என்னை தொட்டவர்கள் !

2 மார்ச், 2012

முஷாரஃப்பை கைது செய்ய பாகிஸ்தான் தீவிரம்!


முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப்பை கைது செய்து பாகிஸ்தானுக்குக் கொண்டு வருவதில் பாகிஸ்தான் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக அந்நாடு பன்னாட்டுக் காவல்துறையின் ஒத்துழைப்பை நாடியுள்ளது.
முஷாரஃப் தற்போது லண்டனில் வசித்து வருகிறார் என்பது அறிந்ததே. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் கொலைவழக்கில் முஷாரஃபை விசாரிக்க வகை செய்யும் விதமாக அவர் கைது செய்யப்படவுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபை கைது செய்ய செங்கூவல் (ரெட் அலர்ட்) பிறப்பிக்குமாறு சர்வதேச காவல்துறையான இண்ட்டர் போலை பாகிஸ்தான் அதிகாரிகள் கோரியுள்ளதாக இங்கிலாந்து செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பிரதமர் பெனாசிர் படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக அவரை திரும்பக் கொண்டுவர பாகிஸ்தான் முயன்று வருகிறது. முஷாரபை கைது செய்ய இன்டர்போலுக்கு  நேற்று முறைப்படியான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.