என்னை தொட்டவர்கள் !

7 அக்டோபர், 2010

விஷம கேள்விக்கு அறிவான வணங்காமுடி பதில்!

பாபர் மசூதி ஒன்றும் புனிதத்தலம் கிடையாதுதானே. இந்திய முஸ்லிம்களுக்கு மேலும் இழப்பு ஏற்படாமல் இருக்க வேண்டி அவர்கள் விட்டுக் கொடுத்தால் என்னவாம்? - ஜோதி, குத்தாலம்
பாபர்மசூதி புனிதத் தலமா இல்லையா என்பதை முஸ்லிம்கள் முடிவு செய்து கொள்வார்கள். ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்களின் வழிபாட்டுத்தலம் புனிதம்தான்.
முஸ்லிம்களுக்கு மேலும் இழப்பு ஏற்படாமல் இருக்க" என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது, பால்தாக்கரே, நரேந்திரமோடி ஸ்டைலில் உருவாகும் இழப்பா?
விட்டுக்கொடுப்பதா அல்லது போராடி மீட்பதா என்பது வழக்கில் தொடர்புடையவர்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயம்.
நமது தளத்தில் "ரஸ்ஸல் எழுதிய அலசலி"ல் சொல்லியுள்ளபடி, முஸ்லிகளுக்கு விட்டுக்கொடுத்து இந்துக்களின் பெருமையை உலகுக்கு உணர்த்தலாமே?