என்னை தொட்டவர்கள் !

6 நவம்பர், 2010

மும்பை வந்திறங்கினார் ஒபாமா!

அமெரிக்க அதிபர் ஒபாமா மூன்று நாள் பயணமாக சனிக்கிழமை பிற்பகல் 12.50 மணிக்கு மும்பை வந்திறங்கினார். ஒபாமாவுடன் அவரது மனைவி மிச்சேல், அமைச்சரவை சகாக்கள், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர், மற்றும் வணிகப் பிரமுகர்கள் 200 பேர் வந்துள்ளனர்.
அமெரிக்க விமானப்படை விமானமான ஏர் ஃபோர்ஸ் 1 விமானத்தில் வந்திறங்கிய ஒபாமாவையும் மற்றவர்களையும் மகாராஷ்டிர மாநில முதல்வர் அஷோக் சவான், மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் டிமோதி ரோமர் மற்றும் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கர் ஆகியோர் வரவேற்றனர்.
26/11 மும்பை தாக்குதல்களில் உயிர் இழந்தோருக்கு ஒபாமாவும் அவரது மனைவியும் அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்குப் பின் மும்பை தாஜ்மஹால் ஓட்டலில் தங்கும் மிக முக்கியப் புள்ளி ஒபாமா என்பது குறிப்பிடத் தக்கது.