என்னை தொட்டவர்கள் !

28 செப்டம்பர், 2011

முஸ்லிம் கூட்டமைப்புடன் கூட்டணி: திருமாவளவன்


சென்னை, செப்.28: முஸ்லிம்கள் கூட்டமைப்புடன் கூட்டணி வைத்து, இந்த உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கவுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
விடுதலைச் சிறுத்தைகள், மதுரை, நெல்லை, சேலம், வேலூர், தூத்துக்குடி, திருப்பூர் ஆகிய மாநகராட்சி மேயர் பதவிகளுக்குப் போட்டியிடும் என்று தெரிவித்தார். பாமக தனித்துப் போட்டியிடுவதாக ஏற்கெனவே அறிவித்து விட்டனர். எனவே நாங்கள் பாமகவுடன் கூட்டணிக்கு முயற்சி செய்யவில்லை. அதுபோல் மதிமுகவுடனும் கூட்டணிக்கு சில காரணங்களால் முயற்சி செய்யவில்லை என்றார் திருமாவளவன்.