிக்கப்படுவதை தடுத்து நிறுத்தும்படி உச்சநீதிமன்றத்தில் அப்போது இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் வெங்கடாச்சலையா மற்றும் ரேயிடம் வலியுறுத்தியதை நினைவூட்டினார்.
அட்டர்னி ஜெனரலின் கோரிக்கையை ஏற்று அந்நிலத்தை மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் ஒப்படைத்திருந்தால் பாபர் மசூதி இன்றும் அதே இடத்தில் இருந்திருக்கும் என்று கூறிய அஹ்மதி, அதற்குப் பதிலாக அடையாள கரசேவை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது தவறானது என்றும் பாபர் மசூதி இடிப்புக்காக கல்யாண் சிங்குக்கு வழங்கப்பட்ட ஒரு நாள் தண்டனை நகைப்புக்கிடமானது என்றும் கூறினார்.
மேலும் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பை ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பாகவே கருத முடியவில்லை என்றும் இந்திய அரசியல் சாசனம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என்றும் அஹ்மதி கூறினார். மேலும் இவ்விழாவில் பேசிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சையது சஹாபுதீன் உள்ளிட்ட பலர் இது முஸ்லீம் மற்றும் இந்து நம்பிக்கைக்கும் இடையிலான மோதல் அல்ல என்றும் அரசியல் சாசனம் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் தீர்ப்பு கொடுக்கபட வேண்டுமே தவிர குரான் மற்றும் கீதையின் அடிப்படையில் அல்ல என்றும் கூறினர்

25 அக்டோபர், 2010

நீதிமன்றத்தில் அழுதுகொண்டே சாட்சியமளித்தார் ஜாகியா ஜாஃப்ரி !

அஹ்மதாபாத்: கடந்த 2002 குஜராத் கலவரங்களின் போது, குல்பர்க் சொசைடி என்ற பகுதியில் நடைபெற்ற கலவரத்தில் காங்கிரஸ் எம்.பி. யான இஹ்ஸான் ஜாஃப்ரி இந்துத்துவாவினரால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இது குறித்து கடந்த வெள்ளிக்கிழமை சாட்சியமளித்த அவரது மனைவி ஜாகியா ஜாஃப்ரி, இஹ்ஸான் ஜாஃப்ரி தனது வீட்டிலிருந்து கொலைவெறி பிடித்த கும்பலால் இழுத்து வரப்பட்டு, அவரது உடைகள் கிழிக்கப்பட்டு, வெட்டப்பட்டு பின்னர் உயிருடன் எரிக்கப்பட்டார்; இதனை எனது வீட்டின் முதல் தளத்தில் இருந்து ஜன்னல் வழியாக பார்த்தேன் என்று அழுதவாறே நீதிமன்றத்தில் கூறினார்.
3000 பேர் கொண்ட ஆயுதம் தரித்த கும்பலால் தாக்குதலுக்குள்ளான அன்றைய தினத்தில் (ஃபிப்ரவரி 28, 2002) தானும் குல்பர்க் சொசைடியைச் சேர்ந்த மக்களும் எவ்வாறெல்லாம் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டோம் என்பதை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜோஷி முன்னிலையில் விளக்கினார் திருமதி ஜாகியா. கோத்ரா ரயில் விபத்து நடந்த அடுத்த நாள் நடந்த இக்கொடூரத் தாக்குதலில் மட்டும் மொத்தம் 69 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
மேலும் அவர் அந்த துயர சம்பவத்தை விளக்கிக் கூறுகையில், வெறிபிடித்த கூட்டம் ஒன்று குல்பர்க் சொசைடியின் வாயிலையும், ஒருபக்க சுற்றுச்சுவரையும் உடைத்துக் கொண்டு உள்நுழைந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் வாள்களாலும், இன்ன பிற ஆயுதங்களாலும் தாக்கியது; பல உயிர்கள் பறிக்கப்பட்டன; அவர்களது உடல்கள் எனது வீடெங்கும் பரவிக் கிடந்தது என்று கூறினார்.
போலீசார் மாலை நேரத்திலே சம்பவ இடத்திற்கு வந்த பிறகே நான் முதல் தளத்திலிருந்து கீழே வர முடிந்தது. கீழே வந்து பார்த்த போது, வராண்டாவில் எனது பக்கத்து வீட்டுக்காரரான கஸம்பாயினுடைய மனைவியின் உடலும் கர்ப்பிணியான அவரது மருமகளின் உடலும் மோசமாக பாதிக்கப்பட்டு கிடந்தது; அந்த கர்ப்பிணிப்பெண் வயிற்றுப் பகுதியில் கத்தியால் கிழிக்கப்பட்டிருந்ததால் அவரது கர்ப்பம் வெளியில் கிடந்தது என்றும் ஜாகியா கூறினார். தனது வீட்டின் பின்புறமும் பல உடல் கிடந்ததாக மேலும் அவர் கூறினார். பின்னர் அவர் எதிர்தரப்பு வழக்கறிஞரால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டார்.
2002ல் நடைபெற்ற குஜராத் கலவரம் முஸ்லிம்களுக்கு எதிராக ஆளும் அரசே கட்டவிழ்த்து விட்ட ஒரு இன அழிப்பு என்றும், மதச்சார்பற்ற இந்தியாவின் இறையாண்மைக்கே ஏற்பட்ட அவமானம் என்றும் மனித உரிமை அமைப்புக்களும், சமூக நல ஆர்வலர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். இச்சம்பவம் நடந்த போது பிரதமராக இருந்த வாஜ்பேயி, "இனி நான் எப்படி சர்வதேச சமூகத்தை சந்திக்க முடியும்" என்று கூறியதும், குஜராத் அரசு நீதிமன்றங்களின் கண்டணங்களுக்கு ஆளானதும், கலவரம் குறித்த பல்வேறு வழக்குகள் குஜராத் நீதிமன்றங்களிலிருந்து வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டதும், குஜராத் கலவரத்தை காரணம் காட்டியே முதல்வர் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விசா வழங்க மறுத்ததும் குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய மதத்துக்கு மாறிய டோனி பிளேரின் உறவினர்

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமராக இருந்தவர் டோனி பிளேர். இவரது மனைவி செர்ரி பிளேரின் ஒன்று விட்ட சகோதரி லாரன் பூத். 43 வயதாகும் இவர் இஸ்லாமிய மதத்துக்கு தான் மாறியுள்ளதாக அறிவித்துள்ளார்.
லாரன் பூத் ஈரானில் உள்ள பிரஸ் தொலைக்காட்சியில் வேலை செய்து வருகிறார். அண்மையில் ஈரானில் கோம் நகரத்திலுள்ள பாத்திமா மாசூம் என்ற சன்னதியில் இருக்கும்போது ஏற்பட்ட ஆன்மீக மன மாற்றமே தனது மத மாற்றத்திற்கு காரணம் என லண்டனிலிருந்து வெளிவரும் டெய்லி மெயில் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
தற்போது ஹிஜாப் எனும் இஸ்லாமிய ஆடையை அணிவதாகவும் 5 வேளை தொழுவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது மது அருந்துவதில்லை என குறிப்பிட்ட அவர் 25 வருடங்களாக இருந்த இந்த தீய பழக்கத்தை தற்போது விட்டுவிட்டதாக குறிப்பிட்டார். தினமும் மது அருந்தாமல் இருக்க முடியாத தான் இஸ்லாத்திற்கு மாறிய பிறகு அந்த எண்ணம் கூட இல்லாமல் இருப்பது கண்டு ஆச்சர்யப்படுவதாக கூறினார். குர்ஆனை தினமும் படித்து வருவதாகவும் கூறியுள்ள லாரன் தற்போது 60 பக்கங்கள் வரை படித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
வரும்காலங்களில் பர்தா அணிவீர்களா என்ற கேட்கப்பட்டதற்கு வரும்காலத்தில் தனது ஆன்மீகப் பாதை எங்கே அழைத்துச் செல்லும் என யார் அறிய முடியும் என பதிலளித்தார். காஸாவின் மீதான இஸ்ரேலின் பொருளாதாரத் தடையை எதிர்த்து 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 46 நபர்களுடன் சைப்ரஸிலிருந்து காஸாவுக்கு சென்றுள்ளார் லாரன் பூத். ஈராக்கிற்கு எதிரான யுத்தத்தையும் எதிர்த்தவர் பூத்.

