என்னை தொட்டவர்கள் !

30 ஜூன், 2011

மக்காவுக்கு ஹஜ், உம்ரா செல்ல காதியானிகளுக்கு தடை !

                                                                 
மும்பை : வருடம் ஒரு முறை முஸ்லீம்கள் மக்காவுக்கு செல்லும் புனித யாத்திரையான ஹஜ் மற்றும் பிற மாதங்களில் செல்லும் உம்ராவுக்கு அஹமதியாக்கள் எனும் காதியானிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சவூதி அரேபியா அரசுக்கு தேவ்பந்தில் உள்ள புகழ் பெற்ற இஸ்லாமிய பாடசாலையான தாருல் உலூம் கோரிக்கை விடுத்துள்ளது.


இது தொடர்பாக சவூதி அரசுக்கு தாருல் உலூம் சமர்பித்துள்ள மனுவில் “ இஸ்லாத்தை மறுக்கும் அஹமதியாக்கள் முஸ்லீம்களை போல் ஹஜ்ஜுக்கு வருவதால் அவர்கள் உண்மையான முஸ்லீம்களை குழப்பி வழி கெடுக்கின்றனர் என்றும் அவர்கள் மக்கா மற்றும் மதீனாவுக்கு வர தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மிர்ஸா குலாம் அஹ்மது என்பவரை பின்பற்றுபவரே அஹ்மதியாக்கள் அல்லது காதியானிகள் என்று அழைக்கப்படுகின்றனர். முஸ்லீம்களின் மத நம்பிக்கை படி முஹம்மதை இறைவனின் இறுதி தூதராகவும் இருதி காலத்தில் இமாம் மஹதி வருவார் என்றும் நம்புகின்றனர். ஆனால் காதியானிகள் மிர்ஸா குலாமை மஹதி என்றும் முஹம்மதுக்கு பின் மிர்ஸா குலாமையும் நபியாக நம்புவதால் பாகிஸ்தான் போன்ற பல நாடுகளில் அவர்கள் முஸ்லீம்கள் அல்ல என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அம்ரிஸ்டர் அருகே உள்ள காதியான் எனும் ஊரில் தலைமையகத்தை வைத்துள்ள அஹமதியாக்களின் ஆன்மிக குரு கிலாபத்துல் மஸிஹ் மிர்ஸா மஸ்ரார் அஹ்மது லண்டனில் வசிக்கிறார். 1979-ல் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் அஹமதியாக்கள் முஸ்லீம்கள் அல்லர் என்று எடுத்த தீர்மானத்தை நினைவூட்டி ஹஜ் உம்ரா வருபவர்கள் அதற்கான விண்ணப்பத்தில் முஹம்மதை கடைசி இறை தூதராக ஏற்று கொள்கிறேன் என்று கையொப்பமிட வேண்டும் என்றும் சவூதி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

குஜராத் கலவர ஆவணங்கள் அழிப்பு: காங்கிரஸ், பாதிக்கப்பட்டோர் கண்டனம்!

                                                                
2002ஆம் ஆண்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட குஜராத் கலவர வழக்குகளில் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக அம்மாநில அரசு கூறியுள்ளதற்கு அந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்டுள்ளோர் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.


முதல்வர் நரேந்திர மோடியையும் அவரது சக அமைச்சர்களையும் தப்பிக்ககை வைப்பதற்காகவும் உண்மையை மறைப்பதற்காவும் குஜராத் அரசு இவ்வாறு செய்துள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர்கள், குஜராத் அரசின் இந்த நடவடிக்கையை விசாரணை செய்ய உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையிலல் சுதந்திராமான விசாரணை தேவை என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியான 2002 ஆம் ஆண்டு கலவரங்கள் தொடர்பான ஆவணங்களை வழங்க வேண்டும் என்றும் அரசுக்கும் புலனாய்வு பிரிவுக்கும் உத்தரவிடக் கோரி மே மாதம் நானாவதி கமிஷனில் ஐபிஎஸ் அதிகாரி சஞ்ஜீவ் பட் விண்ணப்பித்திருந்தார்.

