என்னை தொட்டவர்கள் !

27 செப்டம்பர், 2011

முஸ்லிம்களின் குறைகள் விரைவில் சரிசெய்யப்படும் : மம்தா உத்திரவாதம்


மேற்கு வங்காளத்தில் முஸ்லிம்களின் குறைகள் விரைவில் சரிசெய்யப்படும் : மம்தா உத்திரவாதம் 

மம்தா பானர்ஜி முதலமைச்சராக பதவியேற்ற பின் முதல் முறையாக முஸ்லிம்கள் அடங்கிய குழுவை சந்தித்தார். அப்போது முஸ்லிம்கள் வைத்த கோரிக்கைகள் கல்வி, இட ஒதுக்கீடு மற்றும் வேலை வாய்ப்பு பற்றி இருந்தது. மேலும், அவர்கள் ராஜரட், டைமண்ட் ஹார்பர், கோனா எக்ஸ்பிரஸ், எல்.ஐ.ஜி மற்றும் எம்.ஐ.கி மனைகளில் முஸ்லிம் சமுதாயத்தினர் அமர்த்தப்பட வேண்டும் என்றும், மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு தனி அமைச்சர் ஏற்படுத்தப்பட்டால் தங்கள் குறைகளை எளிதில் சேர்க்க வசதியாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.

அதற்கு முதலமைச்சர் மம்தா, அமைச்சர் நூருல் ஹக்கின் செயலாளரை சந்திக்கும் படியும், மேலும் மாநில அமைச்சர் ஜாவித் அஹ்மத் கான் உங்கள் கோரிக்கைகள் பற்றி கையாள்வர் என்றும், தேர்தல் காரணமாக என்னால் எந்த வித முடிவும் எடுக்க இயலாது என்றும் தெரிவித்தார். அதேவேளையில் உங்கள் கோரிக்கைகளையும், குறைகளையும் வெகு விரைவில் சரிசெய்யப்படும் என்றும் உத்திரவாதம் கொடுத்தார்.