பாப்புலர் பிரண்ட் கட்சியினைச் சார்ந்த முஹம்மத் பஸல் கொலை செய்யப்பட்ட வழக்கில் மார்க்ஸிஸ்ட் கட்சியினரைச் சார்ந்த மூவரை மத்திய புலனாய்வுக்குழு கைது செய்துள்ளது.
பாப்புலர் பிரண்ட் கட்சியின் தளச்சேரி தலைவராக 2006 ஆம் ஆண்டு பஸல் இருந்து வந்தார். அப்போது இந்தக் கட்சி தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் செயல்பட்டு வந்தது. பஸல் மார்க்ஸிஸ்ட் கட்சியில் இருந்து விலகி பாப்புலர் பிரண்ட் கட்சியில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்க்ஸிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்களை பாப்புலர் பிரண்டில் சேருமாறு அவர் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீது கோபம் கொண்ட அருண்தாஸ், காலேஷ் மற்றும் அருண்குமார் ஆகியோர் பஸலைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பஸலை இம் மூவரும் கொலை செய்துள்ளனர். தற்போது இம்மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரையும் மார்ச் 29 வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மார்க்ஸிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்களை பாப்புலர் பிரண்டில் சேருமாறு அவர் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீது கோபம் கொண்ட அருண்தாஸ், காலேஷ் மற்றும் அருண்குமார் ஆகியோர் பஸலைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பஸலை இம் மூவரும் கொலை செய்துள்ளனர். தற்போது இம்மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரையும் மார்ச் 29 வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.