24 அக்டோபர், 2010

இராக் போரில் 66 ஆயிரம் பொதுமக்கள் பலி: விக்கிலீக்ஸ் அதிர்ச்சி தகவல்

நியூயார்க்/வாஷிங்டன், அக்.23: இராக் போரில் 66 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்ட அதிர்ச்சித் தகவலை "விக்கிலீக்ஸ்' இணையதளம் வெளியிட்டுள்ளது.
இராக் போர் குறித்து 4 லட்சம் ஆவணங்களை திங்கள்கிழமை வெளியிடப் போவதாக "விக்கிலீக்ஸ்' ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த ஆவணங்கள் வெளியானால் பொதுமக்களுக்கும் இராக்கில் உள்ள பன்னாட்டு வீரர்களின் உயிருக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று பென்டகனில் பன்னாட்டுப் படைகளின் (நேட்டோ) தலைவர் ஆண்டர்ஸ் ஃபாக்ஸ்ராஸ்முùஸன் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் 4 லட்சம் ஆவணங்களின் முக்கிய தகவல்களை "நியூயார்க் டைம்ஸ்' நாளேடு சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.
இராக் போரின்போது நடத்தப்பட்ட கொடுமைகள், சித்திரவதைகள் ஆகியன ஆவணங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன. 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலான சம்பவங்கள் அனைத்தும் இதில் இடம்பெற்றுள்ளன. இராக்கில் உள்ள பொதுமக்களில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்தும், இராக் ராணுவத்துக்கு ஈரான் எந்த வகையில் உதவியது என்பதும் இராக் ராணுவ மற்றும் போலீஸôரின் செயல்பாடு குறித்தும் டைம்ஸ் நாளேட்டில் தகவல் வெளியாகியுள்ளது.
உலகிலேயே ராணுவத்தின் போர் ரகசியம் இந்த அளவுக்கு அம்பலமானது இதுவே முதல் முறை. இராக் போரில் 1,09,032 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பொதுமக்கள் 66,081, ஊடுருவல்காரர்கள் 23,984, இராக் ராணுவத்தினர் 15,196, கூட்டுப் படை வீரர்கள் 3,771 பேர் உயிரிழந்துள்ளனர்.
மொத்தம் 3,92,000 ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
விக்கிலீக்ஸ் இணையதள தகவல் வெளியீட்டால் அமெரிக்க ராணுவத்துக்கு ஏற்பட்டுள்ள அவப் பெயர், தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆராய ஒரு குழுவை பென்டகன் நியமித்துள்ளது என்று பென்டகன் பத்திரிகை தொடர்பு அதிகாரி ஜெஃப் மாரெல் தெரிவித்தார்.
அச்சுறுத்தல் அதிகமுள்ள 300 இராக்கியர்களை அமெரிக்க ராணுவம் கண்டறிந்துள்ளது. ஆனால் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
போர் குற்றத்துக்கான நிர்பந்தங்கள் குறித்த கள அறிக்கையில் அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப்படைகளும் இராக் அரசும் எந்த அளவுக்கு வரம்பு மீறியுள்ளன என்பது புரியும் என்று விக்கிலீக்ஸ் இணையதள தலைமை ஆசிரியர் ஜூலியன் அஸôஞ்ஜ் குறிப்பிட்டுள்ளார்.
அடிப்பது, தீயிட்டு கொளுத்துவது, சவுக்கால் அடிப்பது உள்ளிட்ட கொடுமையான வன்முறைகளும் நிகழ்த்தப்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தியில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆப்கானிஸ்தான் தொடர்பான 92 ஆயிரம் ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இம்முறை விக்கிலீக்ஸ் இணையதளத்தின் ஆவணங்கள் நியூயார்க் டைம்ஸ், தி கார்டியன், லெ மோன்டே, அல் ஜஸீரா, டெர் ஸ்பெகல் ஆகிய ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
நியூயார்க் டைம்ஸ் நாளேட்டில் சிறப்புப் பேட்டியில் ஜெஃப் மாரெல் கூறியிருப்பது: தனிநபரும் சட்டத்தை மீறலாம் என்பதற்கு விக்கிலீக்ஸ் வழிவகை செய்துள்ளது. ரகசிய தகவல்களை உலகிற்கு வெளியிட்டதோடு, இவை எதிரிகள் கையில் கிடைக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் குறித்து விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்களை அங்குள்ள பயங்கரவாதிகள் ஆராய்ந்து வருகின்றனர். அதன் மூலம் ரகசியங்களை அறிந்து ராணுவத்துக்கு எதிராக அவர்கள் செயல்பட வழியேற்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவத்தினரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இத்துடன் இராக்கில் உள்ள கூட்டுப் படைக்கும் இது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2006-ம் ஆண்டு டிசம்பரில்தான் மிக அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரே மாதத்தில் 3,800 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஷியா-சன்னி முஸ்லிம் இனத்தவரிடையே மோதல் ஏற்பட்டபோது ராணுவம் ஷியா பிரிவுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
சில சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அமெரிக்க ஹெலிகாப்டரை வீழ்த்திய நிகழ்வுகளும் நடந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