இதற்குப் பதில் அளித்த குஜராத் அரசு வழக்கறிஞர் வாகீல், அரசு விதிகளின்படி தொலைபேசி அழைப்புகளின் பதிவுகள், வாகனப் பதிவு புத்தகங்கள் மற்றும் அதிகாரிகளின் நடவடிக்கைகள் பற்றிய டைரி ஆகியவை குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அழிக்கப்பட்டுவிட்டன என்று கூறினார்.

குஜராத் அரசின் இச்செயலுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி, உண்மை வெளிவரக் கூடாது என்பதற்காகச் செய்யப்பட்ட கிரிமிணல் செயல் இது என்று கூறினார். மாநில அரசு இந்தப் பிரச்சனைகளை முழுமையாக மறைத்துவிட முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

கூட்டுக் கொலை மற்றும் இன அழிப்பு தொடர்பான விசாரணை குஜராத் மாநில உயர் நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்து வரும்போது இவ்வாறு செய்திருப்பது, குஜராத் மாநில முதல்வரே இதில் தொடர்புடையவராயிருப்பார் என்ற சந்தேகத்தையே தோற்றுவிக்கிறது என்றும் மனீஷ் கூறினார்.

முதல்வர் நரேந்திர மோடியம் அவரது அமைச்சரவை சகாக்களும் குஜராத் கலவரத்தில் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என்ற உண்மை வெளிவராமல் இருப்பதற்காகவே அந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ள என்று குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோத்வாடிய குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது தவிர விசாரணை ஆணையமும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களை அழித்திருப்பது சட்டப்படி குற்றம் என்றும் அவர் கூறினார்.

அரசு இவ்வாறு செய்திருப்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என்று நாங்கள் ஏற்கனவே சந்தேகித்திருந்தோம் என்று கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாகப் போராடி வரும் என்ஜிஒ அமைப்பான ஜன் சங்கர்ஷ் மஞ்சின் வழக்கறிஞர் முகல் சின்ஹா கூறியுள்ளார்.

29 ஜூன், 2011

பீகார்: காவல்துறையின் காட்டுமிராண்டித்தனம்-6 அப்பாவி முஸ்லிம்கள் பலி


Wednesday, June 8th, 2011
பீகார்:அராரியா மாவட்டத்தில் உள்ள போப்ஸ்கஞ்ச் பகுதியில் ராம்பூர் மற்றும் பஜன்பூர் கிராமங்களை சார்ந்த முஸ்லிம்கள் ஜூன் 3-ஆம் தேதி ஜும்ஆ தொழுகைக்கு பிறகு தொழிற்சாலை ஒன்று தங்கள் கிராமத்திற்கு இடையேயான சாலையை ஆக்கிரமித்ததற்காக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது மக்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள் எனக்கூறி போலீஸார் துப்பாக்கியால் சுட துவங்கினர்.
மேலும் முஸ்லிம்களை விரட்டி சென்று அவர்களின் வீடுகளுக்குள் நுழைந்து துப்பாக்கியால் மிக அருகிலிருந்து சுட்டுத்தள்ளியுள்ளனர். இதில் இரண்டு பெண்கள், ஆறுமாத குழந்தை உட்பட 6 பேர் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளனர். அரசு தரப்பு 4 பேர் இறந்ததாக கூறுகிறது. ஆனால் twocircles.net இணையதளம் கொல்லப்பட்ட 6 பேர்களின் உடல்களை வீடியோவில் பதிவுச்செய்துள்ளது.
மரணித்தவர்களின் உடல்களில் குண்டு துளைத்த காயங்கள் போலீசாரின் கொடூர முகத்தை வெளிப்படுத்துகிறது. தலை, முகம், கழுத்து, நெஞ்சு மற்றும் வயிற்று பகுதிகளில் குண்டு பாய்ந்துள்ளது. இந்த காயங்களை பார்க்கும் போது போலீஸ் மிக அருகிலிருந்து சுட்டது நிரூபணமாகிறது. மேலும் வீடுகளின் சுவர்கள் மற்றும் ஜன்னல்களில் குண்டு துளைத்த அடையாளங்கள் உள்ளன.

