என்னை தொட்டவர்கள் !

27 நவம்பர், 2011

இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா…


வயதானாலும் இளமையாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களா நீங்கள்?. அப்படியெனில் எதையுமே நேர்மறையாக எண்ணுங்கள் என்கின்றனர் வல்லுநர்கள். சத்தான உணவை உண்டு, சந்தோசமாக இருந்தால் என்றைக்கும் இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கலாம் என்பது உணவியல் வல்லுநர்களின் அறிவுரை
நோயற்ற வாழ்வு
புகை, மது ஆகியவற்றை அறவே தவிர்க்க கூறும் வல்லுநர்கள் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியம் என்கின்றனர் வல்லுநர்கள். அதோடு சரிவிகித உணவை உட்கொண்டால் நோயற்ற வாழ்வை வாழலாம் என்கின்றனர் உணவியலாளார்கள் அவர்கள் கூறும் ஆரோக்கிய டிப்ஸ் உங்களுக்காக:
கால்சியம் சத்து
வயதாக வயதாக அதிகம் பாதிக்கப்படுவது எலும்புகளும், பற்களும்தான். கால்சியப் பற்றாக்குறையினால் லேசாக தடுக்கி விழுந்தாலே எலும்புகள் பாதிக்கப்படுகின்றன. எனவே நாம் உண்ணும் உணவில் கால்சியம் சத்துள்ள உணவை அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பால் பொருட்கள், சீஸ், வெண்ணெ ஆகியவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
புரதச்சத்துள்ள சோயாபீஸ்சை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது தசைகளின் வளர்ச்சிக்கு உதவும். நாம் உண்ணும் உணவில் சரிவிகிதமாக புரதச்சத்து உள்ள பயறுவகைகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
கண்களுக்கு கவனம்

கண்களை கவனமாக பார்த்துக்கொள்ள வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்த உணவுகளை சாலட் களாக செய்து உட்கொள்ள வேண்டும். இதனால் கண்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் என்பது வல்லுநர்களின் அறிவுரை.
பாப்கார்ன் கொறிப்பது இதயத்திற்கு இதமானது என்கின்றனர். மக்காச்சோளத்தில் செய்யப்படும் பாப்கார்ன், பயறுவகை உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பது உணவியலாளர்கள்
நேர்மறை எண்ணங்கள்
இந்த உணவுகளை அரைத்து சத்துக்களை ஒவ்வொரு பகுதிக்கும் அனுப்ப தண்ணீரை அவசியம் அருந்த வேண்டும் என்கின்றனர் உணவியலாளர்கள். தவிர நம்மிடம் தோன்றும் நேர்மறை எண்ணங்கள் நமக்கு எந்த வித நோயும் தாக்காமல் உடல் நலத்தை காக்கும் என்றும் உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். என்ன அவர்கள் கூறியது சரிதானே. எந்த விசயத்தையுமே நெகடிவாக பார்க்காமல் பொஸிட்டிவாக பாருங்கள் ஆரோக்கியமாக வாழுங்கள்

தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம்


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது முன்னோர் வாக்கு. 
கோடி கோடியாய் பணம் வைத்திருந்தாலும் அவற்றை அனுபவிக்க நோயில்லாத உடல் வேண்டும். எனவேதான் நோய்கள் வராமல் உடலை காத்துக்கொள்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். நடைபயிற்சி மேற்கொள்பவர்களை நோய்கள் எளிதில் தாக்குவதில்லை என்றும் கூறுகின்றனர்.