16 அக்டோபர், 2010

தமிழா உழைத்திடு, இலவசத்தை வெறுத்திடு” - முகவரியில்லா துண்டு பிரசுரம் வினியோகம்

 பல பகுதிகளில் ”இன்றைய தமிழகம்'” என்ற தலைப்பில் ”மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி” என்ற பெயரில் முகவரியில்லா துண்டுப்பிரசுரம் கடந்த சில தினங்களாக மர்ம ஆசாமிகளால் வினியோகிப்பட்டு வருகின்றது.
"ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார், எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?' "நான் கேட்டேன், கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கை ஓட்ட முடியும்?' அவர் சிரித்தபடி சொன்னார், "என்னை பார் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன். போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப் படம் பார்த்திடுவேன். உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடுவேன். உயர் சிகிச்சை பெற்றிடுவேன், ராஜமரியாதையுடன். நான் யார் தெரியுமா? தமிழ் நாட்டு குடிமகன்!'
"என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்கு காஸ் அடுப்பு இலவசம், பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம். எதற்காக உழைக்க வேண்டும்? மனைவி, பிள்ளை பெற்றால் 6,000 ரூபாய் இலவச சிகிச்சையுடன். குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில். படிப்பு, சீருடை, முட்டையுடன் மதிய உணவும் இலவசம். பாடப்புத்தகம் இலவசம். படிப்பும் இலவசம். பள்ளி செல்ல பஸ் பாஸ் இலவசம். தேவையென்றால் சைக்கிளும் இலவசம். "பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை 25,000 ரூபாய் இலவசம், ஒரு சவரன் தாலியுடன், திருமண செலவும் இலவசம். தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம். மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கை யிலும். நான் எதற்கு உழைக்க வேண்டும்!'
"இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை. இதில் நீ எந்த வகை? எதை எடுத்து கொள்வது? உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய். இலவசம் நின்று போனால் உன் நிலை? உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய்? இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால், அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை, இன்னும் வெகு தொலைவில் இல்லை. தமிழா விழித்தெழு, உழைத்திடு, இலவசத்தை வெறுத்திடு, அழித்திடு, தமிழகத்தை தரணியில் உயர்த்திடு. நாளைய தமிழகம் நம் கையில், உடன் பிறப்பே சிந்திப்பாயா? மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி!' இவ்வாறு அத்துண்டுப்பிரசுரத்தில் அச்சிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே எதிர்கட்சிகள் தமிழக அரசின் இலவச திட்டங்கள் குறித்து கடுமையாக சாடி வருகின்றன. இலவச திட்டங்களை தேர்தல் வாக்குறுதியாக அளித்தே கடந்த தேர்தலில் தி.மு.க. ஆட்சியை பிடித்தது என்று அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தி வந்தன. இது தவிர, ஒரு சில திரைப்படங்களில் கூட இலவச திட்டங்களை கேலி செய்து நகைச்சுவை காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. பத்திரிக்கைகளிலும் இணைய தளங்களிலும் பல்வேறு கட்டுரைகள் எழுதப்பட்டிருந்தன. இவ்வாறிருக்கையில், இந்த துண்டுப்பிரசுர வினியோகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

7 அக்டோபர், 2010

பாபர் மசூதி தீர்ப்பு - சீதையின் சமையலறையில் கருகிய நீதி

பாபர் மஸ்ஜித் உரிமை குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி நடுநிலையாளர்களுக்கும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆவணங்கள் மற்றும் சாட்சிகளின்படி சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய நீதிபதிகள், ஒரு சாராரின் நம்பிக்கையை மட்டும் நிலைநாட்டியுள்ளமை உலக அரங்கில் இந்திய நீதிமுறையின் லட்சணத்தைக் கேலிக்கூத்தாக்கி உள்ளது!
நான்கரை நூற்றாண்டுகள் அனுபவ பாத்தியதையுள்ள பாபர் மசூதியை 1992, டிசம்பர் 6 அன்று சங்பரிவாரங்கள் வன்முறையாக ஆக்கிரமித்து இடித்துத் தகர்த்தனர். ஒருவரின் சொத்தை ஆக்கிரமிப்பதும், அவர் உடமைக்குச் சேதம் விளைவிப்பதும் சட்டவிரோதம். இதனைத்தொடர்ந்து மதக்கலவரங்களால் ஆயிரக்கணக்கில் முஸ்லிம்களைக் கொன்று குவித்தது அதைவிடக்கொடிய கிரிமினல் குற்றம்.

இதற்கெல்லாம் காரணமானவர்களை விசாரித்துத் தண்டிக்க முயற்சி எடுக்காத நீதிமன்றங்கள், பாபர் மசூதி உரிமை குறித்த வழக்கில் வழங்கியுள்ள தீர்ப்பு தேசிய ஒருமைப்பாட்டிற்கு வேட்டுவைக்கும் என்பதோடு மக்களுக்கு இருக்கும் சட்டத்தின் மீதான நம்பிக்கையையும் தகர்க்கக்கூடியதாக அமைந்துள்ளது. சட்டப்படியல்லாத இத்தீர்ப்பு(கட்டப்பஞ்சாயத்து), ஏற்கனவே ராமர் பெயரால் முடக்கி வைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் சேதுக்கால்வாய் திட்டத்தையும் இதே நம்பிக்கையின் அடிப்படையில் நிரந்தரமாக முடக்கி வைக்க வழிகோலும்.
கடந்த 24-09-2010 அன்று வெளியாக இருந்த தீர்ப்பு, உச்சநீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட மனுவின் மீது இடைக்காலத்தடையாணை பெறப்பட்டு 6 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இறுதியாக, உச்ச நீதிமன்றத்தால் அப்புகார் மனு தள்ளுபடி செய்யப்பட, கடந்த 30-09-2010 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் இம்முறையற்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இத்தீர்ப்பு வெளியாவதற்கு முன்னர், பாபர் மசூதி நிலம் யாருக்குச் சொந்தம் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம் என்றும் அதில் நீதிமன்றங்களால் தீர்ப்பு கூற இயலாது என்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் சங்பரிவாரங்கள் அறிவித்திருந்தன. எனினும் பொதுஅமைதிக்கு ஊறு விளைவிப்பவர்களை முன்கூட்டியே கைது செய்து சிறையிலடைக்கும் "குண்டர் தடுப்புச் சட்டம்", தீர்ப்பு வெளியாகும் சமயம் சங்பரிவாரங்கள் மீது பாயவில்லை. இதனால் சங்பரிவாரங்களில் குண்டர்களே இல்லை என்பது அர்த்தம் அல்ல என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் நன்றாகத் தெரியும். சுதந்திர, குடியரசு தினங்களுக்கு முன்னரும் ஒவ்வொரு டிசம்பர் 6 க்கு முன்னரும் சந்தேகத்தின்பேரிலும் பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரிலும் முஸ்லிம்களைக் கைது செய்யும் சட்டம், நாட்டில் திட்டமிட்டே கலவரம் உருவாக்கிக் கொண்டிருக்கும் சங்பரிவாரங்களை இத்தீர்ப்பு வெளியாவதற்கு முன்பு சந்தேகிக்கவோ முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் கூட கைது செய்யவோ முன்வரவில்லை!
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒப்புக்குத்தான்; உண்மையான தீர்ப்பு உச்ச நீதிமன்றம் வழங்குவதுதான் என்றும், இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம் என்றும் சமாதானம் சொல்லப்படுகிறது. ஒன்றுக்கும் உதவாத தீர்ப்புக்கு ஏன் 60 ஆண்டுகால தாமதம் என்ற கேள்விக்கு யாரிடம் பதில் பெறுவது? தாமதமாக வழங்கப்படும் நீதிகூட அநீதியே என்று கருதப்படும் போது முஸ்லிம்களின் உடமை விசயத்தில் 60 ஆண்டுகள் தாமதப்படுத்தி அலகாபாத் நீதிமன்றம் அநீதி வழங்கியுள்ளது!

24-09-2010 வரை எந்த நீதிமன்றத் தீர்ப்பும் எங்களைக் கட்டுப்படுத்தாது என்று சொல்லிவந்த சங்பரிவாரங்கள் 30-09-2010 தேதியிட்ட தீர்ப்பைத் தலையில் வைத்துக் கொண்டாடுவதிலிருந்தே இதன் லட்சணம் விளங்குகிறது. தீர்ப்பு எப்படி இருப்பினும் "மேல்முறையீடு செய்வது உறுதி" என்ற அத்வானிக்கும் செலக்டிவ் அம்னீஸியா என்று நினைக்குமளவு தீர்ப்பை வரவேற்றுள்ளார். மூன்றில் இருபங்கு உரிமையைப் பெற்றுள்ளபோதும் "இந்துக்கள்" அமைதி காக்க வேண்டும் என்று RSS தலைவர் வேண்டுகோள் வைக்கிறார்! யாரை ஏமாற்ற இந்தக் கபட நாடகங்கள்!