இம்மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் தொகை 41 சதவீதமாக இருந்த போதிலும் பலவருடங்களாக பா.ஜ.க வேட்பாளர்களே எம்.எல்.ஏக்களாகவும், எம்.பியாகவும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க கூட்டணி ஆட்சி வந்த பிறகு ஆர்.எஸ்.எஸ்ஸின் பல உயர்மட்டத் தலைவர்கள் கலந்து கொண்ட ஏராளமான கூட்டங்கள் இம்மாவட்டத்தில் நடைபெற்றுள்ளன.
சமீபத்திய பிரச்சனைக்கு காரணமான தொழிற்சாலையும் பா.ஜ.க எம்.எல்.சி அசோக் அகர்வாலின் மகனுக்கு சொந்தமானதாகும். நிதீஷ்குமார் ஆட்சிக்கு வந்த பிறகு போலீசாருக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2010-ஆம் ஆண்டு டிசம்பர் 20-ஆம் தேதி தற்போது போலீஸ் துப்பாக்கி சூடு நடந்த பகுதியிலிருந்து 17 கி.மீ தொலைவில் உள்ள இதே மாவட்டத்தின் குர்ஷகந்தா பகுதியில் பட்ரஹா கிராமத்தில் SSB ஜவான்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். சம்பவம் நடப்பதற்கு ஒருநாள் முன்பு இரவு SSB ஜவான்கள் தங்கியிருந்த கிராமத்தில் நுழைந்து வீடுகளிலுள்ள பெண்களிடம் மோசமாக நடந்துள்ளனர். இதனை கண்டித்து முஸ்லிம்கள் போராடிய பொழுதுதான் காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி 4 முஸ்லிம்களை கொன்றுள்ளனர்.
முஸ்லிம்கள் உரிமைகளுக்காக போராடினால் துப்பாக்கிச்சூடுதான் பரிசா?
மேற்கண்ட இரண்டு சம்பவங்களிலும் முஸ்லிம்கள் தங்களின் உரிமைகளுக்காகவே போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனால், பீகார் காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி முஸ்லிம்களின் உரிமைகளை நசுக்கியுள்ளது. அரசின் இத்தகைய மெத்தன போக்கு முஸ்லிம்களிடையேயும் சமூக ஆர்வலர்களிடையேயும் கடும் அதிருப்தி நிலவுகிறது. THANKS TO PFI

