என்னை தொட்டவர்கள் !

25 மார்ச், 2012

வக்ப் போர்டு தலைவர் நியமனம் எப்போது?


ஆட்சி மாற்றங்கள் நிகழும் போது முந்தைய அரசால் நியமிக்கப் பட்ட வாரியத் தலைவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் எனப் பலரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விடுவது வழக்கம். அது போன்றே முந்தைய திமுக அரசால் வக்பு போர்டு தலைவராக நியமிக்கப் பட்ட கவிக்கோ அப்துல் ரஹ்மானும்  தம் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
எனினும் வக்பு போர்டுக்கு இதுவரை புதிய தலைவர் நியமிக்கப் பட வில்லை. தலைவர் இல்லாத நிலையிலேதான் வக்பு போர்டு இது வரை செயல் பட்டு வருகிறது. வக்பு போர்டு தலைவர் பதவி மனிதநேய மக்கள் கட்சிக்கு வழங்கப் படும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் மனித நேய மக்கள் கட்சியும் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி விட்டது.
கவிக்கோ அப்துல் ரஹ்மான் ராஜினாமா செய்து விட்ட நிலையில் அவரது பெயர் இன்னும் வக்ப் போர்டு இணைய தளத்தில் இருந்து நீக்கப் பட வில்லை. தமிழக அரசு இனி மேலும் காலம் தாழ்த்தாமல் இஸ்லாமிய மக்களின் சொத்துக்களைப் பராமரிக்கும் வக்ப் போர்டுக்கு உடனடியாக சேர்மன் நியமிக்கப் பட வேண்டும் என்று முஸ்லிம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.