செப்டம்பர் 24 -30 க்கு இடைப்பட்ட ஆறுநாட்களில் என்ன நடந்தது? சட்டம் எங்களைக் கட்டுப்படுத்தாது என்று முழங்கிய சங்பரிவாரங்கள் மகுடிப் பாம்பாய் சட்டத்திற்குக் கட்டுப்பட்ட அதிசயம் எப்படி நிகழ்ந்தது? என்ற கேள்விகளுக்கு விடைதேட அலைய வேண்டியதில்லை. சட்டமாவது மண்ணாங்கட்டியாவது என்பது சங்பரிவாரங்களின் இயல்பெனில், நீதியாவது மண்ணாங்கட்டியாவது என்று காங்கிரஸும் நடந்து கொண்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும்கூட நியாயமான தீர்ப்பை உடனடியாக எதிர்பார்க்க முடியாதளவுக்கு நம்நாட்டு சட்டத்தின் ஓட்டைகள் பல்லிளிக்கின்றன. காஞ்சி சங்கராச்சாரியாருக்கு எதிரான குற்றச்சாட்டை விசாரிக்க முடியாதளவு 'பக்தி'முற்றிப்போன நீதிபதிகளும், லவ் ஜிஹாத், இஸ்லாமிய தீவிரவாதம் என்றெல்லாம் வெளிப்படையாகவே விஷம்கக்கிய காவியுடை தரிக்காத நீதிபதிகளும் நம் நாட்டு நீதிமன்றங்களில் உள்ளதை நினைவில் கொள்ளவும்.

பாபர் மசூதி நடுவில்தான் ராமன் பிறந்தான் என்று இரு நீதிபதிகள் கூறியுள்ளனர். இன்னொரு நீதிபதியோ, பாபர் மசூதி கோவிலை இடித்துக் கட்டப்பட்டதல்ல என்கிறார். இடிக்கப்படாத கோவிலில் முஸ்லிம்கள் தொழமாட்டார்கள் என்று தன் பங்குக்கு இன்னொரு நீதிபதி குழப்புகிறார். 1949 வரை முஸ்லிம்கள் அங்கு தொழுது வந்துள்ளதால் அங்கு கோவில் இருந்திருக்கவில்லை என்றுதானே அர்த்தமாகும்!

RAமர் பிறந்ததாக நீதிபதிகளால் சொல்லப்பட்டுள்ள (சங்பரிவாரங்களும் இதையேதான் சொல்லி வருகிறார்கள்) இடம் இந்துக்களுக்கு உரியதாம்! அதாவது சிலைகளை வணங்காத முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலத்தின் நடுவில் இந்துக்கடவுளின் உருவச்சிலை! என்னே ஒரு வக்கிரம் பாருங்கள்! அயோத்தியில் பிறந்ததாக எவ்வித ஆதாரங்களும் இன்றி 'நம்ப'ப்படும் ராமன், பாபர் மசூதிக்குச் சற்று தள்ளி பிறந்ததாக 'நம்பி'னால் குடியா மூழ்கி விடும்?
பாபர்மசூதி, ராமர் கோவிலை இடித்துக் கட்டப்பட்டதல்ல என்ற நீதிபதி கான் அவர்களின் தீர்ப்பை கருத்தில் கொண்டாலே போதும், சங்பரிவாரங்களின் ஐம்பதாண்டுகால மோசடிகள் முடிவுக்கு வந்துவிடும். ஏனெனில் இதுவரை ராமன் பிறந்த இடத்தில் கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டுள்ளது என்பதே பரிவாரங்களின் நம்பிக்கை. தீர்ப்பை ஏற்றுக்கொண்ட சங்பரிவாரங்கள் இதையும் ஏற்றுதானே ஆகவேண்டும்! ஆனால் ஏற்பார்களா?
மொத்ததில் மூன்று நீதிபதிகளும் வழங்கிய தீர்ப்பில் நீதி நிலைநாட்டப்பட வில்லை. ஒரு சாராருக்கு இழைக்கப்பட்ட அநீதி, இன்னொரு சாராருக்கான நீதியாகக்கருத முடியாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மென்மேலும் பாதிப்பை ஏற்படுத்துவதை ஒருபோதும் நீதியான தீர்ப்பாகக் கருத முடியாது. இனிமேல் எந்த ஆட்சியிலும் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என்று இந்திய முஸ்லிம்கள் நம்பிக்கை இழக்கும்முன்னதாக, சட்டம் கடமையைச் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் வாய்மையே வெல்லும் என்பதெல்லாம் வெறும் வார்த்தை ஜாலம்தான்!

விஷம கேள்விக்கு அறிவான வணங்காமுடி பதில்!

பாபர் மசூதி ஒன்றும் புனிதத்தலம் கிடையாதுதானே. இந்திய முஸ்லிம்களுக்கு மேலும் இழப்பு ஏற்படாமல் இருக்க வேண்டி அவர்கள் விட்டுக் கொடுத்தால் என்னவாம்? - ஜோதி, குத்தாலம்
பாபர்மசூதி புனிதத் தலமா இல்லையா என்பதை முஸ்லிம்கள் முடிவு செய்து கொள்வார்கள். ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்களின் வழிபாட்டுத்தலம் புனிதம்தான்.
முஸ்லிம்களுக்கு மேலும் இழப்பு ஏற்படாமல் இருக்க" என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது, பால்தாக்கரே, நரேந்திரமோடி ஸ்டைலில் உருவாகும் இழப்பா?
விட்டுக்கொடுப்பதா அல்லது போராடி மீட்பதா என்பது வழக்கில் தொடர்புடையவர்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயம்.
நமது தளத்தில் "ரஸ்ஸல் எழுதிய அலசலி"ல் சொல்லியுள்ளபடி, முஸ்லிகளுக்கு விட்டுக்கொடுத்து இந்துக்களின் பெருமையை உலகுக்கு உணர்த்தலாமே?