22 ஜூன், 2011

கூட்டுத் துஆ ஏற்படுத்திய விபரீதங்கள்



ஜவேளை தொழுகைக்குப் பிறகு ஓத வேண்டிய திக்ருகள் அல்லது அவ்ராதுகள் பற்றி நபி (ஸல்) அவர்கள் நிறையவே கற்றுத் தந்திருக்கிறார்கள். தொழுகை முடிந்ததும் இமாம் உட்பட எல்லோரும் அந்த திக்ருகளை அவ்ராதுகளை ஓதிக் கொள்ளவேண்டும்.
இந்த சுன்னத்தான வழிமுறைக்கு மாற்றமாகவே தொழுகைக்குப்பின் ஒருவர் துஆ கேட்க மற்றவர்கள் ஆமீன் கூறும் பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஐவேளை தொழுகைகளுக்குப் பிறகு ஐந்து மாதிரியான அமைப்பில் துஆக்களை உருவாக்கிக் கொண்டு ஓதிவருகிறார்கள். தொழுகை நடாத்தக் கூடிய இமாம் அந்த துஆக்களை ஓத மற்றவர்கள் கிளிப் பிள்ளைபோல் “ஆமீன்” சொல்லி விட்டு போகிறார்கள். அது மட்டுமல்லாமல் நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் ஐந்து மாதிரி -இந்த பள்ளி இமாம் ஓதுகிறமாதிரி- துஆ ஓத சஹாபாக்கள் ஆமீன் சொன்னாரகளா? ஏன்பதை கூட விளங்குவதில்லை.
இமாம் என்ன துஆ ஓதுகிறார். எதைப் பற்றி அவர் துஆ கேட்கிறார். அதன் பொருள் என்ன? யாருடைய நிலையை அறிந்து யாருக்காக துஆ கேட்கிறார். அவருடைய கஷ்டத்தை மனதில் வைத்து துஆ கேட்கிறாரா? பள்ளிக்கு வருகை தந்த ஒவ்வொருவருடைய மனநிலையை அறிந்து புரிந்து துஆ கேட்கிறாரா? என்பது பற்றி எதுவும் தெரியாமல் மக்களும் “ஆமீன்! ஆமீன்!” என்று சொல்லிவிட்டு வருகிறார்கள்.
தொழுகை முடிந்தபின் இமாம், சுப்ஹா னல்லாஹ்(33), அல்ஹம்துலில்லாஹ்(33) அல்லாஹு அக்பர்(34) என்ற எண்ணிக் கையில் திக்ருகளை மாத்திரம் சொல்லுவார். மக்களும் அதனை சொல்லிக் கொண்டிருப்பர். இமாம் திக்ருகள் சொல்லி முடிந்ததும் சப்தமிட்டு துஆ ஓத ஆரம்பித்து விடுவார். உடனே மக்களும் செய்கின்ற திக்ருகளை இடைநடுவில் நிறுத்திவிட்டு இமாமின் துஆவிற்கு ஆமீன் சொல்ல ஆரம்பித்து விடுவர்.
நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த திக்ருகளை பூரணமாக ஓதி அல்லாஹ்வின் பாவமன்னிப்பை பெற்றுக் கொள்ள வேண்டியவர்கள் அந்த திக்ருகள், அவ்ராதுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் யாரோ கண்டுபிடித்து உருவாக்கிய துஆவுக்கு முக்கியத்துவம் கொடுத்து சுன்னாவை புறக்கணித்து விடுகிறார்கள்.
ஒவ்வொருவரும் அல்லாஹ்விடம் தங்களது தேவைகளை முறையிட்டு பிரார்த்திக்கக் கூடிய சிறந்த சந்தர்ப்பம் இது.
தனிமையாக இருந்து உள்ளம் உருகி தங்களுடைய கஷ்டங்களை தேவைகளை அல்லாஹ்விடம் முறையிட்டு பிரார்த்திக்க வேண்டுமே தவிர மற்றவர்களுடைய தேவைகள் என்னவென்று தெரியாத ஒருவர் (இமாம்) தயாரித்து வைத்த துஆவுக்கு ஆமீன் சொல்வது அறிவுள்ள செயலாகுமா?
துஆ ஓதுபவர் தன்னையும் ஏமாற்றி மற்றவர்களையும் ஏமாற்றுகிறார். பள்ளிக்கு வரக்கூடிய (தொழக்கூடிய) நூற்றுக் கணக்கான மக்களுக்கும் ஆயிரக்கணக்கான பிரச்சினைகள் தேவைகள் இருக்கும். ஒவ்வொருவருடைய பிரச்சினைகளும் வெவ்வேறானதாக இருக்கும். எனவே அவர்கள் தான் அவர்களுடைய உண்மையான நிலையை அறிந்து உள்ளம் உருகி சொல்லுகின்ற விடயங்களை நன்குபுரிந்து தனக்கு தெரிந்த மொழியில் அல்லாஹ்விடம் முறையிட்டு பிரார்த்திக்க வேண்டும். இதுதான் அறிவுபூர்வமான செயலும் கூட.
என்னுடைய கஷ்டங்கள் என்ன? தேவைகள் என்ன என்று எனக்கு மட்டும்தான் தெரியும். மற்றவருடைய கஷ்டங்கள் துன்பங்கள் என்ன என்று எனக்குத் தெரியாது. நான்தான் எனது தேவைகளை அல்லாஹ்விடம் முறையிட வேண்டும். மற்றவர்கள் அவரவர்களுடைய தேவைகளை முறையிட வேண்டும்.
இமாம் தன்னுடைய தேவையை கருதி துஆவை கூட்டிக் கொள்ளவோ செய்வார். அவசர தேவை இருந்தால் அவசரமாக ஓதிவிட்டார் நகர்ந்து விடுவார். மக்களுக்கு உண்மை தெரியாததால் துஆவின் பரகத் கிடைத்ததாக எண்ணிக் கொண்டு கைகளை முகத்தில் தடாவிவிட்டு போய்விடுவார்கள்.
தொழுகை நடாத்தக் கூடிய இமாமின் பிரச்சினைகள் என்னவென்று தொழ வரக் கூடிய மக்களுக்குத் தெரியாது. தொழுகைக்கு வந்த மக்களின் பிரச்சினைகள் என்னவென்று இமாமுக்கும் தெரியாது. இந்நிலையில் இமாம் ஒருசில வசனங்களை அரபியில் எழுதி தயார்படுத்தி பாடமாக்கி கூற, அதற்கு மற்றவர்கள் ஆமீன் சொலலவேண்டும் என்பது அறிவீனமில்லையா?
பணத்தை பறிகொடுத்து..
பிள்ளையை பறிகொடுத்து..
மனைவியை ஆஸ்பத்திரியில் அனுமதித்து..
தொழிலை இழந்து..
சொத்தையிழந்து..
அனியாயத்திற்கு ஆளாகி..
வறுமையில் தள்ளாடி..
சோற்றுக்கு வழியின்றி..
ஏழ்மையில் உழன்று..
குடும்ப பிரச்சனையில் சிக்குண்டு..
சமூக பிரச்சனையில் அல்லல்பட்டு..