தினமும் தவறாமல் நடை பயிற்சி மேற்கொண்டால் எடை குறையும், தசை வலுவடையும், இதயநோய்கள் எட்டிப்பார்க்காது, நீரிழிவு நோய் கட்டுப்படும். ரத்த அழுத்தம் சீராகும், முதுகுவலி ஏற்படாது என்கின்றனர் மருத்துவர்கள்.
கைகளை வீசி நடவுங்கள்
காலை 6 மணிக்கு முன் நடப்பது மிகவும் நல்லது. முடியாதவர்கள் மாலையில் நடக்கலாம். நடக்கும் போது கைகளை வீசி நடக்கவேண்டும். குறைந்த பட்சம் இரண்டு கிலோமீட்டராவது நடந்த பின்னர் 5 நிமிடம் ஓய்வெடுக்க வேண்டும். பிறகு கைகளை பத்துமுறை நீட்டி மடக்க வேண்டும். பின்னர் இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு காலை வேலைகளை பார்க்கலாம்.
உடல் எடை குறையும்
உடல் எடை அதிகரிப்பு என்பது இன்றைய கால கட்டத்தில் சாதரண ஒன்றாகிவிட்டது. சரியான உடல் உழைப்பு இல்லாதது. இன்றைய இளைய தலைமுறையினர் அமர்ந்த இடத்திலேயே வேலை பார்ப்பதால் உண்ணும் உணவு ஆங்காங்கே தங்கிவிடுகிறது. இதனால் உடல் எடை கூடுகிறது. இவர்கள் தினமும் அரைமணி நேரம் நடை பயிற்சி மேற்கொண்டால் உடல் எடை கட்டுக்குள் வரும். எனெனில் உடல் எடைதான் எண்ணற்ற நோய்களின் பிறப்பிடமாக உள்ளது.
புத்துணர்ச்சி அடையும்
எடை அதிகரிப்பினால் ஆங்காங்கே தசைகள் லூசாகி உடல் அமைப்பு சரியான வடிவமின்றி காணப்படும். இவர்கள் நடை பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடலில் உள்ள லூசான தசைகள் வலுவடையும்.காலையில் மேற்கொள்ளும் நடை பயிற்சியினால் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி அடைகிறது.
நீரிழிவு கட்டுப்படும்
தினசரி காலை, மாலை இருவேளை 45 நிமிடம் நடை பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு நீரிழிவு நோய் கட்டுப்பாட்டிற்குள் வந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே நீரிழிவு நேயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக நடை பயிற்சி மேற்கொள்ளவேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.
கொழுப்பு குறையும்
நடைபயிற்சியின் மூலம் உடலில் தேவையற்ற இடங்களில் சேர்ந்துள்ள கொழுப்பு குறைகிறது. ரத்த நாளங்களில் கொழுப்பு குறைவதால் ரத்த ஓட்டம் சீராகிறது. இதனால் இதயநோய் பாதிப்பு குறைகிறது. ரத்த அழுத்த நோய் கட்டுப்படும்.
முதுகு வலி எட்டிப்பார்க்காது
ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டே வேலை பார்ப்பதால் ஒரு சிலர் முதுகு வலி கழுத்துவலியினால் பாதிக்கப்படுவர். அவர்களுக்கு நடைபயிற்சி சிறந்த தீர்வாகும். காலை நேரத்தில் மேற்கொள்ளும் நடைபயிற்சி முதுகுவலியை தூர விரட்டும்.
குழந்தை பேறு கிடைக்கும்
நடை பயிற்சியினால் தீராத சிக்கல்களுக்கும் கூட தீர்வு கிடைத்திருக்கிறது. குழந்தையில்லாத தம்பதியர் கூட சீரான நடைபயிற்சி மேற்கொண்டதன் மூலம் குழந்தை பேறு பெற்றதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

23 நவம்பர், 2011

முஸ்லிம் பெண்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்:மாவட்ட ஆட்சியர் சகாயம்!


சிறுபான்மையின மக்களுக்காக அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இதை பயன்படுத்தி முஸ்லிம் பெண்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று கலெக்டர் சகாயம் கூறினார். 