5 ஆகஸ்ட், 2010

வறட்டு பிடிவாதம் வேண்டாம்! (dinamalar) 03.10.2009

எம்.நயினார் முகம்மது, வீரசோழனிலிருந்து எழுதுகிறார்: "இந்தியாவின் அனைத்து மாநிலத்திலும் இந்தி பாடம் அமல்படுத்த வேண்டும்' என்ற மத்திய அமைச்சர் கபில் சிபல் அறிவிப்பு, வரவேற்கத்தக்க விஷயம். உடனே தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, "மூன்றாவது பாடமாக இந்தி மொழியை அனுமதிக்க முடியாது' என்று பேட்டி அளித்திருப்பது கண்டனத்துக்குரியது. காரணம், உலக அள வில் இந்தி மொழி வாழ்வாதாரமாக இன்று திகழ்கிறது என்றால் ஐயம் இல்லை. லண்டனில், பாகிஸ் தானை சேர்ந்த ஒரு நண்பர் என்னுடன் வேலை செய்தார். அவர் என் நண்பரை பார்த்து கேட்டார். "நீங்கள் இந்தியன் என்கிறீர்கள். ஆனால், இந்தி தெரியாது என்கிறீர்களே... இது மிகவும் வினோதமாக இருக்கிறது' என்றார். நிச்சயமாக அவருக்கு அது வினோதம் தான். காரணம், தமிழகம் என்ற மாநிலம் உண்டு. அங்கு இருக்கும் ஒரு பிரதான அரசியல் கட்சி காலம் காலமாக இந்தியை எதிர்க்கிறது என்பது அவர் அறியாத விஷயம். தி.மு.க., அரசு, இந்தியை எதிர்த்து என்ன சாதிக்க போகிறது என்று தெரியவில்லை. தங்கம் தென்னரசு படித்தவர், கல்வி அமைச்சராக வேறு இருக்கிறார். இவர் தனது அறிவுக்கு திரையிட்டு, முதல்வரை மகிழ்விக்கும் வகையில் பேசியது வேதனைக்குரியது. தி.மு.க., அரசு தனது வறட்டு பிடிவாதத்தை ஓரம்கட்டி, இந்தி எதிர்ப்பை கைவிட வேண்டும். தமிழர்கள், தமிழகம் தாண்டி பிழைக்க, இந்த அரசு அடித்தளம் அமைக்க வேண்டும் என்பது ஏராளமான தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கை.

20 ஜூலை, 2010

ததஜவின் ஜூலை 4 மாநாடு பற்றி...? - கலீல்

முஸ்லிம் சமுதாய மக்களுக்கு ஸச்சார் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு கேட்டு வேறு சில முஸ்லிம் அமைப்புகளும் இயக்கங்கள் நடத்தியபோதும் தமிழ்நாட்டில் ததஜவினரால் நடத்தப்பட்ட மாநாட்டில் இலட்சக்கணக்கானோர் கலந்து கொண்டதும் ததஜவின் தலைவர்கள் இந்தியப் பிரதமரைச் சந்தித்ததும் அந்தக் கோரிக்கை அரசின் செவியில் வலிமையாக விழுந்துவிட்டது என்ற நம்பிக்கையை ததஜவினருக்கு எற்படுத்தியுள்ளது. அதுவே மாநாட்டின் வெற்றி எனவும் கொள்ளலாம்.

from inneram.com

17 ஜூலை, 2010

கல்யான் சிங்குடன் கூட்டணி வைத்ததற்காக முஸ்லிம்களிடம் மன்னிப்பு : முலாயம்

பாபர்மஸ்ஜித் இடிப்பு விவகாரத்தில் முக்கியப் புள்ளியான கல்யான் சிங்குடன் கடந்த தேர்தல்களில் தொடர்பு வைத்ததற்காக முஸ்லிம்களிடம் தான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாக முலாயம் சிங் யாதவ் தெரிவித்திருக்கிறார்.
மதவாதிகளை தனிமைப் படுத்துவதற்காகவே தான் அதனைச் செய்ததாகத் தெரிவித்த முலாயம் சிங் கல்யாண்சிங் உடன் தான் வைத்த கூட்டுக்காக மன்னிப்பு கோரினார்.
2004 நாடாளுமன்றத் தேர்தல்களில் முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி 36 இடங்களில் வெற்றி பெற்றது. மாநிலக் காட்சிகளில் தனிப்பெரும் கட்சியாக விளங்கிய சமாஜ்வாதி கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கல்யான் சிங்குடன் கூட்டணி அமைத்தது அக்கட்சிக்கு சரிவை ஏற்படுத்தியது. சரிந்து போன தனது வாக்கு வங்கியை நிமிர்த்தும் முயற்சியாக முலாயம் இந்த அறிவிப்பினை வெளியிட்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள்

தொலைக்காட்சி அலுவலகங்கள் மீது ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் தாக்குதல்

ஹெட்லைன்ஸ் டுடே மற்றும் ஆஜ் தக் தொலைகாட்சி அலுவலகம் மீது டெல்லியில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். மெக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் ஆர்.எஸ்.எஸ் தலைவருக்கு இருக்கும் தொடர்பை ரகசிய காமிரா மூலம் படம் பிடித்து, ஆஜ் தக் மற்றும் என்.டி டிவி அலைவரிசைகள் வெளியிட்டிருந்தது.
இதனால் ஆவேசம் கொண்ட ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் இத்தொலைகாட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் தொடுத்தனர்.டெல்லியில் ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் அருகே அமைந்துள்ள ஹெட்லைன்ஸ் டுடே தொலைகாட்சி அலுவலகம் மீது தாக்குதல் தொடுப்பதற்காக எஸ்.எம்.எஸ் மூலம் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இச்செய்தி கிடைத்த உடனேயே தொலைகாட்சி அலுவலகத்தினர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்து பாதுகாப்பு கோரியிருந்தனர்.
இருப்பினும் எஸ்.எம்.எஸ் கிடைத்து ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் ஒன்று கூடிய ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள், பக்கத்திலுள்ள தொலைகாட்சி அலுவலகம் மீது தாக்குதல் தொடுக்க ஆரம்பித்த போது அங்கு வெறும் 5 காவலர்களே பாதுகாப்புக்கு இருந்தனர். சுமார் 300க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள், தொலைகாட்சி அலுவலகத்தை அடித்துத் தகர்த்தனர்.
நேரடியாக ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திலிருந்தே இத்தாக்குதலுக்குத் தொண்டர்கள் திரட்டப்பட்டு, குண்டுவெடிப்புகளின் பின்னணியில் உள்ள ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதப் பின்னணியை வெளியிட்ட தொலைகாட்சி அலுவலகம் மீது தொடுக்கப்பட்ட இந்தத் தாக்குதல், பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் நடத்திய அத்துமீறல் என பத்திரிக்கை உலகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்

13 ஜூன், 2010

கஃபா (முதல் இறையில்லம்) வரலாறு கற்போம்

அகில உலகங்களையும் படைத்த அல்லாஹ், தான் ஒருவன் மட்டும் தான் கடவுள் என்பதற்கு, அவற்றை அத்தாட்சிகளாகவும் ஆக்கினான். இவை இன்றளவும் அல்லாஹ் மட்டும் தான் ஒரே கடவுள் என்பதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன.

அப்படிப் பட்ட அத்தாட்சிகளில் உள்ளவை தான் அவனுடைய புனிதமிக்க ஆலயமாகிய கஅபாவும் அது அமைந்துள்ள மக்கமா நகரமும் ஆகும்.

உலக முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டுமிடமாகவும், உலக முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டைப் பறைசாற்றக் கூடியதாகவும் இவ்வத்தாட்சிகள் அமைந்துள்ளன.

'கஅபா' ஆலயத்திற்கும், மக்கமா நகரத்திற்கும் மற்ற ஆலயங்களை விடவும், நகரங்களை விடவும் தனித்த சிறப்புகளும், சட்டங்களும் உள்ளன. அப்படிப்பட்ட சிறப்புகளில் சிலவற்றைக் காண்போம்.

கஅபா' ஆலயம் தான் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் தொழுகையின் போது முன்னோக்கும் திசையாக அமைந்துள்ளது. இது உலக முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. ஒரு முஸ்லிம் எங்கிருந்தாலும் அவன் தொழுகையின் போது கஅபாவை முன்னோக்க வேண்டும்.

நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்புவீராக! எங்கே நீங்கள் இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! அவர்களில் அநீதி இழைத்தோரைத் தவிர (மற்ற) மக்களுக்கு உங்களுக்கு எதிராக எந்தச் சான்றும் இருக்கக் கூடாது என்பதும், எனது அருட்கொடையை உங்களுக்கு நான் முழுமைப் படுத்துவதும், நீங்கள் நேர் வழி பெறுவதுமே இதற்குக் காரணம். (அல்குர்ஆன் 2:150)

முதல் ஆலயம்

மக்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்குவதற்காக முதலில் கட்டப்பட்ட பள்ளிவாசல் மக்காவிலுள்ள 'கஅபா' ஆலயமாகும்.

அகிலத்தின் நேர்வழிக்கு உரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். (அல்குர்ஆன் 3:96)

'கஅபா' ஆலயத்தை முதன் முதலில் கட்டியவர்கள் நபி ஆதம் (அலை) அவர்களாவார்கள். அதைப் புனர் நிர்மாணம் செய்தவர்கள் நபி இப்ராஹீம் (அலை) ஆவார்கள். ஆதம் (அலை) அவர்கள் முதலில் கஅபாவைக் கட்டி, 40 வருடங்களுக்குப் பிறகு பாலஸ்தீனத்தில் உள்ள ''மஸ்ஜிதுல் அக்ஸா''வைக் கட்டினார்கள். இதற்குப் பின்வரும் செய்தி சான்றாக உள்ளது.

நான் நபி (ஸல்) அவர்களிடம் ''பூமியில் முதலில் அமைக்கப்பட்ட பள்ளி எது?'' எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல் மஸ்ஜிதுல் ஹராம்' (கஅபா) என்று கூறினார்கள். பிறகு எது? என்றேன். 'அல் மஸ்ஜிதுல் அக்ஸா' என்று கூறினார்கள். ''இந்த இரண்டிற்கும் மத்தியில் எத்தனை (வருடங்கள் இடைவெளி?)'' என்று கேட்டேன். ''நாற்பது வருடங்கள்'' என்று கூறினார்கள்.அபூதர் (ரலி) புகாரி 3366

ஆதம் (அலை) அவர்களால் கட்டப்பட்ட 'கஅபா' நாளடைவில் பாழடைந்து செடி, கொடிகள் சூழப்பட்டதாக மாறியது. இஸ்மாயீல் (அலை) அவர்கள் வாலிபப் பருவத்தை அடையும் பொழுது தான் அல்லாஹ் கஅபாவைப் புணர் நிர்மாணம் செய்யுமாறு கட்டளையிடுகிறான்.

எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறை வேற்றுவதற்காகக் குடியமர்த்தி விட்டேன். (அல்குர்ஆன் 14:37) என இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறினார்கள்.

ஹாஜரா, கைக்குழந்தை இஸ்மாயீலையும் பாலைவனத்தில் விட்டு வரும் போது நபி இப்ராஹீம் (அலை) மேற்கண்ட 'துஆ'வை கூறினார்கள் என்பது ஹதீஸின் (புகாரி 3364) மூலம் தெளிவாகிறது.

எனவே சிதிலமடைந்த பள்ளிவாசலைத் தூய்மை செய்யுமாறும், அதன் அடித்தளத்தை உயர்த்துமாறும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

''தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்!'' என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதி மொழி வாங்கினோம். (அல்குர்ஆன் 2:125)

அந்த ஆலயத்தின் அடித் தளத்தை இப்ராஹீமும், இஸ்மாயீலும் உயர்த்திய போது ''எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்'' (என்றனர்.) (அல்குர்ஆன் 2:127)

மக்காவிற்குப் பல பெயர்கள் உள்ளன. அவை:

1. மக்கா, 2. பக்கா, 3. அல் பலதுல் அமீன் (அபயமளிக்கும் ஊர்), 4. உம்முல் குரா (நகரங்களின் தாய்),

நபி (ஸல்) அவர்கள் மக்காவின் மீது அளப்பரிய பற்று வைத்திருந்தார்கள். அங்கேயே வாழ வேண்டும் என எண்ணினார்கள்.

''நபி (ஸல்) அவர்கள் ''ஹஸ்வா'' என்ற ஒட்டகத்தின் மீது நின்றவர்களாக மக்காவை நோக்கி, ''நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! என்னுடைய சமுதாயம் (உன்னை விட்டும்) என்னை வெளியேற்றி இருக்காவிட்டால் நான் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.)'' என்று கூறினார்கள். அப்துல்லாஹ் பின்அதீ (ரலி) திர்மிதீ 3860

மக்காவை நோக்கி நபி (ஸல்) அவர்கள் கூறிய இச்சொற்கள், அவர்கள் மக்காவின் மீது கொண்டுள்ள அளப்பரிய பற்றை வெளிப்படுத்துகிறது.

அபய பூமி

மக்கமா நகரத்தை அல்லாஹ் அபயமளிக்கக் கூடிய பூமியாக ஆக்கியுள்ளான். அல்லாஹ் கூறுகிறான்:

அபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்க வில்லையா? ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 28:57)

அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். (அல்குர்ஆன் 3:97)

இப்ராஹீம் (அலை) அவர்களின் 'துஆ'வின் காரணத்தால் அல்லாஹ் மக்காவைப் புனித நகரமாக்கினான்.

நபி (ஸல்) கூறினார்கள், ''இப்ராஹீம் (அலை) மக்காவை புனிதமாக்கினார். அதற்காக பிரார்த்தனை செய்தார். இப்ராஹீம் மக்காவைப் புனிதமாக்கியது போல் நான் மதீனாவைப் புனிதமாக்கி உள்ளேன். நபி இப்ராஹீம் (அலை) மக்காவிற்காக பிரார்த்தனை செய்தது போல், நான் மதீனாவிற்கு அதனுடைய ஸாவு (என்ற அளவையிலும்) முத்து (என்ற அளவையிலும் அபிவிருத்தி செய்யுமாறு) பிரார்த்தனை செய்துள்ளேன். அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி) புகாரி.

இப்ராஹீம் நபி செய்த பிரார்த்தனையை திருக்குர்ஆனில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

''இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக ஆக்குவாயாக! இவ்வூராரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக!'' (அல்குர்ஆன் 2:126)

அல்லாஹ் அவருடைய பிரார்த்தனையை ஏற்று மக்காவைப் பாதுகாப்பு மையமாக ஆக்கினான்.

திருக்குர்ஆன் அபயபூமி என அறிவித்து 14 நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபயபூமியாகவே உள்ளது. 14 நூற்றாண்டுகளாக எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாகவும் இது இருந்து வருகிறது. குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு இது மிகப் பெரும் சான்றாக அமைந்துள்ளது.

மேலும் உலகத்தில் விளைகின்ற அனைத்து கனி வர்க்கங்களும் மக்காவில் தாராளமாக வந்து குவிந்து கொண்டிருப்பதும், இது இறைவனின் வார்த்தைகள் என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது.

அல்லாஹ்வுடைய பாதுகாப்பு

'கஅபா' ஆலயத்திற்கு அல்லாஹ் தன்னுடைய நேரடிப் பாதுகாப்பை வழங்கியுள்ளான். கியாமத் நாள் வரை அதை எந்தப் படையாலும் அழித்து விட முடியாது. பின்வரும் வரலாற்றுச் சம்பவம் அதற்குச் சிறந்த சான்றாகும்.