என பலரும் பல பிரச்சனைகளுடன் பள்ளிக்கு வருபவர். இந்நிலையில் இவர்கள் தயாரித்து வைத்திருக்கும் துஆவிற்கு ஆமீன் சொல்வது பொறுத்தமா? அல்லது தானாக தன்னுடைய பிரச்சனைகளை அல்லாஹ்விடம் முறையிட்டு தனது மனதில் உள்ள பாரத்தை இறக்கி விடுவது பொறுத்தமா?
“துஆ என்பது வணக்கமாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதி)
வணக்கமாக புரிகின்ற இந்த துஆவை பணிவுடன் அடக்கத்துடன் அச்சத்துடன் ஆசையுடன் கேட்க வேண்டும். தாழ்ந்த குரலில் கேட்கவேண்டும் மனம் உருகிய நிலையில் அல்லாஹ்விடம் எதைக் கேட்கிறோம் என்று அறிந்த நிலையில்- அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை வைத்த நிலையில் துஆ கேட்க வேண்டும். அப்போது தான் அந்த வணக்கம் அர்த்தமுள்ளதாக இருக்கும்.
துஆவுக்கான பணிவும் அச்சமும் தனியாக கேட்கும்போது தான் வருமே தவிர கூட்டத்தோடு கூட்டமாக சப்தமிடுவதால் வருவதில்லை. கூட்டத்தோடு கூட்டமாக இருந்து சப்தமிடும்போது எதைக் கேட்கிறோம் என்ற சிந்தனையோ விளக்கமோ வராது. எல்லோரும் ஆமீன் சொல்லும் போது நாமும் ஆமீன் சொல்ல வேண்டும் என்ற நினைப்பு மட்டும் வரும். கூட்டத்தில் எவராவது அழுவது போல் பாசாங்கு செய்தால் அதைப்பார்த்து பாசாங்கு காட்டி நடிக்கவோ அல்லது சிரிக்கவோ எண்ணம் வரும். ஒவ்வொருவரும் தங்களுடைய நிலையிலிருந்து சிந்தித்தால் உண்மை புரியும். இது எல்லாவற்றையும் நபி(ஸல்) அவர்கள் கூட்டு துஆ ஏற்படுத்தியதில்லை.
எனவே பகுத்தறிவுக்கு பொறுத்தமற்ற இந்த கூட்டு துஆவினால் மக்களை மடையர்களாக ஆக்குகின்றார்கள் என்று கூறுவதை தவிர வேறெதுவுமில்லை. கூட்டு துஆ என்ற அம்சத்தை உருவாக்கி பிறப்பு முதல் இறப்பு வரை கலக்கிக் கொண்டும் பணத்தை பறித்துக் கொண்டுமிருக்கிறார்கள். மக்கள் இதன் விபரீதத்தை புரிந்து கொள்ளவேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த பிரகாரம் தொழுகை முடிந்ததும் ஒவ்வொரு வரும் தனித்தனியாக அவ்ராதுகளை ஓதி விட்டு தனித்தனியாக தங்களுடைய தேவைகளை அல்லாஹ்விடம் ஒப்புவித்து பிரார்த்திக்க வேண்டும்.
தொழுகை உட்பட ஏனைய சந்தர்ப்பங்களில் கூட்டாக துஆ ஓத மற்றவர்கள் ஆமீன் கூற ஆதாரமுண்டு என சில செய்திகளை காட்டுகிறார்கள். அதற்கு சஹீஹான ஆதாரங்கள் எதுவுமில்லை.

