என்னை தொட்டவர்கள் !

4 மே, 2010

மைசூர் சிங்கம் திப்பு சுல்தான் (ரஹ்)!

சுதந்திர இந்தியாவின் ஒவொரு குடிமகனும் மறக் முடியாத மாவீரன் திப்பு சுல்தான் நினைவு தினம்ன்று. வெள்ளையனுக்கு சிம்ம சொப்பனமான இவரின் போர் முறை முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும் அந்த முறை எதிரியையும் வியக்க வைத்தது,இவர் காலத்தில் எல்லா சமையதினரையும் மதிக்கும் மன்னராக திகழ்ந்தார்.இவர் காலத்தில் தான் போரில் ராகெட் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டது. சில துரோகிகளால் காட்டி கொடுக்கப்பட்டு ஷஹீதானார் என்பது அனைவரும் அறிந்தது .இந்த மாவீரனின் தலைமுறை வழி உறவினர்கள் இன்றும் கல்கத்தாவில் டீ கடை நடத்துகிறார்கள், ரிக்க்ஷா இழுக்கின்றார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை!! மாவீரன் திப்பு சுல்தான் இறந்தும் வாழ்கின்றார்! இவர்களோ இல்லாமல் வாழ்கிறார்கள்!! எல்லாம் வல்ல அல்லாஹ் இவர்களின் வறுமையை போக்கவேண்டும் வாழ்வாதாரங்கள் சிறக்க கிருபை செய் வேண்டும் (இன்ஷா அல்லாஹ்)