அப்ரஹா எனும் மன்னன் தன்னுடைய யானைப் படையுடன் கஅபாவைத் தகர்ப்பதற்காக வந்தான். அவனை எதிர்த்துப் போராடக் கூடிய எந்தப் படையும் அப்போது மக்காவில் இல்லை. என்றாலும், அல்லாஹ் ஒரு வகையான பறவைகளை அனுப்பி, அந்த யானைப் படையை அழித்து தன்னுடைய ஆலயத்தைப் பாதுகாத்தான்.

இதைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:

''(முஹம்மதே!) யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா? அவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில் முடிக்கவில்லையா? அவர்களிடம் பறவைகளைக் கூட்டம், கூட்டமாக அனுப்பினான். சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது அவை வீசின. உடனே அவர்களை மெல்லப்பட்ட வைக்கோல் போல் ஆக்கினான். (அல்குர்ஆன் 105:1-5)

மேலும் கியாமத் நாள் நெருங்கும் போது ஒரு படை 'கஅபா'வை இடிப்பதற்காகப் படையெடுத்து வருவார்கள். அல்லாஹ் அவர்களையும் அழித்து கஅபாவைப் பாதுகாப்பான் என்ற செய்தியை பின்வரும் நபிமொழி மூலம் அறிந்து கொள்ளலாம்.

''ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள். வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும் போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் முதலாம் நபர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கு அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே!'' எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''முதலாமவர் முதல் கடைசி நபர் வரை புதையுண்டு போகத் தான் செய்வார்கள். எனினும் அதற்குப் பிறகு அவரவரது எண்ணத்திற்கேற்ப எழுப்பப் படுவார்கள்'' என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 2118

இறைவன் 'கஅபா' ஆலயத்திற்கு தன்னுடைய நேரடிப் பாதுகாப்பை வழங்கியிருப்பது அதனுடைய சிறப்பைக் காட்டுகிறது.

கொலை, போர் செய்தல் கூடாது

நகரங்களின் தாயான மக்காவிற்கு இறைவன் வழங்கியுள்ள சிறப்பு அம்சங்களில் சில:

அங்கு கொலை செய்வதோ, போர் புரிவதோ கூடாது. மேலும் அங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டுவதும், மரங்களை வெட்டுவதும், செடி, கொடிகளைப் பறிப்பதும் கூடாது.

''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது (மக்களிடையே) எழுந்து நின்று, ''அல்லாஹ் வானங்களையும், பூமியையும் படைத்த போதே மக்காவை புனிதப்படுத்தி விட்டான். ஆகவே, அது அல்லாஹ் புண்ணியப்படுத்திய காரணத்தால் இறுதி நாள் வரை புனிதமானதாகும். எனக்கு முன்பும் எவருக்கும் இங்கு போர் புரிவது அனுமதிக்கப் படவில்லை. எனக்குக் கூட சிறிது நேரம் மட்டுமே இங்கு போர் புரிய அனுமதிக்கப்பட்டது. இங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டக் கூடாது, இங்குள்ள மரங்களை வெட்டக் கூடாது. இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது. பிறர் தவற விட்ட பொருளை அதை அறிவிப்பவர் தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது'' என்று சொன்னார்கள். உடனே அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள் ''அல்லாஹ்வின் தூதரே! 'இத்கிர்' எனும் புல்லைத் தவிரவா? ஏனெனில், அது உலோகத் தொழிலாளர்களுக்கும், வீடுகளுக்கும் தேவைப்படுகின்றதே'' என்று கேட்க நபி (ஸல்) அவர்கள் (சிறிது நேரம்) மௌனமாயிருந்து விட்டு பிறகு ''இத்கிரைத் தவிர தான். ஏனெனில் அதை வெட்டிப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டதாகும்'' என்று பதிலளித்தார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி 4313, 1834

புனிதமிக்க மக்கா நகரில் பாவமான காரியங்களைச் செய்வோருக்குக் கடுமையான வேதனை உள்ளது என அல்லாஹ் எச்சரித்துள்ளான்.

(ஏக இறைவனை) மறுத்தோருக்கும், அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் தடுத்தோருக்கும், மற்றும் அங்கே அநீதியின் மூலம் குற்றம் புரிய நாடுவோருக்கும் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கச் செய்வோம். (அல்குர்ஆன் 22:25)

நபி (ஸல்) அவர்கள், ''அல்லாஹ்விடத்தில் மூன்று நபர்கள் மிகவும் வெறுப்புக்குரியவர்கள். 1. ஹரம் ஷரீஃபில் அநீதியின் மூலம் குற்றம் புரிபவன், 2. இஸ்லாத்தில் அறியாமைக் கால நடைமுறையை நாடக்கூடியவன், 3. தகுந்த காரணமின்றி ஒரு உயிரைப் பறிக்க நாடுபவன். இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி 6882

காஃபிர்கள் நுழைவதற்குத் தடை

இஸ்லாமிய வணக்கத்தலங்களான பள்ளிவாசல்களுக்கு மற்றவர்கள் வருவதை இஸ்லாம் தடுக்கவில்லை.

ஆயினும் உலகின் ஒரே இறைவனை வணங்குவதற்கு எழுப்பப்பட்ட முதல் ஆலயமான கஃபா மற்றும் அதன் வளாகத்திற்கு மட்டும் பல கடவுள் நம்பிக்கை கொண்டவர்களை அனுமதிக்கக்கூடாது என அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.

நம்பிக்கை கொண்டோரே! இணை கற்பிப்போர் அசுத்தமானவர்களே. எனவே அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமை இவ்வாண்டுக்குப் பின் நெருங்கக் கூடாது (அல்குர்ஆன் 9:28)

ஹஜ்ஜத்துல் வதாவுக்கு முந்தைய வருடம் நபி (ஸல்) அவர்கள் அபூபக்கர் (ரலி) தலைமையில் மக்களை ஹஜ்ஜுக்கு அனுப்பி வைத்தார்கள். துல்ஹஜ் பிறை பத்தாம் நாள், ''எச்சரிக்கை! இந்த வருடத்திற்குப் பின்னர் இணை வைப்பவர்கள் யாரும் ஹஜ் செய்யக் கூடாது. கஅபாவை நிர்வாணமாகத் தவாஃப் செய்யக் கூடாது'' என அறிவிக்கச் செய்தார்கள். அபூஹுரைரா (ரலி) புகாரி 1622

பல கடவுட் கொள்கை கொண்டவர்களைத் தடை செய்வது மனித நேயத்திற்கு எதிரானது என்று கருதக் கூடாது.

ஏனெனில் கஃபாவை அபய பூமியாக இறைவன் அமைத்துள்ளான். அந்த ஆலயத்திற்கும், அதன் வளாகத்திற்கும் தனிச் சட்டங்கள் உள்ளதைப் பார்த்தோம். அங்கே பகை தீர்க்கக் கூடாது; புல் பூண்டுகளைக் கூட கிள்ளக் கூடாது என்பன போன்ற விதிகள் உள்ளன.

இந்தச் சிறப்பான விதிகளை இஸ்லாத்தை ஏற்றவர்களால் தான் கடைப்பிடிக்க இயலும். உலகம் அழியும் நாள் வரை அறிவிக்கப் பட்டுள்ள அபயபூமியாக அது அமைந்துள்ளதால் தான் இவ்வாறு மற்றவர்களுக்கு அங்கே தடை விதிக்கப்படுகிறது.