மதுரை ஓ.சி.பி.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறுபான்மையினர் தினவிழா நடைபெற்றது. விழாவில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்&2 வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற 12 மாணவ, மாணவிகளுக்கு ரூ.15,500 மதிப்பிலான காசோலைகள், உலமாக்கள் நலவாரிய உறுப்பினர் மகள்கள் 12 பேருக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.17ஆயிரம், திருமண உதவித்தொகை 2 பேருக்கு ரூ.4ஆயிரம், சமூக நலத்துறையின் மூலம் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 5 பேருக்கு ரூ.1.52 லட்சம் என மொத்தம் ரூ.1.88 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உ.சகாயம் வழங்கினார் அப்போது அவர் பேசியதாவது:&

சிறுபான்மையின மக்களுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மதுரை மாவட்டத்தில் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 2011& 2012ம் கல்வியாண்டில் 1முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகைக்காக 7,995 பேர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பிளஸ்&1 முதல் பட்டயப்படிப்பு மற்றும் தொழில் கல்வி மாணவ, மாணவிகளுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகைக்காக 1,771 பேரிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது.
தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் சிறுபான்மையினர் மகளிருக்கு தனிநபர் கடனாக 85 பேருக்கு விண்ணப்பங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. முஸ்லிம் மகளிர் உதவி சங்கங்கள் மூலம் ஆதரவற்ற முஸ்லிம் மகளிர் மற்றும் விதவை பெண்களுக்கு உதவித்தொகை, தொழிற்கடன், கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
உலமாக்கள் நல வாரியம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. பிரதமரின் புதிய 15 அம்ச திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் நலிவுற்ற சிறுபான்மையினரை உயர்த்த பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
இதுபோன்ற வாய்ப்புகளை சிறுபான்மையின மாணவ, மாணவிகள் பயன்படுத்துவதுடன் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு தேர்ச்சி பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும். முஸ்லிம் பெண்கள் கல்வியறிவில் சிறந்து விளங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் காமாட்சி கணேசன், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி சி.செல்வராஜ், ஐக்கிய ஜமாத் தலைவர் அஜிமுதின், அருட்தந்தை தாசைய்யன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

நெல்லிக்காய் தரும் இளமை:


இதில் முதலாவதான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிகிச்சை காயகற்பம் என அழைக்கப்படுகிறது. காயம் என்றால் உடல். கற்பம் என்றால் அழிவில்லாதது. நரை, திரை, மூப்பு அணுகாமல் என்றும் நோயணுகாமல் இளமையாக வைத்திருக்க உதவும் மூலிகைகளை காயகற்ப மூலிகை என்கிறோம். காயகற்ப மூலிகைகளில் மிக முக்கியமான இடத்தை பிடிப்பது நெல்லிக்காய்.
* நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது.
* நெல்லிக்காயில் வைட்டமின் “சி” வேறு எந்த வகை காய்கறி பழங்களிலும் இல்லாத அளவுக்கு 600 மில்லிகிராம் உள்ளது. கால்சியம் 50 மில்லிகிராம், பாஸ்பரஸ் – 20 மில்லிகிராம், இரும்புச் சத்து 1.2 மில்லிகிராம் உள்ளது. ஆப்பிள் பழத்தை விட இது அதிக சக்தி வாய்ந்தது.
* நெல்லிக்காய் ஈரலை தூண்டி, நன்கு செயல்பட வைத்து கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. ஜீரண சக்தியை அதிகரித்து, தாதுக்களை நம் உடல் ஏற்றுக் கொள்ள துணை புரிகிறது. கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது. தலைமுடி உதிராமல், வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது.
* நரம்பு மண்டலத்தை தூண்டி வேலை செய்கிறது. மூளை செல்களுக்கு புத்துணர்ச்சியளிப்பதால், மனத்தெளிவு, புத்திக்கூர்மை மற்றும் ஞாபசக்தி உண்டாகிறது. நுரையீரலை பலப்படுத்தி சுவாச நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது.
* உடல் எடையை கூட்டாமல் தசைகளுக்கு பலம் அளிக்கக் கூடிய தன்மை நெல்லிக்காய்க்கு உண்டு. நீரிழிவை கட்டுப்படுத்தும் சக்தியுள்ளது. மேலும் இதில் வைட்டமின் “சி” சத்து அதிகம் உள்ளதால் நோய்க்கு எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது.
* நெல்லிக்காய் கிடைக்காத காலங்களில் காய்ந்த நெல்லிக்காயை (நெல்லிமுள்ளி) பயன்படுத்தலாம். இதற்குரிய சக்தி காய்ந்த பின்னும் குறைவதில்லை.
எல்லா வயதினரும் இதை சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு நெல்லிக்காய் லேகியம் தினம் கொடுக்க சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதுடன், மூளை வளர்ச்சியும், புத்திக் கூர்மையும் ஏற்படும். ஆயுர்வேத சக்தி மருந்து நெல்லிக்காயால் தான் தயார் செய்யப்படுகிறது.

சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்


உலகின் மிகச் சிறந்த உணவாக சீன உணவே போற்றப்படுகிறது.இந்த உணவு முறையைப் பின்பற்றினால் நீண்ட நாள் வாழலாம். குறிப்பாக
1.கொழுத்த சரீரம் உருவாகாது.
2. இதய நோய்களுக்கான அறிகுறியே காணப்படாது.
இந்த இரண்டு தன்மைகளும் ஒருவரிடம் தொடர்ந்து இருந்தால் அவர் ஆரோக்கியமாக வாழலாம். ஆரோக்கியம் தொடர்வதால் வாழ்நாளும் நீடிக்கிறது. பிறநோய்கள் இருந்தாலும் எளிதில் அவற்றைக் குணப்படுத்தலாம்.
ஹாங்காங்கின் சீனப்பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் ஊகாம்ஸாங் என்பவர் தனது ஆய்வின் மூலம் இந்த உண்மையைக் கண்டுபிடித்துள்ளார்.
சரி. சீனர்கள் அப்படி என்னதான் சாப்பிடுகிறார்கள்?
பால் சேர்க்காத கிரீன் டீ யை நாலைந்து தடவை தினமும் அருந்துகின்றனர். நீராவியில் வேகவைத்த காய்கறிகள் மற்றும் சில நேரங்களில் காய்கறிகளை சிறிய அளவில் எண்ணெயில் வறுத்தும் சாப்பிடுகின்றனர்.
சோயா பீன்ஸ், தயிரையும் நிறையச் சேர்த்துக் கொள்கின்றனர்.
காலையில் முட்டை ஆம்லட் அல்லது கொத்துக்கறி சேர்த்துக் கொள்கின்றனர்.
இதில், இஞ்சி, வெள்ளைப் பூண்டு உட்பட மசாலா வகைகள் சேர்த்துவிடுகின்றனர்.
இதுவே காலை நேரத்திற்கும் பகல் உணவிற்கும் எற்ற ஒரே உணவாகும்.
மற்ற நேரமெல்லாம் நீராவியில் வேகவைத்த காய்கறிகளுடன் சோயா மற்றும தயிர் சேர்த்த சாதம் ஒரு முறையும், பச்சையான காய்கறிகளை ஒரு முறையும் சாப்பிடுகின்றனர்.
இவர்கள் அடிக்கடி விரும்பியும் போற்றியும் குடிப்பது கிரீன் டீதான். இது முதுமை அடைவதை தடுக்கும் தேநீர். மேலும் இந்தத் தேநீரில் இளமையை நீடிப்பதுடன் இதயத்துக்குப் பாதுகாப்பையும் வழங்கும் பாலிபெனால் என்ற சத்துப் பொருள் இருக்கிறது.
கிரீன் டீக்கும் நீராவியில் வேகவைத்த காய்கறிகளுக்கும் நீங்களும் முக்கியத்துவம் கொடுங்கள்.
உலகின் மிகச்சிறந்த இந்த உணவால் ஆரோக்கியம் தொடர்வது உறுதி.
உலக சுகாதார நிறுவனம் சிபாரிசு செய்துள்ள உணவுமுறை இது என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் 2000ஆம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள்

3 நவம்பர், 2011

கடாபியின் இறுதி தினங்களில், எங்கிருந்தார்? என்ன செய்தார்? என்ன சொன்னார்?

கடாபியின் இறுதி தினங்களில், எங்கிருந்தார்? என்ன செய்தார்? என்ன சொன்னார்?

கனிமொழி ஜாமீன் மனு சொதப்பியது யாரால்?


புதுடில்லி, இந்தியா: அனைத்து மட்டங்களிலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட கனிமொழி ஜாமீன் மனு இன்று (வியாழக்கிழமை) சற்று நேரத்துக்கு முன் நிராகரிக்கப்பட்டது. மனு நிராகரிக்கப்பட்டதுகூட பெரிய விஷயமல்ல, மனு நிராகரிக்கப்பட்ட காரணங்கள் என்று நீதிபதி தெரிவித்துள்ள காரணங்கள், இந்த வழக்கில் கனிமொழிக்கு எதிரான அஸ்திரங்களாக பதிவாகியுள்ளன.
இந்தக் காரணங்கள் கனிமொழி கேஸ் பைலில் பதிவாகியுள்ளதில் என்ன வில்லங்கம் உள்ளது? இருந்து பாருங்கள், பின்னாட்களில் கனிமொழியை இந்தக் குற்றச்சாட்டிலிருந்து வெளியே கொண்டுவர, இன்றைய பதிவு தடையாக இருக்கப் போகின்றன. நீதிபதியின் வேர்டிங், கனிமொழி மீதான குற்றச்சாட்டை முன்கூட்டியே கோர்ட் ஏற்றுக் கொள்ளும் ரகத்தில் உள்ளது!
இதற்கு, ஜாமீன் மனு செய்யாமலேயே இருந்திருக்கலாம்!
“கனிமொழியின் ஜாமீன் மனு, மூன்று காரணங்களின் அடிப்படையில் நிராகரிக்கப்படுகின்றது” என்று கூறிய சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி, “First of all, the crime committed was a deliberate offence; secondly, an economic offence and finally, very serious in nature.” என்று கூறியதை தமிழ்ப்படுத்தி அதன் ஃபுளோவை குறைக்க வேண்டாம்.
அப்படிக்கூறிய நீதிபதி, “குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் பொதுப் பணத்தை மிகக் கவனமான முறையில் தனது சொந்தப் பாவனைக்காக கவர்ந்து கொண்டுள்ளார்” என்றார்.
வழக்கே முடியுமுன் மேலே குறிப்பிட்ட வாக்கியம், கனிமொழியின் ரிக்கார்ட்களில் பதிவாகப் போகின்றது!
கனிமொழி ஜாமீன் மனுவை நிராகரித்து நீதிபதி வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்ட மற்றைய அதிரடி வாக்கியங்களையும் பாருங்கள்:
• “தற்போது இந்த கோர்ட் வழங்கியுள்ள தீர்ப்பு ‘எந்தவொரு வெளி அழுத்தம்’ காரணமாகவும் கூறப்படவில்லை. வழக்கிலுள்ள உண்மைகளையும், நிகழ்வுகளையும் மனதில் வைத்தே ஜாமீன் நிராகரிக்கப்படுகின்றது”
• “இவருக்கு ஜாமீன் கொடுப்பதை சி.பி.ஐ. எதிர்க்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் நீதியின் கண்களுக்கு முன், சி.பி.ஐ. மறுக்கவில்லை என்பதற்கு எந்த மதிப்பும் கொடுக்க முடியாது”
• “கனிமொழி சமூகத்தின் உயர்மட்டப் பெண்மணி என்பதாலோ, அவர் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதாலோ சட்டத்தின் கண்களுக்கு அவர் வேறு விதமாகத் தெரிவதில்லை. அவர் ஒரு பெண் என்பதால் இதில் டிஸ்கிரிமினேஷன் ஏதுமில்லை”
• “குற்றம் சாட்டவர்களுக்கு (கனிமொழி) உள்ள உரிமைகளை இந்த கோர்ட் மறுக்கவில்லை. ஆனால் அதேநேரத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு (கையாடப்பட்டது பொதுப்பணம் என்பதால், நீங்கள்.. நாங்கள்.. மக்கள்!) உள்ள உரிமை, கனிமொழிக்கு உள்ள உரிமைக்கு எந்த விதத்திலும் குறைந்தது அல்ல!
கடைசி வாக்கியத்தைச் சொன்னதற்காக,  நீதிபதி ஓ.பி.சைனிக்கு மரியாதைக்குரிய ஒரு சல்யூட்!