19 ஜூன், 2011

ஒபாமாவை வெறுக்காதீர்; அவரைத் தோற்கடியுங்கள்: ஜின்டால்


                                                           

அமெரிக்க அதிபர் ஒபாமாவை தேர்தலில் தோல்வி அடையச் செய்வது மிகவும் அவசியம் என்று லூசியானா மாகாணத்தின் ஆளுநரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான பாபி ஜிண்டால் கூறியுள்ளார். நியூ ஆர்லியன்ஸ் நகரில், நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் பாபி ஜிண்டால் கூறியதாவது:

இந்த நாட்டை ஒபாமா நேசிக்கிறார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால், அவர் என்ன நினைக்கிறாரோ அதுதான் நாட்டுக்கு சிறந்தது என்று நினைக்கிறார். உண்மையில் அது பெரும் தோல்வியை தான் ஏற்படுத்துகிறது. அதிபர் பராக் ஒபாமா எங்கிருந்து வந்தார் என்பது குறித்து நான் கேள்வி கேட்க மாட்டேன். ஆனால், அவர் எங்கே செல்கிறார் என்பது பற்றி கேட்பேன் என்று கூறினார்.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நாம் அனைவரும் முதலில் அமெரிக்கர்கள். எனவே, அதிபர் பதவிக்கு மரியாதை தரவேண்டும். ஒபாமாவை வெறுப்பது முட்டாள்தனமானது. ஆனால், அவரை தோற்கடிப்பது மிகவும் அவசியமானது என்றும் பாபி ஜின்டால் கூறினார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா? என்று செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது, லாசியானா ஆளுநர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவேன் என்றார்.


11 ஜூன், 2011

இந்தியா எதிரி அல்ல : நவாஸ் ஷெரீப்



இந்தியாவை தனது மிகப் பெரிய எதிரிநாடாகக் கருதுவதை பாகிஸ்தான் கைவிட வேண்டும் என்று பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-என்.,' கட்சியின் தலைவரும் பாக்., முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் சிந்து மாகாணத்தின் தென் பகுதியில், மூன்று நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அப்போது கராச்சியில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் ஏதுவாக, இந்தியாவுடனான தனது உறவை பாகிஸ்தான் மறு மதிப்பீடு செய்ய வேண்டும். அது வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் ஏதுவாக அமையும். அதற்கு முதலில் இந்தியாவை, தனது மிகப் பெரிய எதிரிநாடாகக் கருதி மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் கைவிட வேண்டும்.

நான் 1990களில் பிரதமராக இருந்த போது, பாக்., ராணுவத்தின் அதிகாரத்தை கட்டுப்படுத்தாமல் விட்டு விட்டேன்.மற்ற ஜனநாயக நாடுகளில் இருப்பதைப் போல், ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ.,க்கான பட்ஜெட்டை பாக்., பார்லிமென்ட்டில் தாக்கல் செய்து விவாதம் நடத்த வேண்டும். இவ்வாறு நவாஸ் ஷெரீப் தெரிவித்தார்.