ஆனால் மற்ற பள்ளிவாயில்களில் அவர்கள் செல்வதற்கு எந்தத் தடையுமில்லை.

புனிதப் பயணம் மேற்கொள்ளுமிடம்

இஸ்லாத்தில் மூன்று இடங்களைத் தவிர வேறு எங்கும் புண்ணியத்தை நாடி பயணம் செய்வது கூடாது. அவ்வாறு செய்வது பாவமான காரியமாகும்.

புண்ணியத்தை நாடி பயணம் செய்யும் மூன்று இடங்களில் முதலாவது இடமாக நபி (ஸல்) அவர்கள் கஃபதுல்லாஹ்வைக் கூறியுள்ளார்கள்.

''(புண்ணியத்தைத் தேடி) மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறு எங்கும் பயணம் மேற்கொள்ளக் கூடாது. 1. அல் மஸ்ஜிதுல் ஹராம், 2. மஸ்ஜிதுன் நபவி, 3. மஸ்ஜிதுல் அக்ஸா'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஸயீதுல் குத்ரீ (ரலி) புகாரி 1189

மேலும் செல்வமும், உடல் வலிமையும் உடையவர்கள் தம்முடைய வாழ்நாளில் ஒரு தடவையாவது ''கஃபா'' ஆலயம் சென்று ''ஹஜ்'' செய்வது கட்டாயக் கடமையாகும்.

அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. (அல்குர்ஆன் 3:97)

அளவற்ற நன்மை

'கஅபா' ஆலயத்தில் தொழுகின்ற ஒரு தொழுகை மற்ற பள்ளிகளில் தொழுகின்ற ஒரு இலட்சம் தொழுகைகளை விட அதிகமான நன்மைகள் நிறைந்ததாகும்.

என்னுடைய பள்ளி (மஸ்ஜிதுன் னபவி)யில் தொழுவது மற்ற பள்ளிகளில் தொழுகின்ற ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். அல் மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா)வைத் தவிர! (ஏனென்றால் அதற்கு அதை விட அதிகமான நன்மைகள் உள்ளது.) அபூஹுரைரா (ரலி) புகாரி 1190

''மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு தொழுகை தொழுவது மற்ற பள்ளிகளில் ஒரு இலட்சம் தொழுகை தொழுவதை விடச் சிறந்ததாகும்'' என நபி (ஸல்) கூறியுள்ளார்கள். ஜாபிர் (ரலி) இப்னுமாஜா 1396, அஹ்மத் 14167

எந்நேரமும் வழிபடலாம்

நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட நேரங்களில் தொழுவதற்குத் தடை விதித்துள்ளார்கள். அந்நேரங்களில் தொழுவது கூடாது. உதாரணத்திற்கு சூரியன் உதிக்கும் போதும், உச்சியிலிருக்கும் போதும், மறையத் துவங்கும் பொழுதும் தொழுவது கூடாது.

ஆனால் இந்தத் தடை ''கஅபா''விற்கு மட்டும் கிடையாது. அங்கு எந்நேரமும் தொழுது கொள்ளலாம். வணக்க வழிபாடுகளை நிறைவேற்றலாம்.

நபி (ஸல்) அவர்கள், அப்து மனாஃப் குடும்பத்தினரே! இரவிலோ, பகலிலோ எந்த நேரத்திலும், ஒருவர் தான் நாடிய பொழுது இந்த (கஅபா) வீட்டை வலம் வருபவரையோ, தொழுபவரையோ தடுக்காதீர்கள்.
ஜுபைர் இப்னு முத்இம்(ரலி) திர்மிதீ 795

தஜ்ஜாலை விட்டும் பாதுகாப்பு

இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்று தஜ்ஜாலின் வருகையாகும். இவன் உலகினுடைய அனைத்துப் பகுதிகளுக்கும் செல்வான். ஆனால் மக்காவிற்கும், மதீனாவிற்கும் மட்டும் செல்ல முடியாது.

''மக்கா, மதீனாவைத் தவிர, தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இருக்காது. அவற்றின் (மக்கா, மதீனா) ஒவ்வொரு நுழைவு வாயிலிலும் மலக்குகள் அணிவகுத்து அவனைத் தடுத்தவர்களாக இருப்பார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அனஸ் பின் மாலிக் (ரலி) புகாரி 1881, முஸ்லிம் 5236

கஅபா இடிக்கப்படுதல்

கியாமத் நாள் வரை கஅபாவில் ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் செய்யப்படும். கஅபாவில் ஹஜ் செய்யப்படாத நாள் வந்த பிறகே கியாமத் நாள் ஏற்படும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இவ்வாலயத்தில் ஹஜ்ஜும் செய்யப்படும். உம்ராவும் செய்யப்படும். 'கஅபா'வில் ஹஜ் செய்யப்படாத நாள் வந்த பிறகே கியாமத் நாள் வரும். அபூஸயீத் (ரலி) புகாரி 1593.

கஅபாவில் ஹஜ் செய்யப்படாத நாள் வரும் போது சிலர் அதனை இடித்துப் பாழ்படுத்துவார்கள்.

இதைப் பற்றி அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி புகாரியில் இடம் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்கள், அபீஸீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்களைக் கொண்ட மனிதர்கள் கஅபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள் கூறினார்கள். புகாரி 1591, 1896

''வெளிப்பக்கமாக வளைந்த கால்களை உடைய, கருப்பு நிறத்தவர்கள், ஒவ்வொரு கல்லாகப் பிடுங்கி கஅபாவை உடைப்பதை நான் பார்ப்பது போன்றிருக்கிறது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி 1595.

கியாமத் நாள் வரும் வரை தான் அல்லாஹ் கஅபாவை அபய பூமியாகவும், பாதுகாப்புத் தலமாகவும் ஆக்கியுள்ளான். எனவே கியாமத் நாள் வரும் போது ''கஅபா'' இடிக்கப்படுவது இறைவனுடைய பாதுகாப்புக்கு எதிரானது கிடையாது.

நல்லுணர்வு பெறுவோம்

இப்னு உமர் (ரலி), நபி (ஸல்) அவர்கள் மினாவில் இருந்த போது ''இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?'' எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள், ''அல்லாஹ்வும், அவன் தூதருமே நன்கறிவர்!'' என்றனர். உடனே அவர்கள், ''இது புனிதமிக்க தினமாகும்! இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா?'' என்று கேட்க மக்கள் ''அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிவர்!'' என்றனர். அவர்கள் (இது) ''புனிதமிக்க நகரமாகும்!'' என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள், ''இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா?'' என்றதும் மக்கள், ''அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிவர்'' என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''இது புனிதமிக்க மாதமாகும்'' எனக் கூறிவிட்டு, ''உங்களுடைய இந்தப் புனித நகரத்தில், உங்களுடைய இந்தப் புனித மாதத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போலவே அல்லாஹ் உங்கள் உயிர்களையும், உடைமைகளையும், உங்கள் மானம் மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்!'' எனக் கூறினார்கள்.புகாரி 1742

இப்படிப்பட்ட புனிதங்களை உணர்ந்து அதன் மூலம் படிப்பினை பெற்று வாழக்கூடிய மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக!