என்னை தொட்டவர்கள் !

1 ஆகஸ்ட், 2011

பாக்., சிறையிலிருந்த இந்தியர்கள் விடுவிப்பு


பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி, இந்தியாவுக்கு வந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுடன் பேச்சு நடத்தினார். இதன்பின், இந்திய சிறைகளில் இருந்த பாகிஸ்தான் மீனவர்கள் 87 பேர் விடுவிக்கப் பட்டு, பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையடுத்து, நேற்று பாகிஸ்தான் சிறையில் இருந்த இந்தியர்கள் 240 பேர் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் 140 மீனவர்கள் கடந்த 15 மாதங்களாக கராச்சி சிறையில் அடைக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அனைவரும் வாகா எல்லை வழியாக இந்தியாவுக்குள் வந்து சேர்ந்தனர்.